எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குழும குத்தகை பாகையில் 20 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு உடனடியாக செலுத்துமாறு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது!
திருச்சி காஜாமலை பகுதியில் உள்ள தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான இடத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் ஹோட்டல் நடத்தி வந்தது. குறிப்பிட்ட இடத்திற்கான குத்தகை காலம் முடிவடைந்து விட்டதால், அந்த இடத்தை கையகப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதை எதிர்த்து எஸ்.ஆர்.எம் குழுமம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன் மற்றும் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் ஆஜராகி, எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் குத்தகை காலம் கடந்த 2024ம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது என்பதால் அவர்கள் அந்த இடத்திற்கு உரிமை கோர முடியாது என வாதிட்டனர். மேலும் அந்த நிறுவனம் குத்தகை பாகியாக 38 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளது என்றும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய 38 கோடி ரூபாய் குத்தகை பாக்கியில் 20 கோடியை 6 வாரத்தில் எஸ்.ஆர்.எம் குழுமம் செலுத்துமாறு உத்தரவிட்டதோடு, அந்த தொகையை முதலில் செலுத்தினால் தான் இந்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியும் என தெரிவித்தனர். இதனை அடுத்து 20 கோடி ரூபாயை செலுத்தியதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 8 வாரத்திற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.