Author: Editor TN Talks

அதிமுக ஆட்சி அமைந்ததும் கள்ளச்சாராயம் அறவே இல்லை என்ற நிலைக்கு தமிழ்நாடு மீண்டும் வரும்- இது தமிழ்நாட்டு மக்களுக்கு நாங்கள் அளிக்கும் வாக்குறுதி மட்டுமல்ல, மரணித்த 67 உயிர்களுக்குமான நீதியும் அதுவே! என்று அதிமுக கூறியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்து ஓராண்டு ஆனதையொட்டி அதிமுகவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு.. கள்ளக்குறிச்சி கருணாபுரம் கண்ணீரில் மூழ்கி இன்றோடு ஓராண்டு!.. 67 உயிர்கள் மரணித்தது கள்ளச்சாராயத்தால் மட்டும் அல்ல. தன் நிர்வாகத் திறமின்மையை மறைக்க பச்சைப்பொய் சொன்ன இந்த ஸ்டாலின் அரசின் கள்ளத்தனத்தாலும் தான்! மரக்காணம் மரணங்களின் போதே திருந்தாத திமுக அரசின் அலட்சியம், கள்ளக்குறிச்சியில் 67 உயிர்களைக் காவு வாங்கியது! கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயப் புழக்கம் இருப்பதை எதிர்க்கட்சியாக எச்சரிக்கை விடுத்தோமே- அந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கிடப்பில் போட்டதால் வந்த உயிரிழப்புகள் தானே இவை? சிபிஐ விசாரணை வேண்டும் என்ற அதிமுக…

Read More

திருத்தணி சிறுவன் ஆள்கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் கைது நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதேசமயம் பணியிடை நீக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் ஆள்கடத்தல் வழக்கில் ஏடிஜிபிக்கு உள்ள தொடர்பை சிபிசிஐடி போலீசார் விசாரிப்பார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாவில் பழக்கமான தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ம் தேதி பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனை அறிந்த பெண்ணின் பெற்றோர், கூலிப் படையை ஏவி, கடந்த 6-ம் தேதி தனுஷின் வீட்டை அடித்து நொறுக்கியதோடு, அங்கிருந்த தனுஷின் சகோதரனை கடத்தி சென்றனர். இது தொடர்பாக தனுஷின் தாய் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில் பெண் வீட்டாருக்கு ஆதரவாக இருந்ததாக புரட்சி பாரதம் கட்சி தலைவரும், கே.வி.குப்பம் எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி மீதும் புகார்…

Read More

கூடுதல் டிஜிபி ஜெயராம் தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்கும் என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று தகவல் தெரிவித்துள்ளது. அதே சமயம், ஜெயராம் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் வாதம்: தமிழக அரசு தரப்பில், “ஜெயராம் தொடர்பான எந்தெந்த வழக்குகள் என்பதை நாங்கள் கூற விரும்பவில்லை. ஆனால், பல்வேறு வழக்குகளில் உயர் நீதிமன்றம் நேரடியாக விசாரணையை எடுத்துக்கொண்டு, சில உத்தரவுகளைப் பிறப்பித்து, நாங்கள் இவ்வாறுதான் செயல்பட வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது போல் உள்ளது,” எனக் கூறி அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. கூடுதல் டிஜிபி ஜெயராம், உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை என்றும், அகில இந்திய சேவை விதிகள் அடிப்படையிலான விசாரணையைக் கருத்தில் கொண்டுதான் அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் அரசு தரப்பு உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்டது. ஜெயராம் தரப்பு வாதம்:…

Read More

முன்னாள் முதலமைச்சரும், அதிமுகு பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டவர்கள் மீதும், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாமீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இதற்காக போராட்டம் நடைபெறும் என்றும் கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தெரிவித்தார். கடந்த 17 ஆம் தேதி திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைதளங்களில் கார்ட்டூன் ஒன்றை பதிவேற்றினர். அது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை களங்கப்படுத்தும் விதமாக இருந்ததாக அதிமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதை கண்டிக்கும் விதமாக அவதூறு பரப்பியவர் மீதும் அதன் துறை அமைச்சரான டி.ஆர்.பி.ராஜாமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்று கோவை மண்டல அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விக்ணேஷ் சுப்பையன் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தற்பொழுது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும், கஞ்சா,…

Read More

கோவை வடக்கு மாவட்ட தி.மு.கவில் அதிருப்தியாளர்கள் ஒன்றிணைந்து கூட்டம் போட தயாராகி வருகின்றனர். கோவை தெலுங்குபளையம் S.J மண்டபம் பின்புறம் உள்ள இடத்தில் வரும் 22-ந் தேதி இந்த கூட்டம் நடக்கவுள்ளது. கோவை வடக்கு மாவட்ட செயலாளர் ரவியை நீக்க கோரி இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்ப உள்ளதாம். தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் உள்ள அதிருப்தியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள், அணிகளின் மாவட்ட துணை அமைப்பாளர்கள், முன்னாள் வட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் மூத்த முன்னோடிகளை சந்தித்து கூட்டத்திற்கு முறைப்படி அழைப்பு விடுத்து வருகின்றனர். அதிருப்தியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுகவை மீட்க வருகை தந்து ஆதரவளிக்க வேண்டுகிறோம். என்று வாசகத்துடன் திமுக நிர்வாகிகளின் அலைபேசி எண்ணுடன் தொண்டாமுத்தூர் தொகுதி திமுக கழக முன்னோடிகள் குழுவில் பகிர்ந்து வருகின்றனர். கோவையில் உள்ள தி.மு.க முகநூல் பக்கம், வாட்ஸ்-அப் குரூப்புகளில் இந்த செய்தி பரவி வருகிறது.

