மத்திய பட்ஜெட் தாக்கலாகும் நிலையில், பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்வைத்துள்ளார்.

நாட்டின் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தனது ஒன்பதாவது பட்ஜெட்டை தாக்கல் செய்து உள்ளார்.

9 வது முறையாக தன்னுடைய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் வரலாறு படைக்க உள்ளார். நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்த ஆண்டு முதல் முறையாக ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த முறையாவது நிதி ஒதுக்க முடியுமா என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?

விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி, கோவை, மதுரை மெட்ரோ இரயில்,  தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி, நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.

இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version