Close Menu
    What's Hot

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    டெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»காவலர்களால் தள்ளிவிடப்பட்டதால் மூதாட்டி உயிரிழந்த வழக்கு
    தமிழ்நாடு

    காவலர்களால் தள்ளிவிடப்பட்டதால் மூதாட்டி உயிரிழந்த வழக்கு

    Editor TN TalksBy Editor TN TalksAugust 1, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    1370537
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கன்னியாகுமரி மாவட்டம் கடுகுவிளை கிராமத்தைச் சேர்ந்த அல்போன்சாள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “எனது தாயார் சூசைமரியாள். கடந்த ஜூலை 29ஆம் தேதி காலை 5 மணி அளவில் நான்கு காவலர்கள், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி, எனது அண்ணியின் மகன் சாகித் ஜெட்லியை விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    அவனை வலுக்கட்டாயமாக தாக்கி இழுத்துச் சென்ற நிலையில், எனது தாயாரும் சாகித்தின் தாயாரும் விட்டுவிடுமாறு கெஞ்சியுள்ளனர். அப்போது என் தாயாரை காவலர்கள் தள்ளிவிட்டு காலால் தாக்கியுள்ளனர். இதனால் கீழே விழந்ததில், நினைவின்றி, அசைவற்றுக் கிடந்த எனது தாயாரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. காவல்துறையை சேர்ந்தவர்கள் தள்ளிவிட்டு காலால் தாக்கியதே எனது தாயார் உயிரிழக்க காரணம்.

    ஆகவே இதில் தொடர்புடைய அனைத்து காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்வதோடு, எனது தாயாரின் மரணம்க் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யவும், இடைக்கால நிவாரணம் வழங்கவும், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, “இன்றே உயிரிழந்த சூசைமரியாளின் உடலை முறையாக உடற்கூறு ஆய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் செய்யவும் உத்தரவிட்டார். மேலும் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின் சூசை மரியாளின் உடலை பெற்றுக்கொள்ள மனுதாரருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநேற்று திருவள்ளூர்…. இன்று திருத்தணி: அச்சத்தில் பெண் குழந்தைகள்..
    Next Article மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பேராசிரியர் நியமன வழக்கு.
    Editor TN Talks

    Related Posts

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    June 1, 2026

    டெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!

    June 1, 2026

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    June 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சிங்கப்பெண் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்? பெண் பாதுகாப்பில் அரசு தோல்வி: டிடிவி தினகரன் சாடல்..!!

    டெல்லி ராஜ்யசபா எம்.பி. தேர்தல்: 255வது முறையாக சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்புமனு தாக்கல்..!!

    6 மாசம்னு சொன்னாங்க.. ஆனா 6 நாள் கூட அமைதியா இல்ல..!! திருச்சியில் முதல்வர் விஜய் ‘தெறி’ பேச்சு..!!

    முழு டிஜிட்டல் மயம்.. தொடங்கியாச்சு மக்கள்தொகை கணக்கெடுப்பு..!! தமிழ்நாட்டில் எப்போ தெரியுமா..??

    துரதிஷ்டவசமாக உதயசூரியனில் போட்டி.. அதனால்தான் இப்படி..!! துரை வைகோ ஓபன் டாக்..!!

    Trending Posts

    காவி உடையில் திருவள்ளுவர்!. ஆர்.என். ரவி போட்ட ட்வீட்டால் புதிய சர்ச்சை!

    June 1, 2026

    இந்தியாவில் 30 நாட்களில் ரூ.10 லட்சம் செலவு செய்த அமெரிக்க தம்பதி!. வைரல் பதிவு!

    June 1, 2026

     அண்ணாமலையின் அடுத்த மெகா பிளான்?. நாளை மறுநாள் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

    June 1, 2026

    நடிகர் மாதவன் பிறந்தநாள்!. ஜி.டி.என் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு!

    June 1, 2026

    ”அதிமுக ஒன்றிணைய வேண்டும்”!. மீண்டும் ஒரு ஜென்மம் இருந்தால்..வீடியோ வெளியிட்டு நிர்வாகி தற்கொலை!

    June 1, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.