“கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் மோடி பேசியதால் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எக்ஸ் தள பதிவில், “கோவிட் காலத்தைப் போல” என பிரதமர் மோடி பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.

பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளர்கள் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தீவிர நடவடிக்கைகள் மூலம் இவற்றுக்குத் தீர்வு காண வேண்டிய ஒன்றிய பா.ஜ.க. அரசு இதில் இருந்து செய்திகளைத் திசைதிருப்புவதற்காகவே தொகுதி மறுவரையறை திரைக்கதையை தற்போது கையிலெடுத்துள்ளது.

பாஜக ஜாடிக்கு ஏற்ற மூடியாக, மக்கள் பிரச்சினையை மறந்தும் பேசமாட்டோம் எனத் தங்களுக்குத் தாங்களே வாய்ப்பூட்டு போட்டுக்கொண்டுள்ள அதிமுகவோ, மாநில அரசு என்ன செய்கிறது எனக் கேட்கிறார்கள்.

சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது?

மாநில அரசு தன்னால் இயன்ற அத்தனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. “இத்தனைக்கும் பொறுப்பான மத்திய பாஜக அரசு என்ன செய்கிறது?” என்பதே மக்கள் முன்வைக்கும் கேள்வி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version