சென்னையில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் வீட்டு உரிமையாளரின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தியாகராய நகர் காவல் மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில், தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் 27 வயதுடைய பெண் ஒருவர் தனது  சகோதரியுடன் வாடகைக்கு வசித்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி இரவு சகோதரி வெளியில் சென்றிருந்த நிலையில்,  இளம்பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவில் வீட்டின் உள் தாழ்ப்பாளை போடாமல் அசந்து தூங்கிய நிலையில், நள்ளிரவில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த, வீட்டு உரிமையாளரின் மகன் ஆனந்த கிருஷ்ணன் என்பவர், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தமிட்ட இளம்பெண்ணுக்கு ஆனந்த கிருஷ்ணன் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்தக் கொடுமை தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் இளம்பெண் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸார், ஆனந்த கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version