Close Menu
    What's Hot

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»போலாம் ரைட் – அரசுப் பேருந்தை இயக்கிய மனநலம் பாதித்தவர் – அலறியடித்த பயணிகள்
    தமிழ்நாடு

    போலாம் ரைட் – அரசுப் பேருந்தை இயக்கிய மனநலம் பாதித்தவர் – அலறியடித்த பயணிகள்

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 BUS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மனநலம் பாதித்தவரின் செயலால் பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர்.

    திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து ஆனந்தூர் செல்ல வேண்டிய நகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த ஓட்டுநரும் நடத்துநரும், அடுத்த ஷிப்ட் ஊழியர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்காகப் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்றனர்.

    அந்தச் சமயம் பேருந்துக்குள் ஏறிய மர்ம நபர் ஒருவர், திடீரென ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கியுள்ளார்.

    பேருந்து நகரத் தொடங்கியதும், “யாரோ இயக்கத் தெரியாத நபர் பேருந்தை ஓட்டுகிறார்” என்பதை உணர்ந்த பயணிகள், அச்சத்தில் அலறியுள்ளனர்.

    பேருந்து சுமார் 10 அடி தூரம் செல்வதற்குள்ளேயே, உள்ளே இருந்த ஐந்து பயணிகள் தங்களது உயிரைக் காத்துக்கொள்ள பேருந்திலிருந்து கீழே குதித்து ஓட்டம் பிடித்தனர்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த ஓட்டுநர் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக பேருந்துக்குள் ஏறி, அதனை நிறுத்தி,  அந்த நபரைச் சூழ்ந்து பிடித்து, திருவாடானை காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    திருவாடானை அருகே உள்ள நத்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்னும் அந்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரது உறவினர்களை வரவழைத்து, அவரைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    “பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே இந்தச் சம்பவம் நடந்ததால் பயணிகள் காயமின்றித் தப்பினர். ஒருவேளை பேருந்து நிலையத்தை விட்டு வெளியே சாலைக்குச் சென்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்” என அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கோட்டையனுக்கு புதிய பதவி?. விஜய்யின் மாஸ்டர் பிளான்!
    Next Article சிஎஸ்கே-வில் அதிரடி மாற்றம்!. புதிதாக களமிறங்கும் 21 வயது இளம் ஆல்-ரவுண்டர்?
    Editor TN Talks

    Related Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    April 28, 2026

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    April 28, 2026

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    April 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    16 பதவிகளுக்கு 115 பேர் போட்டி – நாளை நடக்கிறது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தல்

    நண்பனின் மனைவியுடன் தகாத உறவு – கெமிக்கல் இன்ஜினியரின் உயிர்பறிப்பு

    மீண்டும் முதலமைச்சராக வேண்டும் மு.க.ஸ்டாலின் – மண் சோறு உண்ணும் தெய்வீக பக்தர்கள் பேரவை

    பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா மறைவு – அன்புமணி இராமதாஸ் இரங்கல்

    “நம்பிக்கை இருந்தால் அற்புதங்கள் நடக்கும்” – ‘கருப்பு’ இசை விழாவில் சூர்யா

    Trending Posts

    மே 8-ல் ரிலீசாகிறதா ஜனநாயகன்? புதிய தகவலால் ரசிகர்கள் குழப்பம்..!

    April 28, 2026

    EVM மெஷின்கள் பாதுகாப்பாக இருக்கிறதா?. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த செல்வப்பெருந்தகை!. 

    April 28, 2026

    மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

    April 28, 2026

    புழுக்களாய் நெளிந்து கொண்டிருந்தவர்களை புலியாக மாற்றியவர் தேனிசை செல்லப்பா – சீமான் இரங்கல்

    April 28, 2026

    கடைசி படத்தில் ‘கமாண்டோ உடையில் அசத்திய ரோபோ சங்கர்!. குடும்பத்தினர் உருக்கம்!.

    April 28, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.