Close Menu
    What's Hot

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.300 கோடியில் சீரமைத்த திருச்செந்தூர் முருகன் கோயில் மண்டபத்தில் மழைநீர் கசிவு; பக்தர்கள் அதிர்ச்சி
    தமிழ்நாடு

    ரூ.300 கோடியில் சீரமைத்த திருச்செந்தூர் முருகன் கோயில் மண்டபத்தில் மழைநீர் கசிவு; பக்தர்கள் அதிர்ச்சி

    Editor TN TalksBy Editor TN TalksDecember 21, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    thiruchendur
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ரூ.300 கோடியில் புனரமைக்கப்பட்ட திருச்செந்தூர் முருகன் கோயிலில் பழமையான கல் மண்டபத்தில் மழைநீர் கசிந்து வருவதால் பக்தர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது தூத்துக்குடி மாவட்டதிலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயில் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வரும் நிலையில் இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் மேற்கொள்வார்கள்.

    இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பில் பெருந்திட்ட வளாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடியும், அறநிலையத் துறை சார்பில் ரூ.100 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பெருந்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவக்கி வைத்தார். இதில் கோயில் மண்டபம், அன்னதானக்கூடம், தங்கும் விடுதிகள், நாழிக்கிணறு, திருமண மண்டபம் மற்றும் பூங்கா என, பல்வேறு பணி புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் கோயிலுள்ள பழமையான ராஜகோபுரம், திருக்கல்யாண மண்டபம், வெள்ளக்கல் மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பழமையான கல்மண்பங்கள், அதன் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில் கோயில் சண்முக விலாஸ் மண்டபம் முன் உள்ள பழமையான வெள்ளக்கல் மண்டபத்தில் மழைநீர் கசிந்து ஒழுகுவது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெள்ளக்கல் மண்டபத்தில் மேல்தளங்கள் மற்றும் கல்தூண்கள் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் இந்த வெள்ளக்கல் மண்டபத்தில் பல்வேறு இடங்களில் மழைநீர் கசிந்து ஒழுகி வருகிறது. இதனால் மண்டபத்திற்குள் மழைநீர் ஓடுவதால் காத்திருக்கும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

    இக்கோயிலில் புதிய பணிகளுடன் ரூ.300 கோடி மதிப்பில் பழமையான கல் மண்டபங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில் மண்டபத்தில் மழை நீர் கசிவு ஏற்பட்டிருப்பது, பக்தர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசும், அறநிலையத்துறையும் கூடுதல் கவனம் கொண்டு கல்மண்டத்தை மறுசீரமைப்பு செய்யவும், மீதமுள்ள பணிகளை தரமாக கட்டவும் வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதென்னாப்பிரிக்காவில் மர்மநபர்கள் துப்பாக்கிச்சூடு: 10 பேர் பலி, 10 பேர் காயம்
    Next Article நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை தவறிழைத்துள்ளது – ப. சிதம்பரம்
    Editor TN Talks

    Related Posts

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    July 4, 2026

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    July 4, 2026

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிந்த தொழிற்சாலை..! ஆட்சியர் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு..!

    ஏதாவது பிரச்சனையா..?? ஆளுநர் மாளிகையில் தெரிவிக்கலாம்..!! மக்களுக்கு அர்லேகர் அழைப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.