Close Menu
    What's Hot

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்
    தமிழ்நாடு

    இனி ஹெலிகாப்டரில் NEET வினாத்தாள்கள்… நெல்லையில் நடந்த சோதனை ஓட்டம்

    Editor web2By Editor web2June 16, 2026Updated:June 16, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    NEET Helicopter
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவை தவிர்க்கும் வண்ணம் ஹெலிப்டர் மூலம் வினாத்தாள் கொண்டு வரும் சோதனை நெல்லையில் நடைபெற்றது

    நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் (NEET) தேர்வுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் வினாத்தாள்களை கொண்டு வரும் நடைமுறைக்கான சோதனை ஓட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது.

    கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பான சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்வு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த மத்திய மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தேர்வு வினாத்தாள்களை விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் நடைமுறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி, சென்னை பகுதியில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை புறப்பட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள காவல்துறை ஆயுதப்படை மைதானத்தை வந்தடைந்தது. நீட் தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாள்கள் கொண்டு வரப்படும் சூழலை முன்மாதிரியாக கொண்டு அதிகாரிகள் இந்த சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர்.

    ஹெலிகாப்டர் ஆயுதப்படை மைதானத்தில் சுமார் இரண்டு நிமிடங்கள் தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள், தரையிறங்கும் வசதி, பாதுகாப்பு வளையம், வாகன போக்குவரத்து ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் ஹெலிகாப்டர் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.

    சோதனை ஓட்டத்தின்போது காவல்துறை மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தனர். தேர்வு நாளில் வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு வந்து, தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்தில் அனுப்புவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

    நீட் தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கவும், வினாத்தாள்களின் ரகசியத்தன்மையை முழுமையாக உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

    ஹெலிகாப்டர் திடீரென பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தரையிறங்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் ஹெலிகாப்டரை பார்வையிட்டனர்.

    AtmanirbharBharat DRDO HELICOPTER IndianDefence MissileDefense NEET NEET QUESTION PAPER
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமருது சகோதரர்களின் ஜம்புத்தீவு பிரகடன நாள்; ஆளுநர் அர்லேகர் நினைவூட்டல்
    Next Article “ஆம்னி பேருந்து கட்டண கொள்ளையைத் தடுக்க மனமில்லையா?” அரசை விளாசிய நீதிமன்றம்
    Editor web2
    • Website

    Related Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    June 16, 2026

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    June 16, 2026

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    June 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை  அறிக்கை ஒரு ‘ஃப்ளாப் ஷோ’… தங்கம் தென்னரசு விளாசல்

    தமிழகத்தின் கழுத்தை நெரிக்கும் 6 நிதி நெருக்கடிகள்… வெள்ளை அறிக்கை தரும் பகீர் எச்சரிக்கை!

    இட ஒதுக்கீடு உயர்வு கோரிக்கையை  தவறாகச் சித்தரிப்பதா? பாஜகவுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம்

    தமிழ்நாட்டின் நிதி நிலைமை: வெள்ளை அறிக்கை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரியவில்சன்

    யாருக்கு யார் பாடம் நடத்துவது?  ஜெயக்குமார் Vs ஜோசப் விஜய்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.