மூக வலைத்தளங்கள் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, ஆபாசப் படங்கள் எடுத்து மிரட்டிப் பணம் பறித்த வழக்கில், நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இன்று உறுதி செய்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி என்ற இளைஞர், சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பெண்களிடம் பழகி, அவர்களை ஏமாற்றித் தவறான முறையில் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளார். பின்னர் அவற்றை இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகக் கடந்த 2020-ஆம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவரது மடிக்கணினியிலிருந்து 1,900 ஆபாசப் புகைப்படங்களும், 400 வீடியோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம், கடந்த 2023 ஜூன் மாதம் காசிக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்தது. இத்தீர்ப்பை எதிர்த்துக் காசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கீழ் நீதிமன்றத்தின் வாழ்நாள் சிறை தண்டனைத் தீர்ப்பை அப்படியே உறுதி செய்து உத்தரவிட்டது.

மேலும், இத்தீர்ப்பின் போது நீதிபதிகள், இணைய உலகில் பெண்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்வதில் மிகுந்த விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று மிக முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version