Close Menu
    What's Hot

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கரைபுரண்டு வரும் வைகை அணை நீர் – மகிழ்ச்சியில் விவசாயிகள்
    தமிழ்நாடு

    கரைபுரண்டு வரும் வைகை அணை நீர் – மகிழ்ச்சியில் விவசாயிகள்

    Editor TN TalksBy Editor TN TalksSeptember 18, 2025Updated:September 18, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vaigai dam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து அதிக நீர் திறப்பு காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 69 அடியை எட்டியிருந்த நிலையில் தொடர் நீர்வரத்தால் அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு மேல் உயர்த்தப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் வைகை அணையில் நீர் இருப்பு அதிகம் இருந்ததன் காரணமாக வைகை அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில் உள்ள பெரியாறு பாசனப்பரப்பில் ஒருபோக பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து இன்று நீர் திறக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பெரியாறு பாசனப் பகுதியில் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கும் மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒருபோக பாசனப் பரப்பாகிய 19,439 ஏக்கர் நிலங்களுக்கும் என மொத்தமாக சேர்த்து 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதிக்காக இன்று காலை 9 மணி முதல் விநாடிக்கு 1,130 கனஅடி நீர் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டது.

    இந்த நிகழ்வில் தேனி, திண்டுக்கல், மதுரை,சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கத்தமிழ்செல்வன், தேனி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Farmers minister moorthy Vaigai Dam vaikai dam water open
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமது அருந்த பணம் தராததால் தாயை தீ வைத்து கொளுத்திய கொடூர மகன்
    Next Article ”வாக்கு திருட்டில் ஹைட்ரஜன் வெடிகுண்டு வரப்போகிறது” – ஆதாரத்துடன் கூறிய ராகுல்காந்தி
    Editor TN Talks

    Related Posts

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    பொங்கலுக்கு ரூ.5,000?. அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!. அமைச்சர் அன்பில் மகேஷ் கொடுத்த அப்டேட்!

    December 24, 2025

    பெரியாரின் சமத்துவப் பாதையில் பயணித்து, சமூக நீதியை வென்றெடுப்போம்!. விஜய் ட்வீட்!

    December 24, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    Trending Posts

    பிரமாண்டமாக தயாராகும் புராண கதையில் அல்லு அர்ஜூன்!

    December 24, 2025

    டெல்லி மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்பதல்!

    December 24, 2025

    கார்கள் மீது அரசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து! பலி 9ஆக உயர்வு!

    December 24, 2025

    ரஷ்யா உடனான போர்: அமைதி ஒப்பந்தத்தை ஏற்றது உக்ரைன்!

    December 24, 2025

    413 ரன்களை சேஸிங் செய்த கர்நாடக அணி! ஆரம்பம் முதல் அனல் பறந்த போட்டி

    December 24, 2025
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2025 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.