ஹோர்முஸ் கடல்சந்தியில் மூன்று வர்த்தகக் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்கா, ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானுடனான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் இனி நடைமுறையில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஈரான் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார்.
ஈரானுடன் மூன்று வாரங்களுக்கு முன்பு கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்து கேட்கப்பட்டபோது, “என்னைப் பொறுத்தவரை அந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்த விரும்பவில்லை. அவர்கள் மிகவும் மோசமானவர்கள்” என்று டிரம்ப் கூறினார்.
ஹோர்முஸ் கடல்சந்தியில் நடந்த கப்பல் தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்கா மேற்கொண்ட புதிய ராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்கா–ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
