Close Menu
    What's Hot

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»“ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி
    அரசியல்

    “ஆட்சியில் பங்கு என்பதே காங்கிரஸின் கருத்து” – செல்வப்பெருந்தகை உறுதி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 28, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    selva 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என்ற கிரிஷ் சோடங்கரின் கருத்து தமிழ்நாடு காங்கிரஸின் கருத்து தான் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் யசோதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்துகொண்டு, யசோதாவின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜக ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவது இந்திய இறையாண்மையின் மீது நடத்தப்படும் தாக்குதல். பாஜக அரசுகளின் இந்நடவடிக்கை கண்டனத்துக்குரியது. இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க மத்திய அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதற்கு ஏன் மோடி தனது கண்டனத்தை தெரிவிக்கவில்லை.

    பல மாநில கூட்டணிகளில் கடைசி நேரத்தில் தொகுதிகள் ஒதுக்குவதால் சிக்கல் இருக்கிறது. கூட்டணியில் 2 மாதம் முன்பே சில வேலைகளை பேசி முடித்தால் தான் பிரச்சாரம் உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும். அதைத் தான் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திமுக-விடம் பேசி இருக்கிறார். எனவே, திமுக-விடம் முன்கூட்டியே பேச்சுவார்த்தைகளை முடிக்க வேண்டும் என்றஅடிப்படையில் பொறுப்பாளர் வலியுறுத்தி இருக்கிறார். காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் என்பதால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு அவசியம் என தெரிவித்திருக்கிறார் கிரிஷ் சோடங்கர். தமிழ்நாடு காங்கிரஸின் கருத்தும் அது தான்.

    இண்டியா கூட்டணி வலிமையாக உள்ளது. இந்தியாவை வழிநடத்தப் போவது இண்டியா கூட்டணி தான். திருச்சிவேலுசாமி தவெக-வுடன் பேசுவதாகச் சொல்வது அவருடைய சொந்தக் கருத்து. அது காங்கிரஸ் கட்சியின் கருத்து அல்ல. எஸ்ஐஆர் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தெளிவாகவும், நேர்மையாகவும் நடந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தமிழகத்துக்கு விரைவில் வர உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாநில துணைத் தலைவர்கள் ஆ.கோபண்ணா, சொர்ணா சேதுராமன், அமைப்புச் செயலாளர் ராம் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“இரட்டை வேடம் போடும் விஜய்” – வேல்முருகன் கேள்வி
    Next Article “முஸ்லிம்களுக்கு 16 தொகுதி வேண்டும்” – திமுகவிடம் கேட்கிறது முஸ்லிம் லீக்
    Editor TN Talks

    Related Posts

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    July 4, 2026

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    அடுத்த விக்கெட் அவுட்..!! காலியாகும் கூடாரம்.. அதிமுகவில் இருந்து பொன் ஜெயசீலன் விலகல்..!!

    குடும்பத்துடன் லண்டன் புறப்பட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்!.

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.