தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்தவொரு கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தமிழகத்தின் அடுத்த அரசு எது என்பது குறித்துப் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த திமுக எம்பி கனிமொழி, தேர்தல் முடிவுகள் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. “தமிழகத்தில் ஆட்சி அமைவது என்பது மக்களின் தீர்ப்பு. ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்புதான் மிக முக்கியமான விஷயம்; அதற்கு மதிப்பளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். திராவிடக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது போன்ற சூழல் குறித்து அவர் பேசுகையில், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதே ஜனநாயகத்தின் மாண்பு என்பதை வலியுறுத்தினார்.

குறிப்பாக, அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகளும் கூட்டணி அமைத்து “நிலையான அரசை” உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளியாகும் தகவல்கள் குறித்துச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த கனிமொழி, “வெறும் யூகங்களின் அடிப்படையில் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் பதில் அளிக்க முடியாது. அதிமுக தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு நான் பதில் சொல்ல முடியாது” எனச் சுருக்கமாக முடித்துக் கொண்டார். இதன் மூலம் அதிமுக-வுடன் ரகசியப் பேச்சுவார்த்தை நடப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அவர் உறுதிப்படுத்தவும் இல்லை, முற்றிலுமாக மறுக்கவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version