Author: Editor TN Talks
பிஹாரில் தோல்வி உறுதியாகிவிட்டதால் மீண்டும் கட்டுக் கதைகளை பரப்புகிறார் ராகுல் காந்தி என, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ம் தேதி நடக்கிறது. ‘இண்டி’ கூட்டணியின் தோல்வி உறுதியாகியுள்ளது. அந்த விரக்தியில் மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் வழக்கம் போல் வாக்கு திருட்டு என்ற பொய்யை முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார். அது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் அவரிடம் ஆதாரம் கேட்டும் கொடுக்கவில்லை. எனது வாக்கு நீக்கப்பட்டுள்ளது என பிஹாரில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அறிவித்த பின், ராகுல் காந்தியின் பொய் பிரச்சாரம் அம்பலமானது. தற்போது ஹரியானாவில் லட்சக் கணக்கான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக வழக்கம் போல பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தகவல் தொழில்நுட்ப…
அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். அவர்களது பெயர்களை வெளிப்படுத்தினால் பாதிக்கப்படுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக நிலுவையில் உள்ள மனு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு 250 பக்க கடிதம் அனுப்பியுள்ளேன். அதில் பல முக்கிய விஷயங்கள் உள்ளன. தேர்தல் ஆணைய விதிகளின்படி அவற்றை வெளியில் சொல்ல முடியாது. அடுத்தகட்ட நடவடிக்கையை பொறுத்திருந்துப் பாருங்கள். நல்லதே நடக்கும். அதிமுக கட்சி விவகாரங்களில் பழனிசாமியின் மகன், மைத்துனர், மருமகன் ஆகியோர் தலையிடுகின்றனர். அவர்கள் தொகுதி வாரியாக சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களது செயல்பாடுகள் மூத்த நிர்வாகிகளுக்கு இடையூறாக உள்ளன. அதிமுக நிர்வாகிகள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். என்னுடன் யார், யார் பேசுகின்றனர் என்பது அவர்களுக்கும், எனக்கும் மட்டும்தான் தெரியும். அதை வெளிப்படுத்தினால், அவர்கள் பாதிக்கப்படுவார்கள். நான் கடந்த 53 ஆண்டுகளாக கட்சியில்…
தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் 1983-ம் ஆண்டு நடந்த போர் காரணமாகவும் பல்வேறு காலகட்டங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் தமிழகத்துக்கு அடைக்கலம் வந்தனர். உலகின் பல நாடுகள் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளன. இந்தியாவில்தான் ஈழத்தமிழ் மக்கள் அகதி முகாம்களிலேயே ஆயுள் முழுதும் வாழ்ந்து முடிக்கிறார்கள். தற்போதைய தலைமுறையாவது சுதந்திரமாக வாழ வேண்டும். அதற்கு முதல்கட்டமாக தமிழகத்தில் தற்போது தொடங்கவுள்ள தீவிர வாக்காளர் திருத்த பணியின் போது தமிழகத்தில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவைக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் வாக்காளர் திருத்த பணியில் ஈடுபடும் ஊழியர்கள் அந்தந்த பகுதிகளுக்கு வரும்போது பாமக நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேர்தல் அலுவலர்கள் நடத்தும் கூட்டங்களுக்கு தவறாமல் சென்று…
கமல்ஹாசன் தயாரிப்பில், ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குகிறார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘அருணாச்சலம்’ படத்துக்குப் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுந்தர்.சி – ரஜினி காம்போ இணைகிறது. இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட பதிவில், “காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம் மகிழ்வோம் வாழ்வோம்! ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசஷல் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 173 படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார். இப்படத்தின் மூலம், சுந்தர்.சி இயக்கத்தில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க இருக்கிறார். சுந்தர்.சி – ரஜினிகாந்த் கூட்டணியில் 1997-ம் ஆண்டு உருவான படம் அருணாச்சலம். அது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக கரூர் சுற்றுலா மாளிகைக்கு சிபிஐ அதிகாரிகளிடம் மனு அளிக்க ஒரு ஜோதிடர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுவரை 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி கரூர் நகர இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், அக்.31-ம் தேதி வேலுசாமிபுரத்தில் உள்ள வியாபாரிகளிடம் விசாரணை நடத்தினர். அக்.31-ம் தேதி ஈரோடு சாலையை 3டி லேசர் கருவி மூலம் சாலையை அளவீடு செய்ததுடன் அப்பகுதியில் உள்ள கடைகள், நிறுவனங்கள், அலுவலகங்கள், வீடுகளில் நேரடியாக விசாரணை நடத்தி சிசிடிவி கேமரா பதிவுகளை வழங்க கேட்டனர். நவ.1-ம் தேதி முழுக்க 3டி லேசர் கருவி மூலம் அளவீடு பணிகள் மேற்கொண்டனர். நவ.2-ம் தேதி வேலுசாமிபுரம் வர்த்தகர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கரூர் காமராஜபுரத்தில்…
