Author: Editor TN Talks
நீலகிரி மாவட்டம் உதகைக்கு கடந்த 20-ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யப் பிரியா தனது கணவர் கார்த்திக் ராஜா மற்றும் உறவினர்கள், குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவை முடித்துவிட்டு உதகையில் இருந்து குன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் வருவதற்காக காரில் குடும்பத்துடன் வந்துள்ளனர். அப்போது காரில் திடீரென பிரேக் பிடிக்காமல் போனதால் கார் ஓட்டுநர் சாலையோரத்தில் இருந்த பக்கவாட்டில் இருந்த பாறை மீது மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் பல் மருத்துவர் திவ்ய பிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தில் காயமடைந்த இருவரையும் போலீசார் மீட்டு, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்த மருத்துவர் திவ்யப்பிரியாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தியும், பல் மருத்துவருமான திவ்யப்பிரியாவுக்கு திருமணம் ஆகி மூன்று…
தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் அடுத்த 2 நாட்கள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இம்மாதம் தொடக்கத்தில் தொடங்கிய அக்னி வெயிலானது, வரும் 28-ம் தேதி வரை தொடர்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் சூட்டை தணிக்கும் விதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைந்து தற்போது பருவமழையின் தாக்கம் தொடங்கியுள்ளது. வழக்கமாக அடுத்த மாதம் தொடங்கும் பருவமழையானது இம்மாத இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் உருவாகும் என வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் மே 25,26 ஆகிய 2 நாட்கள் ஒரு சில மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்…
தமிழ்நாட்டில் பள்ளி குழந்தைகளுக்காக காலை உணவுத் திட்டம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. அதன் பிறகு ஊரகப் பகுதிகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் உள்ள 30,992 அரசு பள்ளிகளிலும், ஊரகப் பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 17.53 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும் 1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டது. பட்ஜெட்டில் அறிவித்த படி நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகனாகவும் ரசிகர்களால் போற்றப்படும் நடிகர் கமல்ஹாசன், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் Thug Life படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதால், படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் முழு தீவிரத்துடன் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கமல்ஹாசன் அளித்த ஒரு சமீபத்திய பேட்டியில், சினிமா பற்றிய அவரது கருத்துகள் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன. அவர் கூறியதாவது: “சினிமா வெறும் பொழுதுபோக்கு மாத்திரம் அல்ல, அது ஒரு சக்திவாய்ந்த ஊடகம். கதைகளின் மூலம் சமூகக் குறைகளைச் சுட்டிக்காட்டவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நான் எப்போதும் பாடுபடுகிறேன். இந்த பொறுப்பிலிருந்து நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். என்னுள் இருக்கும் அந்த தீ இன்னும் எரிகிறது; அது அணையும் வரை நான் நடித்துக்கொண்டே இருப்பேன்.” இவரின் இந்த உணர்ச்சிகரமான வார்த்தைகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தி, அவரின் சமூகப் பொறுப்பு மீதான அக்கறையை மீண்டும்…
சென்னை அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்த சகாய பிர்வீன் என்ற ஐ.டி நிறுவன அதிகாரி, மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், குடும்ப பிரச்னை காரணமாக தனது மனைவி மேரி மெர்சியை பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளார். மனைவியின் உறவினரான செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் ஆண்டனி ஸ்டாலின் தூண்டுதலின்படி, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுமதி, 2020ம் ஆண்டு தன்னையும் தனது குடும்பத்தினரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து, தனது தாய் பெயரில் உள்ள வீட்டின் சாவியை வலுக்கட்டாயமாக பறித்து மனைவியிடம் கொடுத்து கட்டபஞ்சாயத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். சாவியை ஒப்படைக்க மறுத்த போது, தன்னை மனைவி குடும்பத்தினர் முன் அடித்து, தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்தியதால், பெண் ஆய்வாளர் சுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரியிருந்தார். இந்த புகார் மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய…
