Author: Editor web2
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (ஜூலை 16) மற்றும் நாளை (ஜூலை 17) வெப்ப அலை நிலை நீடிக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி சமவெளிப் பகுதிகள், திருநெல்வேலி சமவெளிப் பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை (ஜூலை 17) கரூர், ஈரோடு, தூத்துக்குடி சமவெளிப் பகுதிகள் மற்றும் திருநெல்வேலி சமவெளிப் பகுதிகளில் வெப்ப அலை நிலை தொடர வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை 16 மற்றும் 17 ஆகிய இரு நாட்களிலும் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையுடன் அதிக ஈரப்பதமும் நிலவக்கூடும். இதனால் பொதுமக்களுக்கு வெப்பம் மற்றும் புழுக்கம்…
கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான முக்கிய தகவல்கள் இணையத் தாக்குதல் மூலம் கசிந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் கட்டமைப்பு, உபகரணங்கள் வழங்குநர்கள், காப்பீடு உள்ளிட்ட முக்கிய தரவுகள் இணையத் தாக்குதலின் மூலம் திருடப்பட்டு டார்க் வெப்பில் (Dark Web) கசிந்திருப்பதாக வெளியான தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்த தகவல் திருட்டை, அணுமின் நிலைய வடிவமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நிறுவனமும் உறுதிப்படுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் விவகாரத்தின் தீவிரத்தை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தத் தரவுகள் தவறான கைகளுக்குச் சென்றால் தேசிய பாதுகாப்பு மற்றும் முக்கிய கட்டமைப்புகளுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டிலும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்தது பின்னர் உறுதி செய்யப்பட்டதை…
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகளைத் தொடங்குவது தொடர்பான வழக்கில், தமிழக அரசு கோரிய 12 வார கால அவகாசத்தை நிராகரித்த உச்ச நீதிமன்றம், இன்னும் 3 வார காலத்திற்குள் இது குறித்து அரசு தனது இறுதி முடிவை எடுத்து உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு இந்த முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதிக்குள் தமிழக அரசிடமிருந்து நவோதயா பள்ளிகளைத் தொடங்குவது குறித்து முறையான விளக்கத்தை எதிர்பார்ப்பதாக நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டிலேயே, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை, கிராமப்புற மற்றும் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளைத் தொடங்க நிலம் ஒதுக்கி அனுமதி அளிக்குமாறு அப்போதைய தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை…
மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு மற்றும் குடும்ப பராமரிப்பு விடுப்பில் இருந்த ஊழியர்களை செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் பணிநீக்கத்திற்கு தேர்வு செய்ததாகக் குற்றம்சாட்டி, மெட்டா நிறுவனத்தின் 26 ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். கடந்த மே மாதத்தில், தனது பணியாளர்களில் சுமார் 10 சதவீதம் பேரை (சுமார் 8,000 பேர்) பணிநீக்கம் செய்யப்போவதாக மெட்டா அறிவித்திருந்தது. இந்த பணிநீக்கத்திற்காக AI அமைப்புகள், விசைப்பலகை (keystroke) செயல்பாடு, ஊழியர் செயல்திறன் தரவுகள் மற்றும் அல்காரிதம் அடிப்படையிலான மதிப்பீடுகள் பயன்படுத்தப்பட்டதாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. மருத்துவ விடுப்பு, மகப்பேறு விடுப்பு அல்லது குடும்ப விடுப்பில் இருந்த ஊழியர்களின் செயல்திறன் இயல்பாகவே குறைவாகப் பதிவாகும் நிலையில், அந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் பணிநீக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டதாக மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வழக்குத் தொடர்ந்துள்ள 26 பேரும் மருத்துவ காரணங்கள் அல்லது குடும்ப காரணங்களுக்காக சட்டப்பூர்வ விடுப்பு எடுத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பலர் மகப்பேறு மற்றும்…
ரூ.14.79 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்ட சென்னை பூங்கா அமிர்த் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 17-ஆம் தேதி காணொளி வாயிலாக திறந்து வைக்கிறார். நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 75 அமிர்த் ரயில் நிலையங்களை ஒரே நேரத்தில் நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக இந்தத் திறப்பு விழா நடைபெறுகிறது. சென்னை கடற்கரை–செங்கல்பட்டு புறநகர் ரயில் பாதையில் அமைந்துள்ள இந்த நிலையம், சென்னை சென்ட்ரல், எம்.ஆர்.டி.எஸ். (MRTS) மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை ஒருங்கிணைக்கும் முக்கிய பல்முனை போக்குவரத்து மையமாக விளங்குகிறது. தினமும் சுமார் 198 புறநகர் ரயில்களும், 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளும் இந்த நிலையத்தை பயன்படுத்துகின்றனர். மறுசீரமைப்பின் மூலம் புதிய நுழைவுவாயில், அடையாளக் கோபுரம், நவீன தகவல் பலகைகள், சீரமைக்கப்பட்ட நடைமேடைகள், பயணச்சீட்டு முன்பதிவு மையம், கூடுதல் மேற்கூரைகள், இரண்டு மின்தூக்கிகள், MRTS மற்றும் மெட்ரோவை நேரடியாக இணைக்கும் நடைபாதைகள் உள்ளிட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள்…
