Author: Editor TN Talks
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள மேல்நகர் கிராமத்தில் அதிமுக பிரமுகர் எம்.சி.ரவி என்பவரது வீட்டில் இருந்து 2 டன் செம்மரக்கட்டைகளை காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலையில் இருந்து அமிர்தி வழியாக கண்ணமங்கலம் பகுதிக்குள் கடந்த சில நாட்களாக மர்ம ஆசாமிகள் செம்மரக்கட்டைகளை கொண்டு வந்து குடோனில் பதுக்கி வைத்து, ஆந்திரா மாநிலத்திற்கு கடத்திச் சென்று வருவதாக சிறப்பு புலனாய்வு காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு காவல் துறையினர் கண்ணமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் சில தினங்களாக தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இதன் ஒரு பகுதியாக இன்று அதிமுக மாவட்டப் பிரதிநிதி எம்.சி. ரவி என்பவருக்கு சொந்தமான வீட்டை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டிற்குள் சுமார் 2 டன் செம்மரக்கட்டைகள் இருப்பது போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு…
சென்னையில் உள்ள 947 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான வாக்காளர் உதவி மையம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்பணிகளை மேற்கொள்வதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி சார்பில், வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக வாக்காளர் உதவி மையம் நவ.18-ம் தேதி முதல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையில், இந்த உதவி மையங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை மாநகரம் முழுவதும் வாக்குச்சாவடி மையங்களாக உள்ள பள்ளிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கான உதவி மையங்கள் தொடங்கி பணிகள் நடைபெற்றன. வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்வதற்கும் உரிய வழிகாட்டுதல்களையும், ஆலோசனைகளையும் வழங்கினர். பொதுமக்கள் தங்களது வாக்குச்சாடி மையங்களாக செயல்படும் பள்ளிகளுக்கு காலை முதலே…
சட்டப் பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் ‘உடன்பிறப்பே வா’ எனும் பெயரில் திமுக நிர்வாகிகளை தொகுதி வாரியாக அறிவாலயத்தில் சந்தித்து பேசி வருகிறார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுவரை 86 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ‘ஒன் டு ஒன்’ சந்தித்து நேரடி ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது, முன்வைக்கப்படும் குறைகளை சரிசெய்ய திமுக தலைமை உரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. அதன்படி தொடர்ந்து 40-வது நாளாக நேற்று நடைபெற்ற நிகழ்வில் கோவை மாவட்டத்தில் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து கலந்துரையாடினார். அப்போது எஸ்ஐஆர் பணிகள் குறித்து முதல்வர் விசாரித்தபோது, “அதிமுக பிஎல்ஏ2-க்கள் யாருமே களத்துக்கே வருவதில்லை. நமது நிர்வாகிகள் மிக தீவிரமாக பணிகளை செய்து வருகிறார்கள்” என நிர்வாகிகள் தெரிவித்தனர். அதன்பின், “கடந்த சட்டப்பேரவைத்…
தமிழகம் வரும் பிரதமரை சந்திப்பது சஸ்பென்ஸ் என்றும், பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நெல்லையில் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் எம்.பி. சத்தியபாமா மற்றும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையனிடம், “கோவை வரும் பிரதமர் மோடியை சந்திப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பியபோது “அது சஸ்பென்ஸ், பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார். மேலும், “அதிமுகவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறதே?” என்று கேட்டதற்கு, செங்கோட்டையன் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார். நெல்லையில் வஉசி நினைவு நாள் நிகழ்ச்சியில் முதன்முறையாக செங்கோட்டையன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் திருமாவளவன், அபுதாபியில் நடைபெற உள்ள குத்து சண்டை போட்டியில் பங்குபெற உள்ள இரண்டு வீராங்கனைகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்கிய பின் நிருபர்களிடம் கூறியதாவது: பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் என இரண்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து எஸ்ஐஆர் திட்டத்தை கொண்டு வந்து உள்ளனர். தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை கைவிட வேண்டும் என விசிக தொடரந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு காரணம், மிக குறுகிய காலம் மட்டுமே உள்ளது. குறுகிய காலத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பது சவாலாக உள்ளது. எஸ்ஐஆர்-ஐ கண்டித்து விசிக சார்பில் வரும் 24-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திருமாவளவன் தெரிவித்தார். சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…
கோவைக்கு இன்று (நவ. 19) வரும் பிரதமர் மோடியை, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வரவேற்கிறார். தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் மாநாடு இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைக்கிறார். இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதியம் 1.25 மணிக்கு புட்டபர்த்தியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் பிரதமரை, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். மேலும், கோவைக்கு வரும் பிரதமர் மோடியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் வரவேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரதமர் பலமுறை தமிழகத்துக்கு வந்தபோதும், அதிமுக பொதுச் செயலாளர்…
மதுரை மற்றும் கோவையின் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள பதிவில், ‘கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என மத்திய பாஜக அரசு நிராகரித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம் என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு என்று சுட்டிக்காட்டி உள்ளார். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதைமிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை மெட்ரோ பணிகளைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து…
31 வருடங்களுக்கு முன்பு சென்னையில் ஆரம்பிக்கப்பட்டு இன்று அசுர வளர்ச்சியில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் தான் காக்னிசன்ட் ஐடி நிறுவனம். கிட்டத்தட்ட மூன்றரை லட்சம் ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் அந்த நிறுவனத்தின் மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் ( நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு ) 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்பொழுது அந்த நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய கட்டமைப்பு, அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காக்னிசன்ட் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களை கண்காணிக்கும் வகையில் அந்த நிறுவனம் புதிய கருவியை கையாளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ப்ரோஹேன்ஸ் என்ற பெயர் கொண்ட அக்கருவியை கொண்டு ஊழியர்கள் மடிகணினியில் அல்லது டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் வேலை செய்கிறார்களா அல்லது செய்யவில்லையா என்பதை அந்நிறுவனம் கண்காணிக்க போகிறது. இந்தக் ப்ரோஹேன்ஸ் கருவியின் உதவியை கொண்டு ஊழியர்கள் பயன்படுத்தும் மவுஸ் அல்லது கீபோர்ட் வாயிலாக ஊழியர்களின் நடவடிக்கையை அந்நிறுவனம் கண்காணிக்கும்.…
பாலகிருஷ்ணா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘அகண்டா 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பாலகிருஷ்ணா. டிசம்பரில் வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தினைத் தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் பாலகிருஷ்ணா. இப்படத்தின் நாயகியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது படக்குழு. முழுக்க வரலாற்றுப் பின்னணியில் இப்படத்தினை பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளது படக்குழு. ‘பெத்தி’ படத்தினை தயாரித்து வரும் விருத்தி சினிமாஸ் நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரிக்கிறது. ’சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ஸ்ரீராம ராஜ்ஜியம்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து, இப்படத்திலும் பாலகிருஷ்ணா – நயன்தாரா ஜோடி இணைந்து நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை கமர்ஷியல் கதைகளை இயக்கி வெற்றி கண்டவரான கோபிசந்த் மாலினேனி இப்படத்தின் மூலம் வரலாற்று பின்னணிக் கொண்ட கதையினை இயக்கவுள்ளார். இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள்…
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல விளக்கு மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. தரிசனத்திற்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் திரண்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக தினமும் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலை கோயிலில் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், கோயில் வளாகம் முழுவதும் கடும் கூட்டம் காணப்படுகிறது. மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டு சன்னிதானத்தில் ஐயப்ப சாமியை பார்க்க முண்டியடித்து சென்று வரும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஐயப்ப பக்தர் ஒருவர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்த சதி (58) என்ற பெண் பக்தர்…