Author: Editor web2
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது அந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை மிட்செல் ஸ்டார்க் கைப்பற்றினார். முதல் போட்டியை தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி தொடங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது அதன் அடிப்படையில் இன்றைய முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 325 ரன்கள் குவித்து இருக்கிறது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 135* ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியா அணியில் மிட்செல் ஸ்டார்க் அதிகபட்சமாக ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். இன்றைய போட்டியில் அவர் ஒரு பெரிய உலக சாதனை படைத்திருக்கிறார். 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது பந்துவீச்சை தொடங்கிய மிட்செல் ஸ்டார்க் தற்பொழுது வரை மொத்தமாக 418 விக்கெட்டுகளை…
சீனாவில் உள்ள குவாங்டாங்-ஹாங்காங்-மக்காவ் கிரேட்டர் பே ஏரியா உலகின் மிகப்பெரிய நகரமாகும். இந்த நகரத்தின் மக்கள் தொகை 2030 ஆம் ஆண்டுக்குள் 100 மில்லியனை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரலாற்று சிறப்புமிக்க பேர்ல் நதியின் மேற்குக் கரையில், குவாங்சோவின் நான்ஷா மாவட்டத்தின் தெற்கு முனையில் ஜஹா கட்டிடக் கலைஞர்களால் வடிவமைக்கப்பட்ட கிரேட்டர் பே ஏரியா விளையாட்டு மையம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. பெரிய அளவிலான தடகளம் மற்றும் கால்பந்துக்காக 60,000 இருக்கைகள் கொண்ட மைதானம். கூடைப்பந்து மற்றும் பிற உட்புற நிகழ்வுகளுக்கு ஏற்ற 20,000 இருக்கைகள் கொண்ட உட்புற அரங்கம். 4,000 இருக்கைகள் கொண்ட நீர் விளையாட்டு மையம். 50 மீட்டர் போட்டி நடத்தும் அளவுக்கு நீச்சல் குளம் மற்றும் டைவிங் கிணறு ஆகியவற்றை இந்த கிரேட்டர் பே ஏரியா விளையாட்டு மையம் உள்ளடக்கியுள்ளது. சீனாவில் உள்ள பள்ளி கல்லூரி விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அனைவரும்…
வேள்பாரி கதையை இயக்குனர் ஷங்கர் திரைப்படமாக போவதாக தகவல் கசிந்துள்ளது. வேள்பாரி என்னும் நாவலை சு. வெங்கடேசன் அவர்கள் எழுதியிருக்கிறார். அந்த நாவல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. 1408 பக்கங்களைக் கொண்ட இந்த நாவல் இரண்டு பாகங்களாக வெளியானது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானதும் குறிப்பிடத்தக்கது. இந்த வேள்பாரி கதை உரிமையை இயக்குனர் ஷங்கர் முன்பே வாங்கியிருந்தது அனைவரும் அறிந்த செய்தி. இயக்குனர் சங்கர் இயக்கிய திரைப்படங்களில் அவருக்கு கனவு படமாக இருந்தது எந்திரன் திரைப்படம் தான். ஆனால் வேள்பாரி நாவலை படித்த பின்னர் வேள்பாரி கதையை திரைப்படமாக எடுக்க வேண்டிய எண்ணம் இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தோன்றியிருக்கிறது. எந்திரன் கதையை விட இந்த வேள்பாரி கதை அவருக்கு அதிக சிந்தனையையும் அதிக வேலையையும் கொடுத்ததால், எந்திரன் படத்தை தாண்டி இந்த திரைப்படம் தான் ஷங்கரின் கனவு திரைப்படம் என்று இயக்குனர் ஷங்கர் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர்…
ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி தொடங்கியது. இந்த இரண்டாவது போட்டி பகல் இரவு ஆட்டமாக காபாவில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் குவித்து இருக்கிறது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக 135* ரன்கள் எடுத்து ஜோ ரூட் களத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக ஜாக் க்ராலி 76 ரன்கள் எடுத்திருக்கிறார். முதல் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற மிட்செல் ஸ்டார்க் இந்த போட்டியிலும் ஆறு விக்கெட் எடுத்து தனது அதிரடியை காட்டி இருக்கிறார். ஜோ ரூட் செய்த சாதனை : டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில்…
திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் நான்கு வழித்தடங்களில் பள்ளி மாணவ மாணவிகள் மட்டும் இலவசமாக பயணிப்பதற்காக புதிய பேருந்து திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உடன் இணைந்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் இன்று துவங்கி வைத்தார். இந்த பேருந்தில் பள்ளி மாணவர்கள் மட்டும் இலவசமாக பயணிக்கலாம். காலை மாலை என இரண்டு வேளைகளில் இந்த பேருந்துகள் இயங்கும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமணி தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்டு இருக்கிறார். சென்னையில் மட்டுமே இயங்கி வந்த இந்த மாணவ மாணவிகளுக்கான இலவச பேருந்து சேவை இன்று திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் துவங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பள்ளி பயிலும் மாணவ மாணவிகளுக்கான இலவச பேருந்து தமிழ்நாடு முழுக்க விரிவுபடுத்தப்படும் என்றும் தமிழ்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் உறுதி அளித்திருக்கிறார். பள்ளிப் பயிலும் மாணவ மாணவிகள் மட்டும் பயணிக்கும் வகையிலான இந்த இலவச பேருந்து…
ஜோஹோ நிறுவனத்தின் தலைவர் ஸ்ரீதர் வேம்பு அவர்கள் எப்பொழுதும் சற்று தொலைநோக்கு சிந்தனையுடன் இருப்பார். சமூக வலைதளங்களில் தன்னுடைய தொலைநோக்கு கருத்துக்களை பதிவிடுவது அவரது வழக்கம். அதன்படி தற்பொழுது இளைஞர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோளை தனது பதிவின் மூலம் கூறியிருக்கிறார். ஸ்ரீதர் வேம்பு தன்னுடைய எக்ஸ் கணக்கில் பதிவிட்ட பதிவை பற்றி பார்ப்போம் : அமெரிக்காவில் உள்ள ஒரு சில மாணவர்கள் மற்றும் மாணவிகள் கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு, தங்களுடைய தொழில் திறனை வளர்த்துக் கொள்கிறார்கள். அவ்வாறு தொழில் கற்றுக் கொண்ட அனைவரையும் முற்போக்கு மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட முதலாளிகள் தங்களுடைய கம்பெனியில் வேலைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். இது உண்மையில் மிகப்பெரிய விஷயம். இது சமுதாயத்தில் ஒரு புதிய சிந்தனையையும் கலாச்சாரத்தை உருவாக்கும். ஒரு தொழிலில் அமர்வதற்கு கட்டாய படிப்பு தகுதி தேவையில்லை. கல்லூரி பட்டம் மற்றும் டிகிரி பெறுவதற்காக கடன் வாங்கி மற்றும் சொந்த…
நவம்பர் 3 2025 : சற்று நேரத்துக்கு முன்பு ஐ.சி.சி உலக தரவரிசை புள்ளி பட்டியல் வெளியாகியுள்ளது. வெளியான தரவரிசை புள்ளி பட்டியலை பற்றி இந்த பதிவில் பார்ப்போம். ஐசிசி ஆடவர் அணி விபரம் : டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மெட்டில் ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் 124 புள்ளிகளுடன் உள்ளது. இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு நாள் மற்றும் டி20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஐசிசி ஆடவர் பேட்ஸ்மேன் விபரம் : டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட்டை பொறுத்தவரையில் முதலிடத்தில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்திய அணி வீரர் ரோஹித் ஷர்மா முதலிடத்தில் இருக்கிறார். டி 20 கிரிக்கெட் ஃபார்மெட்டில் இந்திய அணி வீரர் அபிஷேக் ஷர்மா முதலிடத்தில் இருக்கிறார். ஐசிசி ஆடவர் பந்து வீச்சாளர் விபரம் : டெஸ்ட் கிரிக்கெட் ஃபார்மேட்டில் இந்திய வீரர்…
