Close Menu
    What's Hot

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருப்பத்தூர் பேருந்து விபத்து: 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன
    தமிழ்நாடு

    திருப்பத்தூர் பேருந்து விபத்து: 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன

    Editor TN TalksBy Editor TN TalksDecember 1, 2025Updated:December 1, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    acciddd
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பத்தூர் அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒரு பெண்ணின் உடல் மட்டும் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கும்மங்குடி பாலம் அருகே நேற்று மாலை இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், 2 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து திருப்பத்தூர், மதுரை, காரைக்குடி அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்தில் உயிரிழந்தவ்ர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

    விபத்து குறித்து திருப்பத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, நிலக்கோட்டை அருகே பழைய வத்தலகுண்டைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் சென்றாயன் (36), சிங்கம்புணரி முத்துமாரி (60), காரைக்குடியைச் சேர்ந்த கல்பனா (36), அரியக்குடி மல்லிகா (61), தேவகோட்டை குணலட்சுமி (55), மேலூரைச் சேர்ந்த செல்லம் (55), அம்மன்குறிச்சி தெய்வானை (58), வேலூரை சேர்ந்த முத்துலட்சுமி (49), திண்டுக்கல் மாவட்டம் வெற்றிச்செல்வி (60) மற்றும் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த லாவண்யா (50) ஆகிய 10 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால், காரைக்குடி அரசு மருத்துவமனையில் உள்ள ஒரு பெண்ணின் உடல் மட்டும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

    பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள்

    போலீசார் மற்றும் மருத்துவர்கள் தொடர்ந்து அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதில், தெய்வானை, குணலட்சுமி மற்றும் செல்லம் ஆகிய மூன்று பேரின் உடல்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், குணலட்சுமி மற்றும் தெய்வானை ஆகியோரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அனைவரின் உடல்களையும் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள்பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்கள்

    மேலும், மதுரை, காரைக்குடி, சிவகங்கை, திருப்பத்தூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 22 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருப்பத்தூர் விபத்தில் பலியானோருக்கு இரங்கல்: பிரதமர் மோடி நிவாரண உதவி அறிவிப்பு
    Next Article திருப்பத்தூர் விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம்… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
    Editor TN Talks

    Related Posts

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    March 22, 2026

    அடுத்தடுத்து நெருக்கடி!. சோப்பு, லிக்யூட், வாஷிங் பவுடர் விலை உயர்கிறது!.

    March 22, 2026

    கரூர் பிரசாரத்தில் விஜய் ஷூட்டிங்கா?. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு!

    March 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    இந்தியர்களின் பாதுகாப்பு எங்களின் முதன்மைப் பொறுப்பு!. ஐக்கிய அரபு அமீரகம் உறுதி!.

    வரலாற்றில் முதல் முறை!. ரூ.94-ஐ தாண்டியது டாலர்!. அதிர்ச்சியில் இந்திய சந்தைகள்!.

    ஏப்.1 முதல் புதிய விதிமுறை!. பான் கார்டு பெற இனி ஆதார் மட்டும் போதாது!. இந்த கூடுதல் ஆவணங்கள் கட்டாயம்!

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    Trending Posts

    பேரிடி!. நாளை முதல் விமான கட்டண உச்ச வரம்பு நீக்கம்!. பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்பு!

    March 22, 2026

    குஜராத் முதல்வர் டூ பிரதமர் வரை!. 24 ஆண்டுகால இடைவிடாத ஆட்சிப் பயணம்!. மோடி புதிய சாதனை!

    March 22, 2026

    துப்பாக்கி முனையில் மிரட்டல்?. 10 லட்சம் லஞ்சப் புகார்!. உயிரை மாய்த்துக்கொண்ட அதிகாரி!. பதவியை இழந்த அமைச்சர்!.

    March 22, 2026

    கரூர் பிரசாரத்தில் விஜய் ஷூட்டிங்கா?. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு!

    March 22, 2026

    கொடுத்த வாக்கை பாஜக நிறைவேற்றவில்லை; மேடைகளில் புகைப்படம் கூட இல்லை!. சரத்குமார் ஆவேசம்!

    March 22, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.