தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், முக்கிய கட்சிகள் சில தங்களது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன.

தவெக அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை அறிவித்த மனிதநேய ஜனநாயகக் கட்சி (மஜக) சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி, தீர்மானத்திற்கு எதிராக வாக்களிப்பதாகத் தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் (கொமதேக) சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தனும் தவெக அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை எதிர்ப்பதாகச் சபையில் அறிவித்தார்.

அதேபோல், கடந்த தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சித் (மமக) தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். சிறுபான்மையினக் கட்சிகள் மற்றும் பிராந்தியக் கட்சிகளின் இந்தத் தொடர் எதிர்ப்பு, சட்டப்பேரவை விவாதத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், மதிமுகவை சேர்ந்த 2 உறுப்பினர்கள் இன்று பேரவைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version