Close Menu
    What's Hot

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»உணவு பரிமாறியவர்களிடம் சாதியை கேட்ட ராஜா?
    தமிழ்நாடு

    உணவு பரிமாறியவர்களிடம் சாதியை கேட்ட ராஜா?

    Editor TN TalksBy Editor TN TalksFebruary 11, 2026Updated:February 11, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Raja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பட்டிமன்ற பேச்சாளரும், நடிகருமான ராஜா மீது சாதிய பாகுபாடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த பிப்ரவரி 3ம் தேதி அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் தமிழ் சங்கத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பட்டிமன்ற பேச்சாளர்கள் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டனர். அங்கு அவர்களுக்கு தமிழ் உணவு தயாரித்துக் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி அவர்களுக்கு விதவிதமான தமிழ் உணவுகள் பரிமாறப்பட்டன. அப்போது, உணவு வழங்க வந்த தமிழர்களிடம் சாதி குறித்து ராஜா கேட்டதாக கூறப்படுகிறது.
    Raja 1
    இதுபற்றி முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திகேயன் ஃபஸ்துரு என்பவர், தனது சகோதரி மற்றும் அவரின் தோழிகளுக்கு தமிழ் சங்கத்தின் சார்பில் ராஜா மற்றும் பாரதி பாஸ்கர் ஆகியோருக்கு உணவு தயாரித்து வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். உணவு பரிமாறும் போது, தனது தங்கை மற்றும் அவரின் தோழிகளிடம் அவர்களின் ஊர் பெயர் மற்றும் சாதி குறித்து ராஜா விரிவாக கேட்டதாக கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். தனது தங்கை காரைக்குடி என்றதும், செட்டியாரா என்று ராஜா கேட்டதாகவும், அதற்கு பதிளிக்காமல் இருந்தவுடன், “வேறு என்ன ஆளு நீங்க” என்று ராஜா மீண்டும் கேட்டதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவத்தால் தனது தங்கை மிகவும் மனவருத்தம் அடைந்ததாக கார்த்திகேயன் ஃபஸ்துரு தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சாதிகளை மறந்து தமிழர்களாய் இணைந்து, ஒரு சங்கம் வைத்து அங்கு பேச அழைத்தால், அங்கும் வந்து சாதி வன்மத்தை தான் காட்டுவீர்களா என்று ராஜா மீது கடும் விமர்சனத்தை அவர் முன்வைத்துள்ளார்.

    Karthikeyan

    இதனிடையே தன் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கமளித்து வீடியோ ஒன்றை ராஜா வெளியிட்டுள்ளார். அதில், தனக்கு உணவு பரிமாறியவர்களிடம் சாதி குறித்து தான் கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளார். தனது கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக அவர் விளக்கி உள்ளார்.

    http://

    I’ve met Pattimandram Raja in person when he visited my city in 2008. I was one of the speakers in the pattimandram where he was a naduvar. Also met him online in 2021 for one of my speeches. He was always friendly, rational, and focused on ideas. I never saw him ask anyone about… pic.twitter.com/Fm5BG2FTBd

    — Kalpana Suren (@kalpana_suren) February 10, 2026

    பிப்ரவரி 3ம் தேதி நடந்த நிகழ்வு பற்றி, நீண்ட நாட்கள் கழித்து பிப்ரவரி 9ம் தேதி சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பரப்பப்பட்டதாக ராஜா தெரிவித்துள்ளார். தவறாக நடந்து கொண்டிருந்தால், அப்போதே அந்த சகோதரிகள் தன்னிடத்தில் கேட்டு இருக்கலாம் என்றும் இல்லை என்றால் பட்டிமன்றம் முடிந்த பிறகாவது அவர்கள் கேட்டு இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேடி வந்து உணவு தருபவர்களின் அன்புக்கு, அவர்களிடம் சாதியை பற்றி விசாரிப்பேனா? என்று ராஜா கூறியுள்ளார். எந்த காலத்திலும் தான் அப்படி இருந்ததில்லை என்றும் அப்படி இருக்கப் போவதுமில்லை என்றும் ராஜா விளக்கமளித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவை கூட்டணி கட்சிகளே தோற்கடிக்கும்!. அன்புமணி விமர்சனம்!
    Next Article ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது!. முடிவை அறிவித்தார் ஸ்டாலின்!
    Editor TN Talks

    Related Posts

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    February 16, 2026

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    10ம் வகுப்புத் தேர்வு எழுத மாட்டார் வைபவ் சூர்யவன்ஷி!. அவரது தந்தை சொன்ன தகவல்!.

    February 16, 2026

    இந்தியாவுக்கு எதிரான தோல்வி!. கோபத்தில் டிவியை உடைக்கும் பாக்., ரசிகர்!. வீடியோ வைரல்!.

    February 16, 2026

    “தகுதியற்றவரிடம் பொறுப்பு கொடுத்தால், நாட்டையே அழித்துவிடுவார்”!.  சோயிக் அக்தர் ஆத்திரம்!.

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.