சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அதன் பலம் 113-ஆக அதிகரித்துள்ளது. இந்த பலத்துடன் நேற்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இருப்பினும், ஆளுநர் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் வராதது தவெக தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜனநாயக முறைப்படி தனிப்பெரும் கட்சியை அழைக்காத ஆளுநரின் முடிவிற்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, 2வது நாளாக இன்றும் தவெக தலைவர் விஜய் அல்லது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் காலை 11 மணியளவில் மீண்டும் ஆளுநரைச் சந்தித்தனர். அப்போது, 113 பேரின் ஆதரவு இருப்பதாக விஜய் கூறி உள்ள நிலையில் பெரும்பான்மை குறித்து கேட்டுள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 118 பேரின் ஆதரவு குறித்து ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாக தகவல் வெளியானது.
இந்தநிலையில் இதுகுறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், : “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்திருந்தார். சந்திப்பின் போது ஆட்சியமைக்க தேவையான அளவு பெரும்பான்மை தவெகவுக்கு இல்லை. ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இருப்பதை தவெக தலைவர் விஜய் நிரூபிக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