Read More

உயர்கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில், “மனு கொடுத்தா குப்பை தொட்டிக்கு தான் போகுது” என்று பெண் ஒருவர் ஆவேசமாக பேசினார். நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தும்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊரகப் பகுதிகளுக்கான மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். இதேபோன்று கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் குறிச்சி, ஊராட்சியில் உள்ள பி ஆர் புரம் ஊராட்சி திருக்குவளை, கிராமத்தில் உள்ள சமுதாய கூடம் ஆகிய இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றத. முகாமில் மனு அளிக்க வந்த பெண் தங்கள் வசிக்கும் பகுதியில் குடிநீர் மாதம் ஒருமுறை வருவதாகவும் மின் விளக்கே எரிவது கிடையாது என்றும் கூறினார். புகார் செய்தால் போலீசில் பிடித்து கொடுத்து விடுவதாக மனு…

Read More

“தக் லைஃப்” திரைப்படத்துக்கு கர்நாடகாவில் விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரான பட தயாரிப்பாளர் தரப்பு:- கர்நாடக அரசு தரப்பு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் அடிப்படையில் பாதுகாப்பு என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் திரைப்படம் வெளியாவதற்கும் உறுதுணையாக இருப்போம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே அந்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கக்கூடிய அந்த விஷயங்களை ஏற்கிறோம். நீதிபதிகள் :- அப்படியெனில் வழக்கை முடித்து வைத்து விடலாமா? மனுதாரர் மகேஷ் ரெட்டி தரப்பு :- இதுபோன்று தொடர்ச்சியாக பல நேரங்களில் முட்டுக்கட்டை ஏற்பட்டு வருகிறது எனவே வரும் காலத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை நீதிமன்றம் வகுக்க வேண்டும். மேலும் படம் இவ்வளவு தாமதமாக வெளியிடும் போது அதன் மார்க்கெட் போய் விடுகிறது எனவே அதற்கான இழப்பீட்டையும் உறுதி செய்யும் வகையில் வழிகாட்டு நெறிமுறை…

Read More

ஓதுவார்களை ஓரமாக நிற்க வைத்து முற்றோதல் செய்து ஏமாற்றும் திமுக அரசின் வெற்று அறிவிப்பை ஏற்க முடியாது. திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு நன்னீராட்டில் அன்னைத்தமிழ் கோபுர கலசம் ஏற வேண்டும்.. மொழி என்பது நம் இனத்தின் உயிர் உரிமை; அதைப் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழ் மகனின் பிறப்புரிமை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு.. தமிழ் இறையோன் திருச்செந்தூர் திருமுருகப்பெருமானுக்கு தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டுமென்று நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணியும் – தெய்வத்தமிழ் பேரவையும் இணைந்து திருச்செந்தூரில் முன்னெடுத்த அறப்போராட்ட பொதுக்கூட்டத்தினால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியின் விளைவாக , தற்போது திருச்செந்தூர் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக தமிழ்த்திருமுறைகள் முற்றோதல் நடைபெறும் என்றும், அதுதான் தமிழ் குடமுழுக்கு என்றும் ஏமாற்றும் வெற்று அறிவிப்பினை திமுக அரசு வெளியிட்டிருப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது.…

Read More

இது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கோவையில் ‘அரபுக் கல்லூரி’ என்ற போர்வையில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்காக 4பேர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் எனும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 2022ம் ஆண்டு கோவை அருள்மிகு கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த பயங்கரவாத குண்டு வெடிப்புத் தாக்குதலை, வெறும் சிலிண்டர் விபத்து என தி.மு.க., அரசு பூசி மொழுக முயன்ற நிலையில், அதற்கு அடுத்து தொடர்ச்சியாக பயங்கரவாத அமைப்புகளைச் சார்ந்தோர் தேசியப் புலனாய்வு அமைப்பால் கோவையிலிருந்து கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் தொடர்ச்சியாக நடந்து வரும் முதியோர்கள் கொலை, மறுபுறம் கோவில் சிலைகள் சேதம். இதற்கிடையில் மனதை அதிர வைக்கும் அளவிற்கு பயங்கரவாத அமைப்பினரின் புழக்கம் என கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளை மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து மக்கள் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. தொழில் வளமும் கல்வி வளமும் நிறைந்து செழித்தோங்க…

Read More

இந்தியாவில் அடுத்தடுத்து நடைபெறும் விமான சேவைகளில் ஏற்படும் கோளாறுகளால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்த 12-ம் தேதி ஆமதாபாத்தில் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியது. அதனை தொடர்ந்து கேதர்நாத்தில் பக்தர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 7 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்கிய சவுதியா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஹஜ் பயணிகளை ஏற்றி வந்த விமானம் தரையிறங்கியது. அப்போது விமானத்தில் இடதுபுற சக்கரத்தில் இருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது. விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, 250 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் டெல்லியில் இருந்து லே விமான நிலையத்திற்கு இன்று காலை 180 பயணிகளுடன் இண்டிகோவின் 6இ 2006 என்ற விமானம் புறப்பட்டுச் சென்றது. லே விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. பின்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு மீண்டும்…

Read More