Author: Editor TN Talks

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும் உயிரிழந்தனர். பயிற்சி மருத்துவர்கள் 60 பேர் வரை உயிரிழந்து இருக்க வாய்ப்பு உள்ளதால் பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனின் காட்விக் விமானநிலையம் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று பிற்பகல் 1.37 மணிக்கு புறப்பட்டது. 825 அடி உயரம் பறக்கும் வரை விமானம், கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதற்கும் மேலேபோக விமானி முயற்சித்துள்ளார். ஆனால் அது பலனளிக்காததால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்துள்ளார். அதற்குள்ளாக விமானம் 400 அடி உயரம் அளவுக்கு தடாலடியாக கீழிறிங்கியது. கட்டுப்பாட்டு அறையில் இருந்து விமானிக்கு தகவல் தந்தபோது அங்கிருந்து எவ்வித பதிலும் வரவில்லை. அதாவது விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு நிமிடத்திற்குள்ளாக மேகானி என்ற…

Read More

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கிக் கிளம்பிய ஏர் இந்தியா 171 விமானம், புறப்பட்ட ஐந்தே நிமிடங்களில் குடியிருப்புப் பகுதிக்குள் மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பயணிகள் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் பலி எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது. நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவத்தின் பின்னணி, விசாரணை அமைப்புகளால் ஆராயப்பட்டு வருகிறது. இந்த வேளையில், இந்தியாவில் இதற்கு முன் நடந்த சில விமான விபத்துகளை மீள்பார்வையிடலாம். இந்தியாவில் விமான விபத்துகள் இந்தியாவில் நிகழ்ந்த முதல் விமான விபத்து 1938-ம் ஆண்டு நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 7 1938-ம் ஆண்டு வியட்நாமிலிருந்து பாரிஸ் நோக்கிச் சென்ற பிரெஞ்சு விமானம் மத்திய பிரதேசம் அருகே நடுவானில் விபத்துக்குள்ளானது. அதில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் 1949-ம் ஆண்டு இந்தோனேஷிய விமான விபத்தில் 49 பேரும்,…

Read More

✈️ அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.17 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது ✈️ பிற்பகல் 1.38 மணியளவில் 825 அடி உயரத்தை விமானம் எட்டியதும் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது ✈️ கீழே விழுந்து கட்டிடங்கள் மீது மோதியதில் எரிபொருள் தீப்பற்றி, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது ✈️ விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இருந்துள்ளார். ✈️ உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவு ✈️ விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது ✈️ மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ✈️ விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி பெரும் சேதம். ✈️ விடுதி அறையில் தங்கியிருந்த பல மருத்துவ மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல். ✈️ விபத்தில்…

Read More

குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் அம்மாநில முதலமைச்சம் பூபேந்திர படேலுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். குஜராத்தின் அகமதாபாத் நகரில் இருந்து லண்டன் நோக்கி இன்று மதியம் 1.38 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே குடியிருப்புகளில் விழுந்து விபத்துக்குள்ளானது. பெரும் தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது. இதில் பயணித்த 242 பணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட விபத்தா? தீவிரவாதிகளின் சதிவேலையா? என்பன உள்ளிட்ட கோணத்தில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபாணியும் பயணித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது நிலைமை என்ன ஆனது என்றும் தெரியவில்லை.

Read More

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று பிற்பகல் 1.17 மணிக்கு புறப்பட்டது. சில நிமிடங்களிலேயே அகமதாபாத்தின் குடியிருப்பு பகுதிகளில் விமானம் தாழப்பறந்து கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது. அகமதாபாத் லண்டன் காட்விக் வழித்தடத்தில் ஏர் இந்தியாவின் AI 171 விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர்இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 13.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர்…

Read More

✈️ அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.17 மணிக்கு விமானம் புறப்பட்டுள்ளது ✈️ பிற்பகல் 1.38 மணியளவில் 825 அடி உயரத்தை விமானம் எட்டியதும் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது ✈️ கீழே விழுந்து கட்டிடங்கள் மீது மோதியதில் எரிபொருள் தீப்பற்றி, பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது ✈️ விமானத்தில் குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி இருந்துள்ளார். ✈️ உள்துறை அமைச்சர் அமித்ஷா, விமான போக்குவரத்து அமைச்சர் ஆகியோர் அகமதாபாத் செல்ல பிரதமர் மோடி உத்தரவு ✈️ விபத்தை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது ✈️ மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ✈️ விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது மோதி பெரும் சேதம். ✈️ விடுதி அறையில் தங்கியிருந்த பல மருத்துவ மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக முதற்கட்ட தகவல். ✈️ விபத்தில்…

