Author: Editor TN Talks
நீலகிரி தொகுதி எம்.பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015-ம் ஆண்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் ஆ.ராசா மற்றும் அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரோமட்டர்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பார் லிமிடெட் ஆகியோருக்கு எதிராக கடந்த 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிக்கையில், குற்றம்சாட்டப்பட்ட காலத்தில் ஆராசா வருமானத்திற்கு அதிகமாக 579 சதவீதம் அதாவது ரூ.5.53கோடி சொத்து குவித்துள்ளதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இந்த வழக்கு சென்னை எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. ஆ.ராசா தரப்பில், வருமான வரி கணக்கு விவரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால் இந்த வழக்கின் சில ஆவணங்களை வழங்க வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு சிபிஐ தரப்பில்,…
இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்தே சர்ச்சை தான். மாநாட்டிற்கு எதிர்ப்பு, அனுமதி மறுப்பு, நீதிமன்றத்தில் முறையீடு, நிபந்தனைகள் விதிப்பு, நிபந்தனைகள் தளர்வு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பேசுபொருளாய் உருவெடுத்தது முருக பக்தர்கள் மாநாடு. இதுவே அந்த மாநாட்டிற்கு கூடுதல் முக்கியத்துவத்தையும் கொண்டு வந்து சேர்த்தது. மதுரை பாண்டிமா கோயில் அம்மா திடலில் மாநாடு நடந்தது. அவ்விடத்தில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை நிறுவியது மாநாட்டுக்குழு. இதுபோதாதா தென்மாவட்டத்தில் இருந்து சாரைசாரையாய் படையெடுத்தனர் பக்தர்கள். இதுமட்டுமல்லாது திருப்பரங்குன்றம் கோயிலின் முகப்பு போன்று மாநாட்டு மேடையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை தனது அரசியல் ஆயுதமாக பாஜக கையில் எடுத்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று இருக்க முடியும்? ராமருக்கு பதில் முருகன் இந்துக்களின் வாக்குகளை அணிதிரட்டுவதே பாஜகவின் பிரதான அரசியல் பாணி. வடஇந்தியாவில் ராமர் பெயரை வைத்துதான்…
துரித உணவுகளால் நிறைந்திருக்கும் நம் உணவுச் சந்தையில் இயற்கை உணவுகள் இப்போது மவுசு பெற்றுள்ளன. குறிப்பாக, பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். இதுவே தரமான இயற்கை உணவு, சமையல் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது, அதே பெயரில் ஏமாற்றும் போலிகளையும் உருவாக்கியுள்ளது. அப்படி ஏமாற்றப்பட்ட குரல் ஒன்றுதான் அண்மையில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பரிதாபமாக ஒலித்தது. தமிழ்நாட்டில் இன்று திரும்பிய பக்கமெல்லாம் உணவுக் கடைகள். பிரியாணிக் கடைகள், துரித உணவுக் கடைகள், பாரம்பரிய உணவுக் கடைகள் எனக் கொஞ்சூண்டு இடமிருந்தாலும் உணவுக் கடை போடலாம் என்ற தொழில் கலாசாரம் வளர்ந்திருக்கிறது. ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற செயலிகளின் உதவியால், கடை கூட வேண்டாம் வீட்டிலேயே கிளவுட் கிட்சன் ஏற்படுத்தி உணவுகளை விற்பனை செய்யலாம் என்ற அளவு உணவுச் சந்தை வளர்ந்துகொண்டே இருக்கிறது. இப்படி அசுர வளர்ச்சி காணும் இதே இடத்தில்தான் கலப்படம், போலி, ஏமாற்றுகளும்…
உலக அமைதி ஒரு மெல்லிய நூலிழையில் தொங்கிக் கொண்டிருக்கிறது என்ற நிதர்சனம், இன்று உலக மக்களின் மனதிலும் மேலோங்கி நிற்கிறது. “உலகின் தலையில் மெல்லிய இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது அணுகுண்டு” என்ற கவிதை வரிகள், அணு ஆயுதப் போரின் சாத்தியக்கூறுகள் எந்த அளவுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றன என்பதை உணர்த்துகின்றன. வல்லரசுகளின் ஒரு சிறிய தவறான முடிவும் உலகையே பேரழிவுக்குள் தள்ளிவிடும் என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது. ஈரானில் அமெரிக்காவின் அவசர நடவடிக்கை – உலகை உலுக்கும் சர்ச்சை! சமீபத்தில், ஈரானின் அணுசக்தித் தளங்கள் மீது அமெரிக்கா டொமாஹக் ஏவுகணைகளை வீசி அவசரப்பட்டுவிட்டதாக வெளியான தகவல்கள் (கவிதையில் குறிப்பிடப்பட்டது போல), சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன. “வக்கிர மனங்களால் உக்கிரமாகுமோ யுத்தம்?” என்ற கேள்வி, ஒரு சில தனிநபர்களின் தீய எண்ணங்களால் உலகப் போர் வெடிக்குமோ என்ற உலக நாடுகளின் கலக்கத்தைப் பிரதிபலிக்கிறது. இத்தகைய திடீர் ராணுவ நடவடிக்கைகள் பிராந்திய…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பட்டாளம்மன்,ஸ்ரீ முத்தையா கோவில் உள்ளது. இந்த ஊரில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் ஒன்றாக இணைந்து இத்தனை ஆண்டுகளாக திருவிழா கொண்டாடி வந்தனர். திருவிழா