Author: Editor TN Talks

வீட்டுக்கு மின் இணைப்பு மறுக்கப்பட்டதை எதிர்த்து கவிஞர் கண்ணதாசனின் மகன் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசனின் மனைவி பார்வதி அம்மாளுக்கு, சென்னை மாடம்பாக்கம் பகுதியில் ஒரு ஏக்கர் 72 செண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தனது வாரிசுகளுக்கு அவர் பிரித்து கொடுத்திருந்தார். இந்த நிலத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்துக்கு அருகில் காலியாக இருந்த பகுதியை கவிஞர் கண்ணதாசன் குடும்பத்தினர் பாதையாக பயன்படுத்தி வந்தனர். இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததால், கண்ணதாசனின் மகன்கள் தரப்பில் தொடர்பட்ட வழக்கில், துணை மின் நிலையம் பகுதியில் உள்ள நிலத்தை பாதையாக பயன்படுத்த அனுமதியளித்து தாம்பரம் நீதிமன்றம் கடந்த 2011 ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்நிலையில், தனக்கு சொந்தமான நிலத்தில்…

Read More

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், செய்திகளை முந்தித் தருகிறோம் என்ற பெயரில் பல தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் போர் நடைபெறும் இடங்களுக்குச் சென்று தகவல்களை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் இந்திய ராணுவத்தின் நகர்வுகள் குறித்த தகவல்கள் மிக எளிதாக எதிரிகளுக்கு சென்று சேர்கிறது. இதனை தடுப்பதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சகம் சார்பில் ஊடக நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் கீழ்வரும் தகவல்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.. 1, நம் நாட்டின் பாதுகாப்பின் நலனுக்காக, ராணுவம் மற்றும் இன்னபிற பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து செய்தி வெளியிடும்போது அனைத்து ஊடகங்கள், செய்தி நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் ​​மிகுந்த பொறுப்புடன் செயல்படவும், தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். 2. குறிப்பாக: ராணுவ நடவடிக்கைகள் அல்லது நகர்வுகள் தொடர்பான “source based” தகவல்களை அடிப்படையாகக் கொண்ட நேரலை ஒளிபரப்பு, காட்சிகளைப் பரப்புதல் அல்லது…

Read More

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான போர்ச் சூழல் தீவிரமடைந்து வருகிறது. பயங்கரவாத மையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஏவுகணைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. இவை சரியா தவறா என்ற வாதங்களும் நாட்டுக்குள் பறந்து கொண்டிருக்கின்றன. உண்மையில், போர் முகத்தை விடவும் சமூக ஊடகங்கங்களில் போர் குறித்த ஆவேசம் கலவரமாய் வெடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ஏற்படும் பதற்றமே நமக்கிருக்கும் முக்கிய கடமையை அறிவுறுத்துகிறது. அது என்ன? மீண்டும் ஒருமுறை ‘பின்னணி’யைப் பார்ப்போம்…  காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரம் 22-ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்தான் இதன் ஆரம்பப் புள்ளி. அதில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். கணவனை இழந்த பெண், அவரது சடலத்திற்கு அருகே மனமுடைந்து அமர்ந்திருந்த அந்நிகழ்வின் புகைப்படம் சமூக ஊடகங்களில் தீ போல் பரவியது. பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தாக்குதல்தான் இது என்று இந்திய உளவுத்துறை தெரிவித்தது. அந்தப் புகைப்படமும் அதன் பின்னணியான நிகழ்வும் நாட்டு மக்களைக்…

Read More

ஐபிஎல் 18-வது சீசன் கிரிக்கெட் போட்டிகள் கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களுர் ராயல் சேலஞ்சர்ஸ், மும்பை இந்தியன்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய 10 அணிகள் இந்த முறை களமிறங்கின. நாட்டின் 13 நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதுவரை நடந்து முடிந்த தொடர்களில் மும்பை, சென்னை ஆகிய அணிகள் ஆதிக்கம் செலுத்தின. இந்தமுறை எப்படியும் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பெங்களுர், குஜராத், டெல்லி ஆகிய அணிகள் களத்தில் தங்கள் பலத்தை நிரூபித்து வந்தன. அதற்கு ஏற்றார்போல் புள்ளிப்பட்டியலில் இந்த மூன்று அணிகள் தான் முதலிடத்தில் இருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக கடந்த ஏப்ரல் 22-ந் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டம்…

Read More