பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்திருந்தார். அதே மாடலை தமிழ்நாடு அரசும் பின்பற்றுகிறது என விவாதங்கள் எழுந்திருக்கிறது.

அந்தவகையில், முதல்வர் ஸ்டாலின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதன் மூலம் தகுதியுள்ளப் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், ‘தேர்தல் நெருங்குவதால் இந்த திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சிக்கிறது’ எனக் குறிப்பிட்டு, அடுத்த மூன்று மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகையும், கோடைக்கால சிறப்புத் தொகையாக ரூ.2000 சேர்த்து ரூ.5000 மகளிர் உரிமைத் தொகை பெறும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும், தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகளிர் உரிமைத் தொகையை ரூ.2000-மாக உயர்த்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, மு.க.ஸ்டாலினின் அறிவிப்பால், உரிமைத் தொகை கிடைக்காத பெண்கள் ஆத்திரத்தில் உள்ளனர். அதாவது, தேனியில் பெண்கள் அரசுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் தாங்கள் 2 வருடமாக முயற்சித்து வருகிறோம். ஆனால் இதுவரை மகளிர் உரிமைத் தொகை பெறமுடியவில்லை என வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், தங்களுக்கு உதவித்தொகை வழங்காவிட்டால் தேர்தலில் ஓட்டுப்போட மாட்டோம் என்று கறாராக தெரிவித்துவிட்டார்களாம்,

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version