Close Menu
    What's Hot

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரவுடியை பிடிக்க பாறை மீது ஏறி சிக்கிக்கொண்ட போலீஸ்காரர் – தீயணைப்புத்துறை உதவியுடன் மீட்பு
    தமிழ்நாடு

    ரவுடியை பிடிக்க பாறை மீது ஏறி சிக்கிக்கொண்ட போலீஸ்காரர் – தீயணைப்புத்துறை உதவியுடன் மீட்பு

    Editor TN TalksBy Editor TN TalksDecember 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    pol
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பிரபல ரவுடியை பிடிக்கப் பாறை மீது ஏறி கீழே இறங்க முடியாமல் தவித்த காவலர்களை தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பாக மீட்டனர்.

    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன்(30). இவர் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்துள்ளார். பாலமுருகன் மீது தென்காசி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, அருப்புக்கோட்டை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 90க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக, அவரது சொந்த ஊரான கடையம் காவல் நிலையத்தில் மட்டும் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    மேலும் அவர் மீது அதிகளவு திருட்டு வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. பாலமுருகன் திருடுவதில் எவ்வளவு கை தேர்ந்தவரோ அதே அளவுக்கு போலீஸ் பிடியில் இருந்து தப்புவதிலும் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். கேரள மாநிலத்தில் நடைபெற்ற ஒரு குற்றச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இதற்கிடையே 2 வாரங்களுக்கு முன்பு தமிழகத்தின் அருப்புக்கோட்டையில் நடைபெற்று வரும் ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழ்நாடு போலீசார் பாலமுருகனை திருச்சூர் சிறையிலிருந்து அழைத்து வந்துள்ளனர். மீண்டும் அங்கு அழைத்துச் சென்றபோது திருச்சூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக பாலமுருகனை போலீசார் தேடிவந்த நிலையில், சொந்த ஊரான கடையம் ராமநதி அணை அருகேயுள்ள சுமார் 1000 அடி உயரமுள்ள பொத்தையின் (சிறுபாறை) மேல் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறப்புப் படையை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட காவலர்கள் நேற்றிரவு பாலமுருகனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இரவு நேரத்தில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த போதும், சக்திவாய்ந்த லேசர் விளக்குகளுடன் போலீசார் மலைப்பகுதியில் ஏறித் தேடினர். அப்போது, பாறையின் செங்குத்தான பகுதியில் ஏறிய 5 காவலர்கள் மீண்டும் கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர். பொத்தையின் நடுப்பகுதியில் அவர்கள் தொங்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் கீழே வர முடியவில்லை.

    25537455 rowdy balamurugan

    எனவே, உடனடியாக ஆலங்குளம் மற்றும் தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு, இன்று (டிச.5) அதிகாலை முதற்கட்டமாக 3 போலீசார் பத்திரமாக மீட்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, மற்ற இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.‌ இதனிடையே மலைப்பகுதியில் சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக பதுங்கியுள்ள ரவுடி பாலமுருகனை தப்பிக்க விடாமல் பிடிப்பதற்கு மலையைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் ட்ரோன் கேமரா மற்றும் அப்பகுதியை சேர்ந்த உள்ளூர்வாசிகள் உதவியுடன் ரவுடி பாலமுருகனை தேடி வருகின்றனர். இருப்பினும் போலீஸ் பிடியிலிருந்து தப்புவதில் வல்லவரான பாலமுருகனை பிடிக்கமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article40 சீட் வேண்டும்… காங்கிரஸ் டிமாண்ட்? – தொகுதி பங்கீட்டை சுமூகமாக முடிக்குமா திமுக?
    Next Article திருப்பரங்குன்ற விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
    Editor TN Talks

    Related Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    July 17, 2026

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    July 17, 2026

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    July 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊத்தங்கரை எம்.எல்.ஏ. குதிரை பேர வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

    IMDb பட்டியலில் 3-வது இடம் பிடித்த ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’… எகிறும் எதிர்பார்ப்பு!

    கோவை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் சோதனை… அதிகாரிகளிடம் தீவிர விசாரணை

    மக்கள் தொகை சுய கணக்கெடுப்பு… மக்களுக்கு முதலமைச்சர் விஜய் அழைப்பு!

    பிக் பாஸ் சீசன் 10!. முன்கூட்டியே களமிறங்கும் பிரம்மாண்ட நிகழ்ச்சி! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.