Close Menu
    What's Hot

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார்.. விசாரணையை தொடங்கினார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!
    தமிழ்நாடு

    காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார்.. விசாரணையை தொடங்கினார் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!

    Editor TN TalksBy Editor TN TalksJuly 2, 2025Updated:July 2, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    IMG 20250702 WA0001
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் காவலாளியாகப் பணிபுரிந்த 27 வயதான அஜித்குமார், போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்றக் கிளை,

    மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த அஜித்குமார், கடந்த ஜூன் 27-ஆம் தேதி கோவில் வந்த ஒரு பெண்ணின் காரில் இருந்து 10 பவுன் நகைகள் காணாமல் போனது தொடர்பாக சந்தேகிக்கப்பட்டார். திருப்புவனம் போலீசார் அவரை விசாரித்தபோது, அவரது சகோதரர் நவீன் மற்றும் ஆட்டோ டிரைவர் அருண் ஆகியோரையும் விசாரித்துள்ளனர். விசாரணையின்போது அஜித்குமார் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு, மிளகாய்ப் பொடி தூவி சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

    விசாரணை மற்றும் வழக்குப்பதிவு:

    அஜித்குமார் உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தில் காவல்துறையைக் கண்டித்து போராட்டம் நடத்தின. இதைத் தொடர்ந்து, மடப்புரம் போலீசார் ராஜா, சங்கரமணிகண்டன், பிரபு, ஆனந்த், கண்ணன் ஆகிய 5 பேரைக் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஸ்ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார், துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகசுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    மருத்துவ பரிசோதனையில் அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் கடுமையான காயங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும், முக்கியப் பிரமுகர் ஒருவரின் உத்தரவின் பேரில் அஜித்குமார் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும் மருத்துவ பரிசோதனையில் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைப்பதாக உத்தரவிட்டுள்ளார்.

     

    உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவு:

     

    இந்த வழக்கு தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளையில் திருப்புவனம் அண்ணாநகரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா மற்றும் அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் மாரீஸ்குமார் உள்ளிட்ட 5 பேர் தனித்தனியே மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.

     

    விசாரணையின்போது, நீதிபதிகள் காவல்துறையிடம் அடுக்கடுக்கான கேள்விகளைக் கேட்டனர். “இந்த வழக்கு விசாரணையை சிறப்பு படையிடம் ஒப்படைத்தது யார்? காவலாளி அஜித்குமாரை 2 நாட்கள் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல போலீசாருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை உடனடியாக காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பியது ஏன்? பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே மக்களை தாக்கலாமா? சீருடையால் கிடைக்கும் அதிகாரம் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக தான் என்பதை போலீசார் ஏன் கருத்தில் கொள்ளவில்லை?” என்று கேள்வி எழுப்பினர்.

    மேலும், மனுதாரர்கள் தாக்கல் செய்த வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும், சட்ட விரோத காவல் மரணம் அடிப்படை உரிமைக்கு எதிரானது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். திருப்புவனம் நீதித்துறை நடுவர் விசாரணை அறிக்கை, மடப்புரம் கோவில் செயல் அலுவலர் வீடியோ பதிவு, மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டீன் சமர்ப்பித்துள்ள அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை உடனடியாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

     

    பிரேத பரிசோதனை அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள், “உடலில் ஒரு இடம் கூட விடாமல் அடித்துள்ளனர். மிளகாய் பொடி தூவி வெறித்தனமாக தாக்கியுள்ளனர். ஒருவரைக் கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள் கூட இந்த அளவுக்கு தாக்கியிருக்க மாட்டார்கள். இதனை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பதாகவே போலீசார் இப்படி ஒருவரை தாக்கலாமா? இந்த சம்பவத்தை இயக்க உத்தரவிட்டது யார்?” என்று மீண்டும் கேள்வி எழுப்பினர்.

     

    இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை மதுரை 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷிடம் ஒப்படைக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர் அஜித்குமார் மரண வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை சிவகங்கை மாவட்ட போலீசார் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும், விசாரணை அறிக்கையை ஜூலை 8-ஆம் தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

     

    மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் உடனடியாக அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணையை இன்று தொடங்கியுள்ளார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிவகங்கை மாவட்ட போலீசிடம் இருந்து இன்று காலை நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும், சம்பவ இடங்களான அஜித்குமார் தாக்கப்பட்ட போலீஸ் நிலையம் மற்றும் கோவில் வளாகப் பகுதிகளையும் நீதிபதி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். கோவில் ஊழியர்கள், அஜித்குமாரின் உறவினர்கள் மற்றும் திருப்புவனம் போலீசார் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    Ajithkumar death Ajithkumar murder CBI investigation Custodial death Human Rights Judicial inquiry Madurai High Court Police brutality Sivaganga Tamil Nadu Police அஜித்குமார் கொலை அஜித்குமார் மரணம் காவல் மரணம் காவல்துறை அராஜகம் சிபிஐ விசாரணை சிவகங்கை தமிழ்நாடு காவல்துறை நீதித்துறை விசாரணை மதுரை உயர் நீதிமன்றம் மனித உரிமைகள்
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிமானப்படை ஓடுதளத்தை விற்ற தாய்-மகன்… சினிமா பாணியில் பஞ்சாப்பில்…
    Next Article கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணத்திற்கும் சம்பந்தம் இல்லை… மத்திய சுகாதாரத்துறை விளக்கம்…
    Editor TN Talks

    Related Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    Trending Posts

    சட்டப்பேரவையில் முக்கிய இன்று மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு

    October 15, 2025

    சீமான் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

    October 14, 2025

    பரப்பரப்பாகும் சட்டப்பேரவை – அதிமுக உறுப்பினர்களுடன் எடப்பாடி ஆலோசனை

    October 14, 2025

    பரபரப்பான சூழலில் சட்டசபை கூட்டம் தொடங்கியது – முதல் நாளில் இரங்கல் தீர்மானம்

    October 14, 2025

    சிபிஐ விசாரணைக்கு உத்தரவு; “நீதி வெல்லும்” – தவெக தலைவர் விஜய் பதிவு!

    October 13, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.