Author: Editor TN Talks
தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி அரசு மருத்துவமனையை மக்கள் பயன்படுத்தும் வகையில் இயங்கச்செய்யாமல் தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தி வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 2020ஆம் ஆண்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தி, மாவட்ட மருத்துவக் கல்லூரியாக மாற்றப்படுவதாக அறிவித்த தமிழ்நாடு அரசு, அதே ஆண்டு சட்டப்பேரவையில் திருத்தணி அரசு பொது மருத்துவமனையைத் தரம் உயர்த்த 45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தீர்மானமும் நிறைவேற்றி, ஒப்பந்தமும் விடப்பட்டது. இதற்கிடையே தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக அரசு அமைந்த பிறகு கடந்த ஏப்ரல் மாதம் காணொளிக் காட்சி வாயிலாக தமிழ்நாடு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் தரம் உயர்த்தப்பட்ட திருத்தணி மருத்துமனையைத் திறந்து வைத்தார். ஆனால், அதன்பிறகும் கடந்த இரு மாதங்களாக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மின்வசதி இல்லாத காரணத்தால் இன்னும் திறக்கப்படவில்லை. மக்கள் பயன்பாட்டுக்கு இல்லாத மருத்துவமனை யாருக்காக? எதற்காக? தரம் உயர்த்த தமிழ்நாடு…
குறவர் சமூக மக்கள் கொடுத்துள்ள மனுவை பரிசீலனை செய்ய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மனு பரிசீலனை செய்யும் வரை அப்பகுதி மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கக் கூடாது – நீதிபதி உத்தரவு வேந்தோணி பகுதியை சேர்ந்த சோலையப்பன் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனு. நாங்கள் குறவர் சமூகத்தை சார்ந்தவர்கள் எங்கள் சமூகத்தின் பலர் நாடோடிகளாக இருந்து வருகின்றனர் இந்நிலையில் இந்த பகுதியைச் சேர்ந்த குறவர் இனத்தை சார்ந்தவர்கள் கடந்த 1984 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கி எங்களுக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா வேந்தோணி பகுதியில் குடியிருக்க பட்டா வழங்கப்பட்டது வழங்கப்பட்ட இடத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வருகின்றோம் இந்நிலையில் கடந்த ஜூன் 2024 ஆம் ஆண்டு முதல் எங்களை இந்த பகுதியில் இருந்து காலி செய்ய மாவட்ட நிர்வாகம் வற்புறுத்தி வருகிறது எங்களை காலி செய்து விட்டு…
”நான் தப்பி ஓடியவன் தான்.. ஆனால் திருடன் அல்ல. உண்மையில் ஏமாற்றப்பட்டவன் நான் தான்” என்று பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா எழுப்பியிருக்கும் பரிதாபக் குரல் சமூக ஊடகங்களில் கவனம் பெற்றிருக்கிறது. அவரை விட அதிக அளவில் கடன் வாங்கி மோசடி செய்த அனில் அம்பானி இந்தியாவில் சுதந்திரமாகச் உலவும்போது விஜய் மல்லையாவுக்கு மட்டும் ஏன் ஓடி ஒளிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது? இதன் பின்னணியை விரிவாகப் பார்ப்போம். கிங் ஃபிஷர் நிறுவனரும் பெரும் தொழிலதிபருமான விஜய் மல்லையா, கடந்த 2016-ம் ஆண்டு வங்கிகளிடம் தாம் வாங்கிய ரூ.11,000 கோடி மதிப்பிலான கடனைச் செலுத்த முடியாமல் இந்தியாவை விட்டு வெளியேறினார். கடந்த 9 ஆண்டுகளாக அவர் இந்தியா திரும்பாததால் ஓடி ஒளிந்து கொண்டவர் என்று சமூகத்தின் பார்வையிலும், பொருளாதாரக் குற்றவாளி என்று சட்டப்படியும் கருதப்படுகிறார். தற்போது லண்டனில் வசிக்கும் அவர், அண்மையில் ராஜ் ஷமானி என்ற யூடியூபருடன் நேர்காணல் ஒன்றில் பங்கேற்றார்.…
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக அனைத்து போக்குவரத்து கழகம் மேலாண் இயக்குனர்களுடன் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் கூடுதலாக இல்லாததால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை எனவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து பதிவு வெளியிட்டிருந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். கிளாம்பாக்கத்தில் நடந்த சம்பவம் என்ன எவ்வளவு பேருந்துகள் தினசரி இயக்கப்படுகிறது இரவு நேரங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் எண்ணிக்கைகள் தொடர்பாகவும் கூடுதல் பேருந்துகளை இயக்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்…
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் திரு. டாக்டர் K.G. அருண்ராஜ் Ex IRS. அவர்கள், கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் (Propaganda & Policy General Secretary) பொறுப்பில் நியமிக்கப்படுகிறார். pic.twitter.com/BdJ0APIeEz — TVK Vijay (@TVKVijayHQ) June 9, 2025 இவர். எனது உத்தரவு மற்றும் ஆலோசனைக்கு இணங்க, கழகப் பொதுச் செயலாளர் திரு. என்.ஆனந்த் அவர்களது வழிகாட்டுதலின்படி, கழகக் கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல்திட்டப் பணிகளை மேற்கொள்வார். கழகத் தோழர்களும் அனைத்து நிலை நிர்வாகிகளும் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் புதிதாக இணைந்தவர்கள் பற்றிய விவரம்:- 1. திருமதி R. ராஜலட்சுமி B.Com., B.L.. M.B.A. அவர்கள் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் 2.…
