Author: Editor TN Talks
கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கின் பின்னணி: போதைப்பொருள் சப்ளையர் கெவினிடம் நீண்ட காலமாகப் போதைப்பொருள் வாங்கிப் பயன்படுத்தியதாகவும், தனது நண்பர்களுக்கும் அதைக் கொடுத்துப் பழக்கி வந்ததாகவும் நடிகர் கிருஷ்ணா மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, நேற்று கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜாமீன் மனுவில் கிருஷ்ணா முன்வைத்த வாதங்கள்: சிறப்பு நீதிமன்றத்தில் கிருஷ்ணா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், காவல்துறை தன்னைத் தவறாகக் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வழக்கிற்குத் தொடர்புடைய எந்த போதைப்பொருட்களும் தன்னிடமிருந்து காவல்துறையால்…
ஆன்லைன் முதலீட்டு மோசடியில் பொதுமக்களை ஏமாற்றியதாக, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) என்ற நபர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கோவை, சிங்காநல்லூர், திருச்சி சாலை பகுதியைச் சேர்ந்த பூர்வா அமிதி என்பவர், ஃபேஸ்புக்கில் ஒரு முதலீட்டு விளம்பரத்தைப் பார்த்து, அதில் குறிப்பிடப்பட்டிருந்த வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொண்டிருக்கிறார். மோசடி நபர்கள் நம்பிக்கையைப் பெறும் வகையில் பேசியுள்ளனர். இதை நம்பிய பூர்வா அமிதி, பல்வேறு கட்டங்களாக மொத்தம் ரூ.4,19,000 பணத்தை வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார். நீண்ட நாட்களாகியும் லாபமோ, முதலீடு செய்த பணமோ திரும்பக் கிடைக்காததால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், ஈரோடு மாவட்டம் சங்கரபாளையத்தைச் சேர்ந்த பிரதீவ் (26) என்பவர்…
அதிமுகவின் வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த முன்னாள் எம்பி வெங்கடேஷ் பாபு கட்சி பணிகளை சரிவர செய்யாததால் பொறுப்பிலிருந்து நீக்கம். இம்மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளராக முன்னாள் எம்எல்ஏ செம்பியம் பெரம்பூர் கொளத்தூர் மேற்கு பகுதியைச் சேர்ந்த வி எஸ் பாபு தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அமைப்பு ரீதியிலான மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. அதன் பின் பல ஆண்டுகளுக்கு பிறகு சென்னை மாவட்ட செயலாளரை நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. வெங்கடேஷ் பாபு கட்சி பணிகளில் அதிக கவனம் செலுத்தாமல், அவரது மாவட்டத்தில் கட்சி வளர்ச்ஞி பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்பதாலும், பூத் கமிட்டி நிர்வாகிகளை அமைக்காததாலும் நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி வெங்கடேஷ் பாபு வை கடுமையாக எச்சரித்ததாகவும் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து இன்று நீக்கப்பட்டுள்ளார். அதேபோல…
ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை சுங்கச்சாவடியில் மறு உத்தரவு வரும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடி குறித்து உள்ளூர் மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் தாக்கல் செய்த மனுவில், அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால், உள்ளூர் மக்கள் தங்கள் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும் என்றும், சாலைப் பணிகள் முறையாகச் செய்யப்படாததால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், 7 மீட்டர் அகலமாக இருந்த இருவழிச்சாலை 10 மீட்டராக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், குறுகலான வளைவுகள் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த வழித்தடத்தைச் சுங்கச்சாவடி சாலையாக மாற்றுவது…
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை (இபிஎஸ்) தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட பொதுக்குழு தீர்மானங்கள் குறித்து, தேர்தல் ஆணையம் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையின் உத்தரவு எப்போது பிறப்பிக்கப்படும் என்பதைத் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கின் பின்னணி: அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ்ஸை அங்கீகரிக்கக் கூடாது எனவும், கட்சிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கக் கூடாது எனவும் கோரி தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு உத்தரவின்படி, உள்கட்சி விவகாரங்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அதிகார வரம்பு உள்ளதா என ஆரம்பகட்ட விசாரணை நடத்த உத்தரவிட்டது. இபிஎஸ் தரப்பு புதிய மனு: உயர் நீதிமன்றம்…
