Close Menu
    What's Hot

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»‘பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ!’- கோவையில் பிரதமர் சுவாரஸ்யம்!
    தமிழ்நாடு

    ‘பீகாரின் காற்று தமிழ்நாட்டிலும் வீசுகிறதோ!’- கோவையில் பிரதமர் சுவாரஸ்யம்!

    Editor TN TalksBy Editor TN TalksNovember 19, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Covai PM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வேளாண் துறையில் பாரதம் புதிய பாதையில் பயணிக்கத் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கோவை வந்தார். கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு, தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இயற்கை வேளாண்மை மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, இயற்கை விவசாயம் தனது இதயத்திற்கு நெருக்கமானது என்றார். விவசாயிகள் பேசியதை உணர முடிந்ததாகவும், ஆனால், புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் குறிப்பிட்டார்.  தான் மேடை ஏறும் போது, விவசாயிகள் துண்டை சுழற்றியதை பார்க்கும் போது, பீகாரின் காற்று இங்கேயும் வீசுகிறதோ என தனது மனம் எண்ணியதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

    கோவை மருதமலையில் குடிகொண்டிருக்கும் மருதமலை முருகனுக்கு தலைவணங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தென் மாநிலங்களின் தொழில்துறையின் சக்தி பீடமாக கோவை திகழ்வதாகவும், ஜவுளித்துறையில் நாட்டிற்கு பங்களிப்பு செய்வதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ‘பி.எம். கிசான்’ திட்டத்தில் 21வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித் தொகையை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், சிறு விவசாயிகளுக்கு இதுவரை ரூ.4 லட்சம் கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் நிதியுதவி திட்டத்தால் பலனடைந்த விவசாயிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டார். ‘பி.எம். கிசான்’ திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயனடைவதாகவும், கோவை மாவட்டத்தை சேர்ந்த 44 ஆயிரத்து 837 பேர் பயன்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

    பின்னர், இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்த விவசாயிகளுக்கு விருது வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார். தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து வரும் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடினார். இயற்கை விவசாயிகள் சார்பில் அமைக்கப்படும் அரங்குகளில் விவசாய உற்பத்தி பொருட்களை பிரதமர் பார்வையிட்டார். இந்த மாநாட்டில் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான இயற்கை விவசாயிகள் பங்கேற்றனர்.

    விழாவின் சுவாரஸ்யமாக, இந்தியா பொருளாதார வல்லரசாக மாறும் என குறிப்பிட்டு சிறுமிகள் வைத்திருந்த பதாகையை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous ArticleFIFA WC 2026: 17-வது முறையாக தகுதிபெற்றது ஸ்பெயின் கால்பந்து அணி
    Next Article மயி​லாப்​பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி கும்பிடும்போது மருத்துவ மாணவியிடம் பாலியல் அத்துமீறல்: அரசுத்துறை ஓட்டுநர் கைது
    Editor TN Talks

    Related Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    July 5, 2026

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இதுதான் என் கடைசி உலகக் கோப்பை தொடர்..!! ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ரொனால்டோ..!!

    FIFA World cup 2026: வரலாற்று வெற்றி: பிரேசில் உலகக் கோப்பை கனவை தகர்த்தது நார்வே அணி..!!

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.