Close Menu
    What's Hot

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் வெப்ப எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி: அடுத்த சில நாட்களுக்கு மழை மற்றும் வெப்ப எச்சரிக்கை!

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026Updated:April 28, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    rain heat 1920
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வடக்கு தெலுங்கானா முதல் குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இன்று மற்றும் நாளை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காரைக்கால் பகுதியிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவும்.

    ஏப்ரல் 30: தமிழகத்தின் ஒருசில இடங்களில் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதுடன் மழை பெய்யக்கூடும். குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    மே 01 மற்றும் 02: நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மாநிலத்தின் மற்ற பகுதிகளில் மிதமான மழை தொடரும்.

    மே 03 மற்றும் 04: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    வெப்பநிலை மற்றும் அசௌகரியம் குறித்த எச்சரிக்கை:
    மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் குறையாது என எச்சரிக்கப்பட்டுள்ளது:

    வெப்ப உயர்வு: மே 2-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2°C முதல் 3°C வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை நிலவரம்: சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39°C வரை பதிவாக வாய்ப்புள்ளது.

    உடல்நல பாதிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புழுக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் 

    வெப்பம் மற்றும் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் நேரங்களில் பொதுமக்கள் போதிய அளவு நீர் அருந்துமாறும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள். கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிப்போர் இடி, மின்னலின் போது பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகோவையில் செக் வைத்த திமுகவினர்?. தனி டீம் அமைத்து விசாரிக்கும் செந்தில் பாலாஜி!
    Next Article திருச்செந்தூரை தொடர்ந்து விஜய் செல்லும் ஆன்மீக தலம் எது? – வெளியான தகவல்
    Editor TN Talks

    Related Posts

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    July 5, 2026

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.