Author: Editor TN Talks

திமுக இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கான 2026 தேர்தல் பணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற இருப்பதாக, திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து, புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகளுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள், பகுதி வாரியாக நடைபெற உள்ளன. மண்டலம் 1 க்கு உட்பட்ட ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள பயிற்சிப் பாசறைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதன்படி, திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ஆயிரம் விளக்கு கிழக்கு பகுதிக்கு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதிக்கு, சூளைமேடு அண்ணா நெடும்பாதை, ராகவன் தெரு, மீனாட்சி நாராயணன் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. கூட்டத்தில், வரும்,…

Read More

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் நாள் ஆட்ட முடிவில் 318 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக யாஷ்ஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 58ஆக இருந்தபோது, கே.எல்.ராகுல் 38 ரன்களில் வெளியேறினார். அதன் பின்னர் களமிறங்கிய சாய் சுதர்ஷனுடன் இணைந்து ஜெய்ஸ்வால் அபாரமாக ஆடினார். இருவரும் இணைந்து 2ஆவது விக்கெட்டுக்கு 193 ரன்கள் குவித்தனர். இதனை யடுத்து, 145 பந்துகளில் ஏழாவது…

Read More

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய வாதங்களை ஏற்று, அனைத்து தரப்புகளின் மனுக்களை பரிசீலித்து, விசாரணை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருந்தது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்தும், உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் வாதாடினர். இரண்டு நீதிபதிகளும் மனுவின் சாராம்சம் தொடர்பாக விவாதித்து வருகின்றனர். அப்போது, தவெக தரப்பு வழக்கறிஞர்கள், “இந்த விவகாரத்தில் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத ஒருவரை நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து இருக்கிறது. பல்வேறு…

Read More

பாமக நிறுவனரும், தனது தந்தையுமான ராமதாஸிற்கு ஏதாவது ஆனால் அனைவரையும் தொலைச்சிடுவேன் என்று அன்புமணி பகிரங்கமாக எச்சரித்துள்ளார். அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது. மருத்துவர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறிய ராமதாஸ் நேற்று முன் தினம் வீடு திரும்பினார். வீட்டில் ஓய்வில் இருந்து வரும் ராமராஸ கட்சி நிர்வாகிகள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் ராமதாஸை சந்திப்பவர்களை அன்புமணி பகிரங்கமாக எச்சரித்துள்ளர். சென்னை உத்தண்டியில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, “மருத்துவர் ராமதாஸ் நலமுடன் உள்ளார் ஒரு வாரத்திற்கு முன்பே அப்பாயிண்ட்மெண்ட் செய்யப்பட்டு இந்த ஆன்சியோ பரிசோதனை நடைபெற்றது. ஆனால் அவருடன் இருப்பவர்கள் அவரை காட்சி பொருள் போல அனைவருக்கும் போன் செய்து வரவழைத்து அவரை ஓய்வெடுக்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து போன் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொந்தரவுகளை…

Read More

ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள், அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்த நெதன்யாகுவை பாராட்டுவது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிவை செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன. இஸ்ரேலின் இந்த முடிவை வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “காசா பகுதியில் நடைபெற்று வரும் மனிதாபிமானமற்ற பேரழிவும், பாலஸ்தீன மக்கள்மீது நிகழ்த்தப்படும் இனப்படுகொலையும் உலகம் முழுவதும் கண்டனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் பாராட்டியிருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது. இஸ்ரேல்–ஹமாஸ் இடையிலான அமைதி ஒப்பந்தத்தை வரவேற்பதாகவும், அது நெதன்யாகுவின் ‘சிறந்த தலைமையின் விளைவாகும்’ என்றும் மோடி தனது…

Read More

கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பும் காரசார விவாதங்களை முன்வைத்தனர். முதலாவதாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு விசாரணைக்கு வந்தது. வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஷ்வரி, அஞ்சாரியா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. தமிழக அரசு சார்பில் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோஹத்கி, வில்சன், ரவீந்திரன் ஆகியோர் வாதாடினர். இரண்டு நீதிபதிகளும் மனுவின் சாராம்சம் தொடர்பாக விவாதித்து வருகின்றனர். அப்போது, தவெக தரப்பு வழக்கறிஞர்கள், “பிரசாரத்திற்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டேன் அந்த பிரசாரம் நடைபெற்றன. ஆனால் இந்த விவகாரத்தில் வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத ஒருவரை நீதிமன்றம் நேரடியாக விமர்சித்து இருக்கிறது. பல்வேறு கருத்துகளை விஜய் மீது கூறி…

Read More

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிவை செயல்படுத்தும் விதமாக பிணைக் கைதிகளை விடுவிக்கவும், போரை தற்காலிகமாக நிறுத்திக்கொள்ளவும் ஹமாஸும், இஸ்ரேலும் ஒப்புக்கொண்டன. முன்னதாக, 2023, நவம்பரில் முதல்முறையாக இருதரப்பும் தற்காலிக போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது. ஆனால், கடந்த மார்ச் மாதம் தற்காலிக போர்நிறுத்தத்தை மீறி காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தீவிரப்படுத்தியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்தப் போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அண்மையில் 20 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்தார். இதை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஒப்புக்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக கடந்த 4 நாட்களாக இருதரப்பு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டிய பாலஸ்தீன கைதிகளின் பட்டியலை ஹமாஸ் சமர்ப்பித்தது. இதற்குப் பதிலாக, 2023 அக்டோபர் தாக்குதலின்போது இஸ்ரேலில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட…

Read More

தூய்மை பணியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ரிப்பன் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராயபுரம் மற்றும் திரு.வி.க மண்டலங்களின் தூய்மை பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், மாநகராட்சி மேயருடன் தூய்மை பணியாளர்கள் நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில், போலீசார் கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி நள்ளிரவு தூய்மை பணியாளர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்து, பிறகு விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் வீடு, காலை உணவு, சிறப்பு மருத்துவ சிகிச்சை, கல்விக் கட்டணம் உட்பட 6 புதிய…

Read More

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை தள்ளி வைக்கும் படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அக்டோபர் 12ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. புதிய பாடத்திட்டங்கள் அடிப்படையில் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாலும், இத்தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று உத்தேசமாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், முன்கூட்டியே தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், தங்களால் தேர்வுக்கு தயாராக இயலவில்லை என கூறி, தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் விண்ணப்பதாரர்கள் பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நீலகண்டன், ‘தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 2 லட்சத்து 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நுழைவுச்சீட்டு தயாரிக்கப்பட்டு,…

Read More

கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உள்பட மொத்தம் 5 வழக்குகள் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. முதலாவதாக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி தமிழக வெற்றிக் கழகம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு விசாரணைக்கு வருகிறது. இரண்டாவது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பாஜக வழக்கறிஞரும், மனுதாரருமான ஜி.எஸ்.மணி தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வருகிறது. மனுவி, ‘இது அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு நடந்த துயர சம்பவம். எனவே சம்பந்தப்பட்ட அனைத்து காவல்துறை, மாவட்ட நிர்வாக துறை, மின்சார துறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிந்து முறையான நீதி விசாரணை நடக்க சிபிஐ அல்லது பதவியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு அமைக்க வேண்டும்’ என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது, சிறப்பு…

Read More