தமிழகத்தில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடைமுறையில் உள்ள 7.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை மேலும் உயர்த்துவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த 7.5% உள் இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் மூலம், நீட் (NEET) தேர்வில் தேர்ச்சி பெறும் அரசுப் பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, நூற்றுக்கணக்கான ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகளின் அரசு மருத்துவராகும் கனவு நனவாகியுள்ளது. இந்த நிலையில், ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டி ஏற்கனவே அரசுக்கு வழங்கியிருந்த பரிந்துரையில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் வரை இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம் என தெரிவித்திருந்தது. மேலும் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இட ஒதுக்கீட்டின் சாதக பாதகங்களை ஆய்வு செய்து, இட…
தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் விலைக்கு வாங்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டம் அங்கனூரில் தனது தந்தை தொல்காப்பியரின் நினைவு நாளையொட்டி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ”மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாப்பதில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு உறுதியாக உள்ளது என நம்புகிறோம். தமிழ்நாடு அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைவதாக முடிவு எடுத்தால், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. நாகர்கோவிலில் நடந்துள்ள கைதி சபரிவர்மனின் உயிரிழப்பு பெரும் துயரமானது. உடல்கூறாய்வு அறிக்கை அவரது உடம்பில் காயங்கள் இருந்தன என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சபரிவர்மனின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் மாறி மாறி சட்டமன்ற உறுப்பினர்கள் விலை பேசப்படுகிறார்கள் அல்லது விலைக்கு வாங்கப்படுகிறார்கள் எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஜனநாயகத்திற்கு…
அரசு நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாகப் பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அ|றிக்கையில், “அரசின் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயமாகப் பாடப்பட வேண்டுமென ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இது மதச்சார்பின்மையை அடிநாதமாகக் கொண்டு, பன்மைத்துவத்தை நாட்டின் அடையாளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானதாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன். 1882ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டு வெளியிடப்பட்ட ‘ஆனந்தமடம்’ புதினத்தின் மூலம் புகழ்பெற்ற ‘வந்தே மாதரம்’ பாடல் நாட்டுப்பற்றை வலியுறுத்துவது எனக் கூறப்பட்டாலும், அப்பாடலில் இந்து மதத்தின் கடவுளர்களைப் பற்றிய வரிகள் இருப்பதால், எல்லா சமயத்தவரும் அதனை ஏற்க முடியாது என்பதைக் கருதியே, அப்பாடல் நாட்டுப்பண்ணாக அறிவிக்கப்படாது தவிர்க்கப்பட்டது. அப்படியிருக்கையில், அதனை அரசு…
நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 வீதம் கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்களை தேசிய மருத்துவ ஆணையம் (NMC) ஒதுக்கியுள்ளதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஜோசப் விஜயின் வழிகாட்டுதலின்படி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் பலனாக, தேசிய மருத்துவ ஆணையத்தின் (NMC) மருத்துவ மதிப்பீடு மற்றும் தரவரிசை வாரியம் (MARB), நாமக்கல், திருப்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தலா 50 கூடுதல் எம்பிபிஎஸ் இடங்களை வழங்கியுள்ளது. இதன் மூலம், இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை திறன் 100-ல் இருந்து 150 இடங்களாக உயர்ந்துள்ளது. மருத்துவ உள்கட்டமைப்பு, ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் மருத்துவ வசதிகளை தொடர்ந்து மேம்படுத்தியதன் விளைவாக, தமிழக அரசு இதுவரை 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 5,200 எம்பிபிஎஸ் இடங்களை உருவாக்கியுள்ளதாக…
கர்நாடக மாநிலம் மேகேதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டைக் கண்டித்து, கர்நாடக வாட்டாள் கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகள் இன்று தமிழக-கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் கண்டனப் போராட்டம் நடத்துவதாக அறிவித்தன. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாநிலங்களுக்கும் இடையேயான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூரு நோக்கிச் செல்லும் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தும் அத்திப்பள்ளி எல்லைக்குள் செல்ல அனுமதிக்கப்படாமல், ஓசூர் பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதனால் பெங்களூரு மற்றும் கர்நாடகாவின் பிற பகுதிகளுக்கு வேலை, தொழில் மற்றும் அவசர தேவைகளுக்காகச் செல்லவிருந்த பயணிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். போராட்டம் நிறைவடைந்த பிறகே வழக்கமான பேருந்து சேவைகள் மீண்டும் தொடங்கும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள்…