Author: Editor TN Talks

திருவண்ணாமலை மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத கட்டுமானங்களை கண்டறிந்து அகற்ற, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எந்த அனுமதியும் பெறாமல் 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள 1,535…

Read More

இலங்கை வன்னி தொகுதியின் முன்னாள் எம்.பி திலீபன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” 1990 ஆம் ஆண்டு இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டபோது இந்தியாவிற்கு அகதியாக வந்து விருதுநகர் அகதிகள் முகாமில் தங்கி இருந்தேன். பின்னர் 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று, அங்கு வன்னி தொகுதியில் போட்டியிட்டு வன்னி தொகுதியின் எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டு 2024 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தேன். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றபோது கொச்சி விமான நிலையத்தில் இந்திய பாஸ்போர்ட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கிற்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் ஜாமின் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அதனை விசாரித்த நீதிமன்றம் திருச்சி சிறப்பு அகதிகளின் முகாமில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது.…

Read More

மாநிலங்களவைத் தேர்தலுக்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது வேட்புமனு வை தாக்கல் செய்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களான திமுகவின் வில்சன், எம்.எம்.அப்துல்லா, சண்முகம், மதிமுகவின் வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் அடுத்த மாதம் 15-ந் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து வருகிற 19-ந் தேதி ஆறு இடங்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்காக திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கூட்டணி ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த ஒரு இடத்தில் கமல் போட்டியிடுவார் என்று மநீம செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேபோன்று அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த 2-ந் தேதி ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. வேட்புமனுக்களை…

Read More

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீசனிஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் செண்பக தியாகராஜர், அம்பாள் உள்ளிட்ட 5தேர்களை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த மே 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் இந்த ஆலயத்தில் ஸ்ரீசனிஸ்வர பகவான் அனுக்ரஹ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீசெண்பக தியாகராஜர் நேற்று நள்ளிரவு யதாஸ்தானத்திலிருந்து உன்மத்த நடனமாடி ஆலய பிரகாரங்களை வலம் வந்து நள்ளிரவு திருத்தேருக்கு எழுந்தருளினார். அதனை தொடர்ந்து அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீ செண்பக தியாகராஜர், ஸ்ரீ நீலோத்பலாம்பாள்…

Read More

மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் முழுமையாக தேர்வு எழுத முடியவில்லை எனக் கூறி, கடந்த மே 4 ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது. அன்றைய தினம் சென்னையில் பெய்த கடும் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் முறையாக தேர்வு எழுத முடியவில்லை எனக்கூறி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்களும், குன்றத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய 2 மாணவர்களும், கே கே நகர் பத்ம ஷேசாச்திரி 1 மாணவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். அந்த மனுக்களில், கடந்த மே 4 ம் தேதி நடந்த தேர்வை ரத்து…

Read More

கர்நாடகாவில் ஆர்சிபி அணி வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடந்த வெற்றி விழாவில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 13 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த பொதுநல வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட நிலையில், அரசு தரப்பை நீதிபதிகள் சரமாரியான கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். “மாநிலத்துக்காக விளையாடாத அணிக்கு, மாநில அரசு பெரும் விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய அவசியம் என்ன?” என்று சாடியுள்ளனர். ஆர்சிபி வெற்றியை அரசியலாக்கிய கர்நாடக அரசு, அடுத்தமுறை இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம் என்று சப்பைக்கட்டு கட்டிவிட்டுத் திரும்பியிருக்கிறது. ஆர்சிபி கர்நாடக அரசின் அணியா?  ஐபிஎல் தொடரில் இந்திய மாநிலங்களின் பெயர்களில் அணிகள் இருந்தாலும், அந்தந்த மாநிலங்களின் ரசிகர் படையை அவ்வணிகள் பெற்று வளர்ந்தாலும் உண்மையில் மாநில அரசுகளுக்கும் அவ்வணிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவை அணைத்தும் குறிப்பிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பெரும் தொழிலதிபர்களால் நடத்தப்படும் கிரிக்கெட் அணி ஆகும். இந்த அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல், கர்நாடகாவுக்கு இந்த சீசனின்…

