தங்கம் விலை இன்று(ஜன.29) வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.1,190உயர்ந்து ரூ.16,800க்கும், சவரன் ரூ.9,520 உயர்ந்து ரூ.1,234,400க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், இந்திய சந்தையில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது, அதனடிப்படையில், கடந்த சில நாட்களாக தங்கம் விலை உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது. நேற்று புதன்கிழமை (ஜன.28)தங்கம் விலை ஒரு கிராம் தங்கம் ரூ.15,610-க்கும், சவரன் ரூ.1,24,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் (ஜன.29)தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனிடையே 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.1,190அதிகரித்து ஒரு கிராம் ரூ.16,800க்கும், ரூ.9,520அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,34,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.25,000 அதிகரித்து ரூ.4,25,000-க்கும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.425க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