வழக்கறிஞர்களால் பாதிக்கப்பட்டவர்கள் பார் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். பார் கவுன்சில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் நாயர், ராணி உட்பட பலர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தங்கள் வழக்கில் வழக்கறிஞர்கள் ஆஜராக மறுப்பதால் வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரியும், வீட்டில் அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்திய வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில், ‘இந்த வழக்குகள் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் மற்றும் பிற வழக்கறிஞர்கள் சங்கங்களை சேர்ந்தவர்களின் நடத்தை தொடர்பானது. சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழக்கறிஞர்கள் ஆஜராக மறுத்துள்ளனர். சில வழக்குகளில் குற்றச் செயல்களில் வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்திற்கு எதிரான இத்தகைய குற்றச்சாட்டுகள் புதுமையானவை அல்ல. 2010ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட சில குற்றவாளிகளுக்காக…
அரசு கல்லூரிமாணவ-மாணவிகளுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி விநியோகிக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி.செழியன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது, நடப்பு கல்வி ஆண்டில் ரூ.2,000 கோடியில் 10 லட்சம் மடிக்கணினி வழங்குது குறித்தும் எந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் வழங்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
டிஎன்பிஎஸ்சி 2026-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று அதன் தலைவர் எஸ்.கே.பிரபாகர் தெரிவித்தார். தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி வாயிலாக தேர்வு செய்யப் படுகின்றனர். இதன்படி 2026-க்கான போட்டித் தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகவுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் கூறியதாவது: குருப்-4 தேர்வில் வெவ்வேறு அரசு துறைகளிடமிருந்து காலிப்பணியிடங்கள் வந்த வண்ணம் உள்ளதால் காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்கும். அதே போல், ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்விலும் காலிப்பணியிட எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. முந்தைய ஆண்டு தேர்வுகளின்போது இரண்டு அல்லது 3 ஆண்டுகளுக்குரிய காலிப்பணியிடங்கள் சேர்த்து நிரப்பப்பட்டதால் காலியிடங்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதுபோல் தோன்றியிருக்கும். தற்போது அந்தந்த ஆண்டுக்குரிய காலியிடங்கள் அதே ஆண்டில் நிரப்பப்படுவதால் காலியிடங்கள் குறைவாக இருப்பது போல் தெரியலாம். மாநில அரசு பல்கலைக்கழகங்களில் உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் டிஎன்பிஎஸ்சி வாயிலாக நிரப்ப அரசு முடிவுசெய்துள்ளது. இதற்கான கல்வித்தகுதிக்கு…
பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதன்படி, மொத்தம் உள்ள 243-ல் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிகளில் மொத்தம் 122 பெண்கள் உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். வாக்காளர்கள் எண்ணிக்கை 3.75 கோடி. மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த 2020 தேர்தலில், 121 -ல் மெகா கூட்டணி 61, தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 59 மற்றும் லோக் ஜன சக்தி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. எனவே, இந்த முதல்கட்ட தேர்தல் இரண்டு கூட்டணிகளுக்கும் மிக முக்கியமானதாக உள்ளது. முதல் முறையாக போட்டியிடும் பிராசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ்…
2026-ல் விஜய் முதல்வராக சபதம் ஏற்போம் என்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தவெகவினருக்கு அறைகூவல் விடுத்துள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று காலை கூடியது. இக்கூட்டத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து கட்சியின் உறுதிமொழி வாசிக்கப்பட்டது. அதில், “நமது நாட்டின் விடுதலைக்காகவும் நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அண்ணை தமிழ் மொழியைக் காக்க உயிர் தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மத நல்லணிக்கம்,…