Author: Editor TN Talks

டாஸ்மாக் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் இன்னும் எத்தனை, எத்தனை மர்மங்கள் அம்பலப்பட போகிறதோ? இன்னும் யார், யார் தலை உருளப் போகிறதோ? என்று தெரியவில்லை. இந்தமுறை அடிபடும் பெயர் இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன்…. அரசியல், அமலாக்கத்துறை… இதில் எப்படி விக்னேஷ் சிவன் சம்பந்தப்பட்டுள்ளார் என்று கேள்வி எழுகிறதா?.. இந்த கட்டுரையை முழுமையாக வாசிக்கவும்… 2017 முதல் தற்போது வரை டாஸ்மாக் நிறுவனத்தில் ஏராளமான முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. இதனடிப்படையில் அமலாக்கத்துறையினர் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். 2 நாட்கள் நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. மார்ச் 13-ந் தேதி அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மதுபானங்களுக்கு பாட்டிலுக்கு…

Read More

தமிழ்நாட்டில் அக்னி வெயில் இன்னும் முடியவில்லை. வரும் 28-ம் தேதி வரை அக்னி வெயிலின் தாக்கம் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் பெங்களூருவில் நேற்று முன் தினம் (18.05.2025) இரவில் பெய்யத் தொடங்கிய மழையானது விடாமல் கொட்டித் தீர்த்தது. மறுநாள் காலை வரை கொட்டிய மழையால், தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. குறிப்பாக ஜெயநகர், ஜக்கசந்திரா, கோரமங்கலா உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. மழைநீர், வெள்ளம் மின்விநியோகம் பாதிப்பு என மக்கள் கடும் அவதி அடைந்தனர். மிக்கோ லே அவுட் பகுதியில் மின்சாரம் தாக்கி 63 வயது முதியவர், 12 வயது சிறுவன் ஆகியோர் உயிரிழந்தனர். வொயிட்பீல்டு பகுதியில் 35 வயது பெண்மணி சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார். தாழ்வான பகுதிகளில் இருந்த…

Read More

சென்னையின் தலைமை செயலகத்தில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் 527 கோடியே 84 இலட்சம் ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 527 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,978 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 207 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 வணிக வளாகங்களையும் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை வெளிவட்ட சாலையில் உள்ள மீஞ்சூர், வெள்ளனுர், வரதராஜபுரம், திருநாகேஸ்வரத்தில் 11.46 கோடி ரூபாய் செலவில் 4 உடற்பயிற்சி பூங்காக்கள் மற்றும் 3.20 கோடி ரூபாய் செலவில் தியாகராய நகரில் சோமசுந்தரம் விளையாட்டு மைதானம்…

Read More

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 3 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கர்நாடகாவில் கனமழையால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கெலவரப்பள்ளி அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில், தென்பெண்ணை ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை பாய்ந்தோடும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அத்தோடு கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைகு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து பிரதான ஷட்டர் வழியாக 2,243கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தரைப் பாலத்தை மூழ்கி தண்ணீர் செல்கிறது. இதனால் கே.ஆர்.பி அணைக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More

கோவை மாவட்டம் காந்திபுரத்தில் சாலையோரத்தில் இருந்த முதியவரை கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்த இருவரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் முன்பாக நேற்று(20.05.2025) இரவு சுமார் 65 வயது முதியவர் உணவருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த இளைஞர்கள் இரண்டு பேர், திடீரென முதியவரை கடுமையாக தாக்க தொடங்கியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிலர், இளைஞர்களை தடுக்க முயற்சித்தனர். அதனை கண்டுகொள்ளாமல் இளைஞர்கள் அந்த முதியவரை கற்களாலும், கையாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும் சிலர் இணைந்து துணிச்சலுடன் இளைஞர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தி தர்ம அடி கொடுத்தனர். அதே வேளையில் முதியவர் ரத்தம் சொட்ட சொட்ட அப்பகுதியில் ஓரமாக அமர வைக்கப்பட்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் இளைஞர்கள் இருவர் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த இரண்டு…

Read More

சென்னையில் அமைந்துள்ளா இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெறும் நிகழ்ச்சியில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். உயர்கல்வித் துறை சார்பில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 120 கோடியே 2 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்கள் போன்ற பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். நேரலையில் காண: https://youtube.com/live/YSkzrv236C0?feature=share மேலும் 207 கோடியே 82 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்படவுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

Read More

டாஸ்மாக் நிறுவனத்தில் ஊழல் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்து சோதனைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. அண்மையில் இரண்டு நாட்கள் நடைபெற்ற திடீர் சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஆவணங்களைத் தளமாகக் கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, மார்ச் மாதத்தில் டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்தப்பட்ட சோதனையின்போது, 1,000 கோடி ரூபாய் அளவிலான முறைகேடு நடந்திருக்கலாம் என அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. இதையும் படிக்க: இதையும் படிக்க: தென்மேற்கு பருவமழை.. .24 மணி நேரமும் அவசர மையங்கள் … முதலமைச்சர் அறிவுறுத்தல்!! இதன் தொடர்ச்சியாக, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், பிஆர்ஒ மேகநாதன், தொழிலதிபர்கள் தேவக்குமார், ரித்தீஷ் ஆகியோரின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் கடந்த வாரம் சோதனை நடைபெற்றது. விசாகன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று அவரிடம் இரண்டு நாட்கள் விசாரணை நடத்தப்பட்டதுடன், அவரது மொபைல் மற்றும் லேப்டாப்பில் இருந்த…