நடைபெறும்போது குறிப்பிட்ட இரண்டு சமுதாய மக்களிடையே தொடர்ந்து பிரச்சனை எழுந்து வந்தது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவிலை இந்துசமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. அப்போது முதல் கோவில் திருவிழா நடத்தப்படாமலேயே காலம் தாழ்த்தப்பட்டு வந்தது. மேலும் குடமுழுக்கும் நடைபெறவில்லை. இந்த நிலையில் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என்றும், கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இந்தக் கோவிலில் கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறை ஒப்புதல் அளித்தது. இந்த நிலையில் இந்தக் கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமனம் செய்யப்பட்ட நிலையில்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் வாரியாக கள ஆய்வை மேற்கொண்டு வருகிறார். வரும் 25 & 26 ம் தேதி வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வை மேற்கொண்டு பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 25 ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் காட்பாடி செல்கிறார். கள ஆய்வை முடித்துவிட்டு 26 ம் தேதி திருப்பத்தூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் சென்னை திரும்ப உள்ளார். அரசியல் கட்சித் தலைவர்கள் எத்தனை விதமான வாகனங்களில் பயணித்தாலும் ரயில் பயணம் என்பது எப்போது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. விமானத்தில் பயணித்தாலும் காரில் பயணித்தாலும் கிடைக்காத கள தகவல்கள், மக்கள் சந்திப்புகள் ரயில் பயணங்களில் கிடைக்கும் என்பது முதல் கருத்து. இரண்டாவது சுதந்திர போராட்டம் காலந்தொட்டு பெருந்தலைவர்கள் பலரும் ரயிலில் பயணித்தே மக்களிடம் தங்கள் கருத்துக்களை கொண்டு…
தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து நடிகரும், தவெக தலைவருமான விஜய் செய்தி வெளியிட்டுள்ளார். My heartfelt thanks to all the Political leaders, Film and Media industry friends, well-wishers, En Nenjil Kudiyirukkum my dear beloved @TVKPartyHQ members and followers from across the world for your overwhelming love and birthday wishes! Your support fuels my journey to serve… — TVK Vijay (@TVKVijayHQ) June 23, 2025 இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள செய்தியின் விவரம் வருமாறு.. என் பிறந்தநாளையொட்டி வாழ்த்து கூறிய அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகம் மற்றும் ஊடக உலகத்தைச் சேர்ந்த நண்பர்கள், நலம் விரும்பிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்கள், தவெக தலைமைச் செயலக நிர்வாகிகள்,…
உலகின் தலையில் மெல்லிய இழையில் ஆடிக்கொண்டிருக்கிறது அணுகுண்டு “வக்கிர மனங்களால் உக்கிரமாகுமோ யுத்தம்” கலங்குகிறது உலகு ஈரானின் அணுசக்தித் தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள்வீசி அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி தான் கட்டமைத்த நாகரிகத்தைத் தானே அழிப்பதன்றி இதுவரை போர்கள் என்ன செய்தன? போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம் அணுகுண்டு முட்டையிடும் அலுமினியப் பறவைகள் அதனதன் கூடுகளுக்குத் திரும்பட்டும்
திருச்சி ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே நடைபெற்று வரும் பொறியியல் பணிகள் காரணமாக, சில ரயில் சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட ரயில் சேவைகள்: திருச்சி – காரைக்கால் டெமு ரயில் (வண்டி எண் 76820): இன்றும் (திங்கட்கிழமை), ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதாவது, திருவாரூர் – காரைக்கால் இடையே சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் – திருச்சி டெமு ரயில் (வண்டி எண் 76819): இன்றும், ஜூன் 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளிலும் இந்த ரயில் காரைக்கால் – திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருவாரூரில் இருந்து மாலை 4.15…
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்; திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள்.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கண்டனம்..
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. தமிழ் நாடு “நம்பர் ஒன்” மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன. ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்’ என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன ? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ? விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும்…