முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தலை​மை​யில் வரும் 6-ம் தேதி தமிழக அமைச்​சர​வைக் கூட்​டம் நடை​பெற உள்​ளது.

2026ஆம் ஆண்டின் முதல் சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இந்தக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்குவது வழக்கம். ஆனால் இதில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என கூறி, தனது உரையை வாசிக்காமல் வெளியேறினார். இதைத்தொடர்ந்து, ஆளுநர் உரை வாசிக்கப்பட்டதாக அவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆளுநர் மீண்டும் ஒருமுறை சட்ட விதிகளையும், மரபையும் மீறி அவையில் இருந்து வெளியேறி சென்றிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இருப்பினும் இந்த கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் ஸ்டாலின் தலைமையில் வரும் 5ம் தேதி காலை 12 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பட்ஜெட்டில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதோடு கடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்கும் நடப்பு அமைச்சரவைக் கூட்டத்திற்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் புதியதாக தொழில் தொடங்க விண்ணப்பித்திருக்கும் நிறுவனங்களுக்கான ஒப்புதலும் வழங்கப்பட உள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் தேர்தல் வர இருப்பதால் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் கொள்கை ரீதியிலான பல்வேறு முடிவுகளும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version