Read More

கடன் வாங்கி விட்டு பின்னர் அதை அடைப்பதற்குள் படும்பாடு இருக்கிறதே… அது வார்த்தைகளால் சொல்லி விட முடியாத ஒன்று. கடன் பிரச்சினை தீர தேய்பிறை அஷ்டமியில் காலபைரவரை வணங்க வேண்டும். செவ்வாய்கிழமை தேய்பிறை அஷ்டமி திதி வருவது சிறப்பான நாள் இன்றைய தினம் பைரவருக்கு அரளிப்பூ மாலை சாற்றி வழிபட தீராத கடனும் தீரும் என்பது நம்பிக்கை. வாழும் வாழ்க்கை நிம்மதியாக இருக்க வேண்டும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். ஆனால் இந்த காலத்திற்கு கடன் இல்லாத வாழ்க்கையே சிறப்பான வாழ்க்கை என்று சொல்லும் அளவிற்கு உள்ளது. தொழில் செய்வதாக இருந்தாலும் சரி, குடும்ப முன்னேற்றத்திற்காக இருந்தாலும் கடன் வாங்காமல் எதையும் செய்ய முடியாத நிலை. இன்று நடுத்தர மக்கள் மட்டுமின்றி பெரும் பணக்காரர்கள் வரை வாட்டி வதைப்பது கடன் பிரச்னைதான். பணப்பிரச்னை என்பது எல்லோருக்கும் ஏதாவது ஒரு காலகட்டத்தில் வந்து விடுகிறது. ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் சுமை ஏற்பட்டு…

Read More

செவ்வாய்க்கிழமை ஒரு புனிதமான கிழமையாகும். மங்களவாரம் என அழைக்கப்படும் இந்த நாளைத்தான் பலரும் விரதமிருக்க தேர்ந்தெடுக்கின்றனர். இந்தக் கிழமை முருகனுக்கும், அம்மனுக்கும் உகந்த கிழமையாகும். சொந்த வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த நாட்களில் விரதம் இருந்து வணங்கினால் பூமி யோகம் தேடி வரும் என்பது நம்பிக்கை. செவ்வாய்கிழமை எப்படி விரதம் இருக்க வேண்டும் என்று பார்க்கலாம். பூமாதேவியின் மைந்தன் மகாவிஷ்ணுவின் மனைவியான பூமாதேவியின் கர்ப்பத்தில் உதித்தவர் செவ்வாய் என புராணம் தெரிவிக்கிறது. பொறுமையின் இலக்கணமான பூமாதேவியின் ஆசியைப் பெற்றால் வாழ்வு சிறக்கும். சொந்தவீடு அமையவும், வீட்டுக்குத் தேவையான பொருட்கள் சேரவும் செவ்வாயை வழிபடலாம். செவ்வாய் வருவாய் என்று சொல்லுவார்கள். செவ்வாய்கிழமை அன்று மட்டும் நமது வேண்டுதலை எந்த தெய்வத்திடமும் வைத்தாலும் அந்த வேண்டுதலை உடனே நிறைவேற்றிக்கொடுக்கும். மங்களகாரகன் என்று அனைவராலும் போற்றப்படுவது செவ்வாய். வீரத்தின் நாயகன் செவ்வாய்க்கு உகந்த நாள் செவ்வாய்கிழமை. புனிதமான இந்த கிழமையைத்தான் பலரும் விரதமிருக்க…

Read More

தமிழ் சினிமாவில் உயரமான ஆக்சன் ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் விஷால். தயாரிப்பாளர் கிருஷ்ணா ரெட்டியின் மகனான விஷால், 2004-ம் ஆண்டு ‘செல்லமே’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ராஜ்கிரண், மீரா ஜாஸ்மின் உட்பட ஒரு நட்சத்திர பட்டாளமே சேர்ந்து நடித்திருந்த ‘சண்டக்கோழி’ திரைப்படம் அவரது திரை வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது எனலாம். இந்தப் படத்திற்கு பிறகு தான் அவர் ஆக்‌ஷன் ஹீரோ என்றும் அழைக்கப்பட்டார். தொடர்ந்து ‘திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்தியம்’ என ஆக்‌ஷன் கலந்த காதல் திரைப்படங்களில் நடித்து வந்த விஷால், ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் ஒரு சக்லேட் பையனாக நடித்திருந்தார். தொடர்ந்து அவன் -இவன் படத்தில் ஒரு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார். கிட்டத்தட்ட 23 படங்களுக்கும் மேல் நடித்துள்ள விஷால், ‘பூஜை, ஆம்பள’ ஆகிய திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். இவரது நடிப்பில் 2015-ம் ஆண்டு உருவான…

Read More