சென்னை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2024 ஜூன் வரை நிலுவையில் உள்ள முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை? எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன? எத்தனை வழக்குகளில் புலன் விசாரணை நிலுவையில் உள்ளன என்ற விவரங்கள் குறித்து ஜூலை 8ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நொளம்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்க நிதியில் முறைகேடு செய்ததாக புகார் அளித்த குடியிருப்பு உரிமையாளரான நாங்குநேரியைச் சேர்ந்த வானமாமலை என்ற பட்டியலினத்தைச் சேர்ந்தவரை, அவமானப்படுத்தும் வகையில், குடியிருப்பு உரிமையாளர் ஒருவர் whatsapp குரூப்பில் சாதி ரீதியிலான கருத்துக்களை பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அளித்த புகார் மீது நொளம்பூர் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி வானமாமலை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், புகார் மீது நடவடிக்கை…
11 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் விஜயமங்கலத்தில் வேளான் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைக்கிறார் 12 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் ஆணையை பாசன வசதிக்காக திறந்து வைக்கிறார் சட்டமன்ற தேர்தல் வர இருக்கும் நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கள ஆய்வு மற்றும் புதிய திட்டங்களை துவக்கி வைத்து வருகிறார். அந்த வகையில் வரும் 11, 12 ஆகிய தேதியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சேலம் மற்றும் ஈரோடு சென்று பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதற்காக 11 ஆம் தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருப்பூர் செல்கிறார் திமுக பிரமுகர் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொல்கிறார். தொடர்ந்து, சாலை வழியாக ஈரோடு செல்லும் முதலமைச்சர் ஈரோட்டில் இரண்டு நாட்கள் நடைபெற…
இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ கடந்த ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சிவபிரகாஷ் இயக்கியுள்ள இப்படத்தில் ஷாலி நிவேகாஸ், மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். சாதீய தீண்டாமை குறித்து பேசும் முக்கியமான சமூக விழிப்புணர்வுப் படம் என்பதாலேயே, இப்படம் தமிழக அரசியலின் முக்கியமான மூன்று தலைவர்களால் பாராட்டப் பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இந்தப் படத்தைப் பார்த்து, தங்கள் கட்சியினருக்கும் இதனைப் பார்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதைப்பற்றி இயக்குநர் தங்கர் பச்சான் கூறும்போது, “வேறுபட்ட கொள்கைகள் கொண்ட மூன்று தலைவர்களும் இப்படத்தை ஆதரித்து பாராட்டுவது, இதன் சமூக முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆனால் ஊடகங்கள் இப்படத்தை ஏன் கவனிக்கவில்லை என்பது புரியவில்லை.…
இடுக்கி மாவட்டம் அணைக்கரை அருகே, தண்ணீர் இல்லாத 15 ஆழ மொட்டை கிணற்றில் நாயோடு சேர்ந்து தவறி விழுந்த புலியை தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனத்துறையினர் துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி பிடித்து மீட்டனர். தமிழக -கேரள எல்லையை இணைக்கும் இடுக்கி மாவட்டம் வண்டன்மேடு பஞ்சாயத்திற்கு உட்பட்ட அணைக்கரை செல்லார் கோயில் அருகே உள்ளது மைலாடும்பாறை மலைப்பகுதி. இங்கு சன்னி என்பவருக்கு சொந்தமான ஏலக்காய தோட்டம் உள்ளது.இந்த தோட்டத்தில் புலி உறுமல் புதிதாக உள்ளது கண்டு சன்னி குடும்பத்தினர் அச்சம் கொண்டனர். தேடியதில், தண்ணீர் இல்லாத 15 அடி ஆழமுள்ள மொட்டை கிணற்றில், புலியும்,நாய் ஒன்றும் விழுந்து கிடப்பதை கண்டுள்ளனர். தகவல் கிடைத்ததும் நிகழ்விடம் வந்த வனத்துறையினர் புலிக்கும், நாய்க்கும் துப்பாக்கி மூலம் லாவகமாக மயக்க மருந்து செலுத்திப் பிடித்து மீட்டனர். பிடிபட்ட புலி மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் புலி எனவும், மருத்துவ பரிசோதனைக்குப் பின் புலி,…
மேற்குமாவட்டங்களில் தோட்ட வீடுகளை குறிவைத்து கொலை, கொள்ளை திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என இபிஎஸ் கேள்வி.. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் , தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளை குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை- கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தி வருமாறு.. நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாள் அவர்களின் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை KMCH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு இரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், நம் அதிமுக…