முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அமைச்சரவை இன்று 23 புதிய அமைச்சர்களின் சேர்க்கையோடு முழுமையடைந்துள்ள நிலையில், சீனியர் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் இலாகா அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மே 10 அன்று முதற்கட்டமாகப் பதவியேற்ற மூத்த அமைச்சர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையனுக்கு மிக முக்கியத் துறையான நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்றபின் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள புதிய இலாகா ஒதுக்கீடு பட்டியலில், செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை மாற்றப்பட்டு, அவருக்கு வருவாய்த் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய நிதி அமைச்சர் மரிய வில்சன்:

சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று, இன்று புதிய அமைச்சராகப் பதவியேற்ற மரிய வில்சனுக்கு மிக முக்கியமான நிதித்துறை இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வியாளராகவும், சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவராகவும் அறியப்படும் இவருக்கு இந்த முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அக்கட்சியினர் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே, மூத்த அமைச்சரின் இலாகா மாற்றப்பட்டு புதிய அமைச்சருக்கு நிதித்துறை போன்ற பவர்ஃபுல் துறை ஒதுக்கப்பட்டிருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.


Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version