போலியான ஆவணங்களை பயன்படுத்தி நிலத்தை அபகரித்தாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீதான வழக்கு விசாரணை வேறு நீதிபதிக்கு மாற்றப்பட்டதால், இன்று நடைப்பெறுதாக அறிவிக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டு பதிவு நடைமுறை நடத்தப்படாமல் வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்த சிட்கோவின் நிலத்தை தமிழக அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவி காஞ்சனாவின் பெயருக்கு மாற்றம் செய்துள்ளதாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணம் தயாரித்தல், ஏமாற்றுதல், கூட்டு சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியம் மற்றும் அவரின் மனைவி காஞ்சனா இருவர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019 ஆம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யபட்டது. இந்த…
பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கும், சுயேச்சை வேட்பாளர்களுக்கும் தேர்தலின் போது தேர்தல் ஆணையம் தான் சின்னத்தை ஒதுக்குகிறது. மேலும், 234 தொகுதிகளிலும் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடும் போது தேர்தல் ஆணையம் பொது சின்னம் வழங்குகிறது. அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தான் இருக்கிறது. சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், வரும் நவம்பர் மாதம் 11-ம் தேதி முதல் பொது சின்னம் கேட்டு விண்ணப்பிக்க, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், பொதுவான சின்னம் கேட்டு, விண்ணப்பிக்க தவெக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக தீவிர ஆலோசனையில் அக்கட்சி ஈடுபட்டுள்ளதாகவும், தவெகவுக்கு தனித்துவமாகவும், மக்கள் எளிதாக நினைவில் கொள்ளும் வகையிலும் சின்னத்தை பெறுவதில் கட்சியின் தலைவர் விஜய் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இலவச தரிசன டோக்கன்கள் இல்லாமல் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளனர். அதனால், வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள அறைகள் அனைத்தும் நிரம்பி அதற்கு வெளியே சுமார் ஏழு கிலோ மீட்டர் தொலைவு வரை பக்தர்கள் மிக நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் சுமார் 20 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையானை வழிபட முடியும் என்ற நிலை நிலவுகிறது. திருப்பதி மலையில் தங்கும் அறைகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால் ஏராளமான பக்தர்களுக்கு அறைகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது. வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை…
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த கண்டராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேதியராஜ். இவரது மகள் லாராக்கு இன்னும் திருமணம் நடைபெறவில்லை. நபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு 8 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேதியராஜ் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த வேதியராஜை பார்ப்பதற்காக அவரது மனைவி மற்றும் மகள் லாரா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று (22.05.2025) அதிகாலை சுமார் 5 மணியளவில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிவறைக்கு லாராவும், அவரது தாயும் சென்றனர். அங்கு லாரா மட்டும் கழிவறைக்குள் சென்ற நிலையில், அவரது தாய் வெளியில் நின்றுள்ளார். கழிவறைக்கு சென்ற லாரா அங்கேயே 3 மணி நேரம் இருந்துள்ளார். அப்போது தனக்குத்தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பின்னர் அந்த குழந்தையை கழிவறையின் கோப்பையில் தலை உள்ளே செல்லுமாறு அழுத்தியுள்ளார்.…
டாடா குழுமத்தின் LCC நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், செப்டம்பர் 2023-இல் தனது உள்நாட்டு விமான சேவைகளைத் தொடங்கியது. இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 111 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு ஆசிய நாடுகளுக்கு குறுகிய தூர சர்வதேச விமானங்களையும் இயக்குகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தென்னிந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் விமான சேவைகளைத் தொடங்கியுள்ளது. ஆனால் தென்னிந்தியாவின் 7வது பெரிய விமான நிலையமான கோயம்புத்தூருக்கு இன்னும் விமான சேவைகளைத் தொடங்கவில்லை. 100 மற்றும் அதற்கு மேற்பட்ட விமானங்களைக் கொண்ட இந்தியாவின் முதல் விமான நிறுவனத்திற்கான சாதனையையும் AIXகொண்டுள்ளது. ஆனால் இன்னும் கோயம்புத்தூருடன் இணைக்கப்படவில்லை. கோயம்புத்தூரில் உள்ள சங்கங்கள், உள்நாட்டு மற்றும் குறுகிய தூர சர்வதேச சேவைகளில், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரத்திற்கு சேவைகளைத் தொடங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸை பலமுறை கேட்டுக் கொண்டிருந்தன. கோயம்புத்தூரில் இருந்து சென்னை, ஹைதராபாத் மற்றும் பெங்களூருக்கு…