சாகித்ய அகாடமி விருது பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார். அவருக்கு வயது 92.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் 1933-ஆம் ஆண்டு பிறந்த தமிழன்பனின் இயற்பெயர் ஜெகதீசன். மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் தடம் பதித்த இவரின் கவிதைத் தொகுப்பான ‘வணக்கம் வள்ளுவ’ நூலுக்காக 2004-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

வயது மூப்பு காரணமாக அண்மையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஈரோடு தமிழன்பன் இன்று காலமானார்.

ஈரோடு தமிழன்பனின் மறைவுக்கு தலைவர்களும், எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version