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் திடீரென தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். புதுச்சேரி சட்டப்பேரவையில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன. இதில் 23 இடங்கள் புதுச்சேரியிலும், 5 இடங்கள் காரைக்காலிலும், மாஹே மற்றும் ஏனாம் இடங்களில் தலா ஒரு இடங்களென பிரிந்துள்ளன. இதுமட்டுமல்லாது 3 நியமன எம்எல்ஏக்கள் உள்ளனர். என்.ஆர். காங்கிரசின் தலைவரான ரங்கசாமி முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். பாஜகவின் ஏம்பலம் செல்வம் சபாநாயகராக உள்ளார். பாஜகவைச் சேர்ந்த ராமலிங்கம், அசோக் பாபு, வெங்கடேசன் ஆகிய மூன்று பேர் நியமன எம்எல்ஏக்களாக இருந்து வந்தனர். இந்நிலையில், மூன்றுபேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி அதற்கான கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினர். முன்னதாக பாஜக தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம், முதலமைச்சரையும், சபாநாயகரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்தே இந்த ராஜினாமா கடிதம் வழங்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக மூன்று…
மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தானாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்த தொடங்கி உள்ளது. கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் உள்ள சட்டக்கல்லூரியில் புதன்கிழமை இரவு 7.30 மணி முதல் 8.50 மணிக்குள் கல்லூரி வளாகத்தில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறையினரிடம் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம் அளித்துள்ளார். மாணவியின் புகாரின் அடிப்படையில் இரண்டு பேரை கைது செய்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் அதே கல்லூரியின் முன்னாள் மாணவர் மறறும் அக்கல்லூரியின் ஊழியர் ஒருவரையும் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த நிலையில் இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ளது தேசிய மகளிர் ஆணையம். இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கவலை அளிப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணையை நடத்த கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவருக்கு முழு மருத்துவ, உளவியல் மற்றும் சட்ட உதவியை வழங்க அறிவுறுத்தி உள்ளது.…
காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் 41வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காவிரி நீர் மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் காணொளி காட்சி மூலம் கூட்டம் நடைபெற்து. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு,கர்நாடக,கேரளா,புதுச்சேரி மாநில அதிகாரிகள் காணொளி மூலம் கலந்து கொண்டுள்ளனர். காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு நல்ல நிலையில் உள்ளதால் தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை குறைவில்லாமல் திறந்து விட வேண்டும் என தமிழகம் தெரிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய 31.24 டி.எம்.சி நீரை கர்நாடகா தங்குதடையின்றி திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்தில் தர வேண்டிய தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு கூட்டத்தில் உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு குழுவின் 117 வது கூட்டத்தில் நான் உத்தரவிட்டிருந்தது.
சென்னை ஐஐடி (IIT) வளாகத்தில் படிக்கும் 20 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ரோஷன் குமார் (22) என்ற வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஐஐடி வளாகத்தில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்று இரவு 7:30 மணியளவில் மாணவி தனியாக நடந்து வந்துகொண்டிருந்தபோது, ரோஷன் குமார் கையில் கட்டையுடன் வந்துள்ளார். அவர் மாணவியின் முடியைப் பிடித்து இழுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மாணவி சத்தமிடவே, ரோஷன் குமார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவம் குறித்து மாணவி ஐஐடி காவலாளிகளிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் ஐஐடி வளாகத்தில் உள்ள “மும்பை சாட்” (Mumbai Chaat) என்ற கடையில் பணிபுரிந்து வந்த ரோஷன் குமார் என்பது…
சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் சிலர் நடிகரும், தவெக தலைவருமான விஜய்-யின் உருவம் பொறித்த கைக் குட்டையை காண்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கலைவாணர் அரங்கில் இன்றும், நாளையும் கலைஞர் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்பு மலரை வெளியிட்டு உரையாற்றினார். கலாநிதி வீராசாமி எம்.பி.உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். அப்போது மாணவர் வரிசையில் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் திடீரென கைக் குட்டை எடுத்து மேடையை நோக்கி காண்பித்தனர். அதில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்-யின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. மேலும் தவெக கொடியின் நிறமும் இடம்பெற்றிருந்தது. இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கைக்குட்டை காட்டிய மாணவர்கள் இருவரிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடி 2 மாணவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.