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பொருட்களில் தற்பொழுது நுடெல்லா சாக்லேட் ஸ்பிரெட் சேர்ந்துள்ளது. இத்தாலியில் ஃபெர்ரெரோவால் தயாரிக்கப்படும் பிரபலமான ஹேசல்நட் மற்றும் கோகோ ஸ்ப்ரெட், இந்த இரண்டு பொருட்களின் கலவைதான் தான் நுடெல்லா. சர்க்கரை, பாமாயில், ஹேசல்நட்ஸ், ஸ்கீம் பால், கோகோ, லெசித்தின் மற்றும் வெண்ணிலின் (ஒரு செயற்கை சுவை) ஆகியவை ஏழு பொருட்கள் அடங்கிய கலவைதான் இந்த நுடெல்லா கலவை. இதனுடைய ஊட்டச்சத்து விபரத்தை பற்றி பார்ப்போம் : ( 2 டேபிள்ஸ்பூன் நுடெல்லாவின் ( 30-37 கிராம்) ஊட்டச்சத்து விபரம் ) கலோரிகள் : 200 கொழுப்பு : 11 கிராம் (நிறைவுற்ற கொழுப்பு: 3.5 கிராம்) சோடியம் : 15 மி.கி கார்போஹைட்ரேட் : 22 கிராம் (நார்ச்சத்து: 1 கிராம், சர்க்கரை: 21 கிராம்) புரதம் : 2 கிராம் ஹேசல்நட்ஸ் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தவை. மேலும் இதில் ஆக்ஸிஜனேற்றிகள்,…
சாம்சங் நிறுவனம் முதல் முறையாக கேலக்ஸி இசட் ட்ரைஃபோல்ட் ( Galaxy Z Trifold ) தொலைபேசியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன் இரண்டாக மடிக்கும் விதத்தில் கூடிய தொலைபேசியை ( Foldable Mobile ) விற்பனை செய்து வந்திருந்த நிலையில் தற்பொழுது மூன்றாக மடிக்கும் ஒரு தொலைபேசியை ( Galaxy Z Trifold ) உலகிற்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த தொலைபேசியில் சிறப்பம்சங்கள் குறித்து பார்ப்போம் : முதலில் இந்த தொலைபேசி 3.9 மில்லிமீட்டர் மெல்லிய அளவைக் கொண்டுள்ளது. 6.5 இன்ச் டிஸ்ப்ளே அளவை கொண்ட மூன்று தனி தொலைபேசியை இணைத்து ஒரே தொலைபேசியாக வெறும் 309nகிராம் எடை அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது ( கிட்டத்தட்ட ஒரு குட்டி கைக்கணினி போல ). 200 மெகா பிக்சல் கேமரா, மூன்று 5600 Mah பேட்டரி செல்கள், 45 வாட்ஸ் திறன் அளவு கொண்ட அதிவேக சார்ஜர் வசதி, 10 இன்ச் டிஸ்ப்ளே…
தமிழகத்தை பொறுத்தவரையில் விசேஷமான நாட்களில் பத்திரப்பதிவு அதிக அளவில் நடைபெறும். கார்த்திகை மாதம் சுபமுகூர்த்த தினத்தில் பத்திரப்பதிவு அதிக அளவில் தாக்கல் ஆகும் என்பதை முன்கூட்டியே அறிந்து டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று பத்திரப்பதிவுக்கான டோக்கன்கள் அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டன. அதன்படி நேற்றைய முன்தினம் டோக்கன்களை பெற்று அதிக அளவில் பத்திரங்களை மக்கள் பதிவு செய்துள்ளனர். டிசம்பர் ஒன்றாம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் கிட்டத்தட்ட 303 கோடி ( 302.73 கோடி) ரூபாய்க்கு பத்திரங்கள் தாக்கலாகி உள்ளது. அன்றைய ஒரு தினத்தில் மட்டும் 303 கோடி ரூபாய் வருவாய் பதிவு துறைக்கு கிடைத்துள்ளது என்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி உறுதி செய்துள்ளார். பொதுவாக சுபமுகூர்த்த தினங்களில் வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்குவது அல்லது முன்பதிவு செய்வது போன்ற முக்கிய காரியங்களை அன்றைய தினத்தில் செய்தால் எல்லாம் நல்லபடியாக…