Read More

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் தாக்கல் செய்த பொது நல மனு: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் அருகே சிவகளையில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் தனிநபர் ஒருவருக்கு கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இந்த குவாரியில் பாறைகளை வெடி வைத்து தகர்ப்பதால், அகழாய்வு பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட கல் குவாரிக்கு வழங்கப் பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந்தார். இந்த வழக்கு எஸ்.எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரிய கிளாட் அமர்வு முன் வியாழக் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், சிவகளை அகழாய்வு பகுதியில் கல்குவாரிக்கு வழங்கப் பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கல் குவாரியின் உரிமையாளர் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கருதினால் அதிகாரிகளிடம் மேல் முறையீடு மனு தாக்கல்…

Read More

கோவையில் விடுதி உரிமையாளர் வீட்டில் ரூபாய் 50 லட்சம் நகை, பணம் திருட்டு, வீட்டில் உள்ள அலங்கார வேலை செய்யும் தொழிலாளியே போலீசார் கைது செய்தனர். கோவை, குனியமுத்துவைச் சேர்ந்தவர் செல்லதுரை. இவர் சென்னை எழும்பூரில் சொந்தமாக மகளிர் விடுதி நடத்தி வருகிறார். இதற்காக அவர் சென்னையில் தங்கி உள்ளார். அவருடைய குடும்பத்தினர் குனியமுத்தூரில் வசித்து வருகிறார்கள், இந்நிலையில் சென்னை எழும்பூரைச் சேர்ந்த வீட்டு அலங்கார வேலை செய்யும் சுரேஷ் என்பவர் செல்லதுரைக்கு அறிமுகமானார். அவர் செல்லதுரையின் விடுதியில் சில அலங்கார வேலைகளை செய்தார். அது பிடித்துப் போனதால் செல்லதுரை சுரேஷை கோவை, குனியமுத்தூரில் உள்ள அவர் வீட்டில் சில வேலைகளை செய்யுமாறு கூறி உள்ளார். அதன்படி அவர் அவ்வப்போது குனியமுத்துக்கு வந்து செல்லதுரை வீட்டில் அலங்கார வேலை செய்து கொடுத்தார். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுரேஷ் பீரோவை திறந்து பார்த்தார். அதில் அதிக அளவில் பணம் மற்றும்…

Read More

இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் – சுகாதாரத்துறை தகவல் 2025-2026 ஆம் கல்வி ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ தேர்வு முடிவுகள் வரும் 14ம் தேதி வெளியாக உள்ள நிலையில், முன்கூட்டியே விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியாவதில் தாமதமாவதால் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் குறைவதைத் தவிர்க்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை விளக்கமளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025-26-ம் கல்வியாண்டுக்கான தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீடு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான (இளங்கலை மருத்துவ படிப்புகள்) இடப்பங்கீட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் கடந்த ஆண்டு வரை நீட் தேர்வு முடிவு வெளியான பிறகு தான் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் வெளியிட்டு பெறப்பட்டன. பல்வேறு காரணங்களால் நீட் தேர்வு முடிவு…

Read More

கோவையில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட ஐந்து காவலர்களை பணியிட நீக்கம் செய்து காவல் ஆணையர் சரவண சுந்தர் நடவடிக்கை எடுத்தார். கோவை மாநகரில் பணியாற்றும் காவல் துறையினர் சிலர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இது தொடர்பாக காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் காவலர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் வடவள்ளி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வரும் மணிகண்டன், செல்வபுரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் வடிவேலு, போத்தனூர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணி புரியும் கபூர், காவலர்கள் வினோத், வெரைட்டிகள் சாலை காவல் நிலைய காவலர் மகாராஜன் ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதை அடுத்து இவர்கள் ஐந்து பேரையும் பணியிடை நீக்கம் செய்ய மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். இவர்கள் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட…

Read More