கட்சி நிகழ்வுக்காக சென்னை வந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திக்கு காங்கிரசார் உற்சாக வரவேற்பளித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 10நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் காங்கிரஸ் அகில இந்திய நிர்வாகியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இதற்காக சென்னைக்கு வந்த ராகுல்காந்திக்கு, விமான நிலையத்தில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக மாமல்லபுரம் வந்தடையும் ராகுல்காந்தி பயிற்சி முகாமில் பங்கேற்று உரையாற்றுகிறார் எனவும், தொடர்ந்து தமிழகத்தின் 74 மாவட்ட காங்கிரஸ் தலைவருடனும் அவர் கலந்துரையாட உள்ளதாகவும், அப்போது அரசியல் வியூகங்கள், கட்சியின் கட்டமைப்பு மற்றும் வளா்ச்சிப் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