Read More

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று குடியிருப்பு பகுதியில் நொறுங்கி விழுந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் பதற்றத்திற்கு உள்ளாக்கி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் நோக்கி ஏர் இந்தியா விமானம் ஒன்று இன்று பிற்பகல் 1.17 மணிக்கு புறப்பட்டது. சில நிமிடங்களிலேயே அகமதாபாத்தின் குடியிருப்பு பகுதிகளில் விமானம் தாழப்பறந்து கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் தீப்பிழம்புடன் வெடித்து சிதறியது. அகமதாபாத் லண்டன் காட்விக் வழித்தடத்தில் ஏர் இந்தியாவின் AI 171 விமானம் விபத்துக்குள்ளானதாக ஏர்இந்தியா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அகமதாபாத்தில் இருந்து மதியம் 13.38 மணிக்குப் புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர் என்றும், பயணிகளில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர்…

Read More

கலைக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து கலை மற்றும் திரைத்துறைக்கு பல திறமைகள் அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையை சேர்ந்த தீபா பாலு திரைத்துறைக்கு தவிர்க்க முடியாத அறிமுகம். ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட்பீட்’ வெப்தொடரில் டாக்டர் கதாபாத்திரத்தில் அவரது நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. கல்லூரியில் தீபா படித்துக் கொண்டிருந்தபோது, நாக்கவுட் யூடியூப் சேனலில் அவர் நடித்த ‘தேன்மிட்டாய்’ சீரிஸ் அனைவரையும் ரசிக்க வைத்தது. கோவிட் காலக்கட்டத்தில் ஹிட் ஆன இந்த சீரிஸ் மூலம் அவருக்கு ரசிகர்கள் உருவானதுடன் திரைத்துறையினர் கவனத்தையும் தீபா கவர்ந்தார். ஹாட்ஸ்டார் வெப்சீரிஸூக்காக எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் ஷியாம் தீபாவை தொடர்பு கொண்டதுதான் அவர் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த கதாபாத்திரத்தை அவரோடு தொடர்புபடுத்திக் கொள்ள முடிந்ததால் எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனே ஒத்துக் கொண்டார். முதல் நாள் மிகவும் நம்பிக்கையுடன் அந்த கதாபாத்திரத்தை நடித்துக் கொடுத்தார். படக்குழு அவரது நடிப்பை பாராட்டி உத்வேகம் கொடுக்க…

Read More

அணைகளை தூர்வாரி பராமரிக்கவும், அதற்கான திட்டங்களை முறையாக செயல்படுத்தவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். ஆழியாறு, அமராவதி, பவானிசாகர், கல்லணை உள்ளிட்ட 11 அணைகளை உடனடியாக தூர்வாரி, நீர் கொள்ளும் பரப்பை மேம்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த அணைகளில் மணல், சகதி, களிமண் தேங்கியுள்ளது. இதனால் தண்ணீர் வீணாகும் நிலை உருவாகியுள்ளது. ஆற்றுப்படுகை அருகே வசிப்போரும் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ளனர். அணைகளைத் தூர்வாரவும், பராமரிக்கவும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தலைமை செயலருக்கு அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழகத்தில் உள்ள 11 அணைகளையும் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம், சுப்பிரமணியம், மரிய கிளாட்…

Read More

திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோயில் குடமுழுக்கை தாய்த்தமிழில் நடத்த வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி நடத்தவிருந்த அறப்போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு; இதுதான் திராவிட மாடல் திமுக அரசு தமிழை வளர்க்கும் முறையா? என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி மற்றும் தெய்வத்தமிழ் பேரவை இணைந்து தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமான் கோயில் குடமுழுக்கை தாய்த்தமிழில் நடத்த வலியுறுத்தி வருகின்ற 14-06-2025 அன்று திருச்செந்தூரில் நடத்தவிருந்த அறப்போராட்டத்திற்கு திமுக அரசு அனுமதி மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. முதலில் போராட்டம் நடத்த அனுமதித்த காவல்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்ட பிறகு, கூட்டம் நடப்பதற்கு ஒரிரு நாட்களுக்கு முன்பு அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயம்? முதலிலேயே காவல்துறைக்குத் தெரியாதா குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கலாமா? கூடாதா என்று? அந்த இடத்தில் போராட்டம் நடத்தக்கூடாதென்றால் மாற்று…

Read More