நயன் தாரா குறித்த சர்ச்சை பேச்சுக்கு சி.வி.சண்முகம் மீது கண்டனங்கள் வலுத்துவரும் நிலையில், பெண்களின் உடை குறித்து திண்டுக்கல் சீனிவாசன் பேசிய பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் திமுக அரசை கண்டித்து அதிமுக தலைமையில் தே.ஜ. கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுக பொருளாளரும், சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் பாஜக மாநில செயலாளர் ராம சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். அப்போது பேசிய திண்டுக்கல் சீனிவாசன், மோசமான, கேவலமான ஒரு ஆட்சி இன்னும் 30 முதல் 45 நாட்கள் இருக்கும் ஓட்டு எண்ணிக்கை முடிந்த அடுத்த நாள் தமிழகத்தின் NDA கூட்டணியில் தலைமை பொறுப்பேற்று இருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சர் பொறுப்பு ஏற்கின்ற பொழுது அத்தனை பீடையும் அத்தனை சனியனும் தொலைந்து போய்விடும்.
தூத்துக்குடி சகோதரிக்கு நடந்த கொடுமையை கேட்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் தங்கை கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் சென்றபோது வெளியே செல்லுங்கள் என்று கூறி முதலமைச்சரின் தங்கையை வெளியேற்றுகின்றனர். இந்த ஆட்சி கேவலமானது என்பதற்கு தூத்துக்குடியில் இருந்து கனிமொழி மற்றும் அமைச்சர் கீதா ஜீவனை வெளியேற்றியதே சாட்சி என்றார்.
மேலும், சிறிய பள்ளிக்கூடம் படிக்கும் பிள்ளைகளுக்கும் மிட்டாயில் கஞ்சாவை கடத்தி அதில் வைத்து விற்கின்றனர். இதற்கு எதிராகவே தற்போது இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி தனியாக நின்றார்கள். நாங்களும் தனியாக நின்றோம். தற்போது பிஜேபி அதிமுக என எங்களுடன் கூட்டணிகள் இருந்த கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்ததால் கருத்துக்கணிப்பில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 50% வந்திருக்கிறது. திமுகவிற்கு 42 முதல் 42 சதவீதமே வந்துள்ளது. இதனால் அதிமுக கூட்டணிக்கு எழுதப்பட்ட வெற்றியாக உள்ளது என்று மக்கள் கூறிவிட்டனர்.
192 சட்டமன்ற தொகுதிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார் ஆனால் முதல்வர் ஒரு இடத்திற்காவது சென்றிருப்பாரா என்றால் கிடையாது. ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்பது போல் அரசு பணத்தை எடுத்து பெரிய பெரிய ஊர்வலம், மாநாடு நடத்தி செலவழித்துக் கொண்டிருக்கிறார்.
அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பது போல் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வீழ்ச்சி ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு பூத்திலும் எச்சரிக்கையாக இருங்கள் அப்பொழுதுதான் வெற்றி பெற முடியும் இல்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது.
திமுக எங்கு பார்த்தாலும் சிலிண்டர் கிடைக்கவில்லை என போராடி வருகின்றனர். சிலிண்டர் கிடைக்காததற்கு மோடி அய்யா – வா காரணம்? ஈரான் மற்றும் உலக நாடுகளை தான் கேட்க வேண்டும்.
உலக நாடுகள் அடித்துக் கொள்கிறார்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். இன்று புத்திசாலித்தனமாக ஜனநாயக முறைப்படி அறிவோடு அத்தனை வெளிநாடுகளிடம் பேசி LPG சிலிண்டர்களை அமைதியாக கொண்டு வந்து சேர்த்த உத்தமர் நரேந்திர மோடி ஜி.
நரேந்திர மோடி அவர்களின் சாணக்கியத்தனத்தினால் பெட்ரோல் டீசல் கேஸ் எதுவும் பிரச்சனை இன்றி கிடைத்து வருகிறது. நான்கு வருடம் 11 மாதம் எந்தவித ஊழல் குற்றச்சாட்டு இல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி ஆண்டு வந்தார். ஜெயலலிதா அவர்கள் மற்றும் கருணாநிதி அவர்கள் இருக்கும்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக கூட திமுகவால் வர முடியவில்லை. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். எம்ஜிஆர் ஆட்சி ஜெயலலிதா ஆசியுடன் பாமக கூட்டணியுடன் 75 எம்எல்ஏக்களுடன் எதிர்க்கட்சியாக இருந்த வருகிறோம்.
தற்போது திமுக நூறு ரூபாய் மதிப்புள்ள ஹாட் பாக்ஸ் கொடுத்துள்ளது. மேலும் சேலை கொடுத்துள்ளனர். பாவாடை இல்லாமல் எப்படி கட்டுவது என பெண்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.
திமுக – பாஜகவின் வாஜ்பாயுடன் கூட்டணி வைக்கும் பொழுது சரியான கூட்டணி என்றும் தற்போது அதிமுக – பாஜக வைத்துள்ள கூட்டணியை மோசமானது மற்றும் மூழ்கின்ற கப்பல் என முதலமைச்சர் கூறுகிறார். எந்தக் கப்பல் மூழ்கினாலும் அதனை வெளியே எடுத்து வருகின்ற நீர் மூழ்கிக் கப்பல் அதிமுக.
ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் கோ பேக் என மோடி அவர்களை கூறினார்கள் ஆனால் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்ற போது காலில் விழுந்து பதவி ஏற்று வைக்க கோரியவர்கள் தான் திமுகவினர். மோடி அரசு 11 லட்சம் கோடி திமுக விற்கு கொடுத்துள்ளது. ஆனால் காங்கிரஸ் இருந்த போது மூன்றில் ஒரு பங்கு கூட நிதியாக கொடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

