தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ தொடர்பான முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்புக்கு, முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், மகளிர் உதவித் தொகை வழங்குவது குறித்த கோரிக்கையை வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து பேசிய முதலமைச்சர் விஜய், முந்தைய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என்று அதிரடியாக அறிவித்திருந்தார். இதனால், மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வழக்கம்போல் வரவு வகைப்படும் என்று பெண்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், இன்று மே மாதத்திற்கான தவணைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் எனவும், அந்த திட்டத்தில் மறுசீரமைப்பு செய்யவேண்டியுள்ளது. அரசுக்கு அவகாசம் வேண்டும் என முதலமைச்சர் விஜய் விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில், மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும். ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க? திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க? மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version