Author: Editor TN Talks
வரும் 16 ந் தேதி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக மாவட்ட வாரியாக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். பூத் கமிட்டி உறுப்பினர்கள் நியமிப்பது, நிர்வாகிகள் நியமனம் தொகுதியின் நிலைப்பாடு உள்ளிட்டவைகள் குறித்து 15 ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து வருகின்ற 16ஆம் தேதி பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊட்டியில் நாளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 127 வது மலர் கண்காட்சியை திறந்து வைக்கிறார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விழாவை முன்னிட்டு அரசு சார்பில் மலர்கண்காட்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதாலும் தற்போது வெயில் கடுமையாக சுட்டெரிப்பதாலும் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா செல்ல மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். இந்த நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் 127 வது மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி நாளை தொடங்கி, 25 ஆம் தேதி வரையிலும் 10 நாட்கள் நடைபெற இருக்கிறது. மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஐந்து நாள் பயணமாக ஊட்டி பயணம் மேற்கொண்டு இருக்கக்கூடிய நிலையில் நாளை மலர் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட இருக்கிறார்.
சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகளிடம் இருந்து மாமியாரின் ஜி.பே மூலம் பணம் பெற்று அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்த சிறை வார்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,200-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். சில நேரம் சிறை அதிகாரிகள் இவர்களுக்கு தேவையான போதைப் பொருட்கள் உட்பட சில பொருட்களை கைதிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சப்ளை செய்வதாக அடிக்கடி தகவல்கள் வெளியாகும். சிறையில் உள்ள கைதிகள் மூலம் மிக்சர், பிஸ்கெட், பன் உள்ளிட்ட திண்பண்டங்கள் தயாரிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சிறை வளாகத்தில் வைத்து கைதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேப் போல, சேலம்-ஏற்காடு மெயின் ரோட்டில் சிறை உள்ளதால், சிறைக்கு சொந்தமான ஒரு அறையில் வைத்து அந்த திண்பண்டங்கள் மக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கைதிகளுக்கு திண்பண்டங்கள் விற்பனை செய்யும் பணியை சேலம் சிறை வார்டன் சுப்பிரமணியம் என்பவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். இவ்வாறு விற்பனை…
’லவ் டுடே, டிராகன்’ பட ஹிட்டைத் தொடர்ந்து நடிகர் பிரதீப் ரங்கநாதன், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். குறைந்த பட்ஜெட்டில் அவர் நடிக்கும் படங்கள் 2கே கிட்ஸ்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளியது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பிரதீப் வளர்ந்து வருகிறார். அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”காதல் இன்சூரன்ஸ் கம்பெனி” மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ”டியூட்” போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் ’டியூட்’ படத்தில் பிரதீப் நடித்து வருகிறார். மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில், சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தான், டியூட் தலைப்பு தன்னுடையது என நடிகரும், இயக்குநருமான தேஜ் கூறியிருப்பது…
பொள்ளாச்சி பாலியல் குற்றவழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எடப்பாடிக்கு நீதிமன்றம் கொடுத்த பிறந்தநாள் பரிசு இது என நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் முதல் திருமணமான பெண்கள் வரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி தமிழ்நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மணிவண்ணன், அருளானந்தம், ஹேரோன் பால், பாபு, அருண்குமார் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இவர்களில் சிலர் அப்போதைய ஆட்சி காலத்தில் இருந்த அதிமுக நிர்வாகிகளின் நெருங்கிய தொடர்பு உடையவர்கள் என்பதால், காவல்துறையினர் வழக்கில் முழு ஈடுபாடு காட்டவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த வழக்கு சிபிஐ வசம் சென்ற நிலையில், பாதிக்கப்பட்ட 48 பெண்கள் தாமாக முன்வந்து வாக்குமூலம் அளித்தனர். விசாரணை தீவிரமடைந்த நிலையில், முக்கிய குற்றவாளிகளாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்…
கடந்த மாதம் 22-ம் தேதி பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமார் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா பதிலடி நடத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக விமான கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத செயல்களை செய்துவிட்டு தலைமறைவான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானும் இந்தியா மீது டிரோன் தாக்குதல் நடத்த, அதனை இந்திய ராணுவம் முறியடித்தது. தொடர்ந்து 4 நாட்கள் நடந்த இந்த தாக்குதலால் இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்த பாகிஸ்தான், உலக நாடுகளிடம் கடன் கேட்டது. தொடர்ந்து அமெரிக்கா இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதல் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப்…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் தரிசனத்திற்கான சிபாரிசு கடிதங்கள் நாளை, மே 15 முதல் வழக்கம்போல் மீண்டும் பெறப்படும் என ஆந்திர மாநில இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனம் ராம் நாராயண் ரெட்டி அறிவித்துள்ளார். கடந்த மே 1 முதல் ஜூன் 15 வரை, கோடை விடுமுறை காரணமாக, சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் சிபாரிசு கடிதங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. அந்த காலக்கட்டம் முடிவடையும் நிலையில், முந்தைய நடைமுறை மீண்டும் அமலுக்கு வருகிறது. தினமும் சுமார் 5,000 பேர் வரை முக்கியர் சிபாரிசு வழியாக தரிசனம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது. திருப்பதி கங்கையம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர் திருப்பதி ஏழுமலையானின் சகோதரியாக கருதப்படும் திருப்பதி கங்கையம்மன் அம்மன் கோவிலில், ஆண்டு தவிர்க்க முடியாத திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையும் படிக்க: பாகிஸ்தான் ராணுவ தளங்களில் இந்திய விமானப்படையின் தாக்குதல் நடத்திய இடங்களின் பட்டியல்! அதிகாலை…
பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மே 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்திய விமானப்படை பாகிஸ்தானின் முக்கிய ராணுவ விமான தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. தாக்கம் பெற்ற முக்கிய தளங்கள்: நூர் கான் விமான தளம் (ராவல்பிண்டி): கட்டிடம் ஒன்று தீவிர சேதம் அடைந்துள்ளது. சுக்குர் விமான தளம் (சிந்து): ஒரு கட்டிடம் சேதமடைந்துள்ளது. ரகிம் யார் கான் விமான தளம் (பஞ்சாப்): தாக்குதலுக்கு உள்ளானது. முசாப் விமான தளம் (சர்கோதா): ஓடுபாதையில் பாதிப்பு. சாபாஷ் ஜேக்கோபாபாத் விமான தளம் (வடக்கு சிந்து): கட்டிடம் சேதம். போலாரி விமான தளம் (தட்டா): தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பஸ்ரூர் மற்றும் சியால்கோட் விமான தளங்கள்: ரேடார் மையங்கள் மற்றும் ஆயுத கிடங்குகள் சேதமடைந்துள்ளன. இந்த தாக்குதல்களை உறுதிப்படுத்தும் செயற்கைக்கோள் படங்களை அமெரிக்காவை சேர்ந்த மெக்ஸார் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா…
நாமக்கல் மாவட்ட திமுகவில் அண்மைக்காலமாக கட்சி உள்கட்டமைப்பில் சில முக்கிய மாற்றங்கள், பதவி மாற்றங்கள், மற்றும் தலைமையிலான சீரமைப்புகள் நடந்து வருகின்றன. இதனால் முன்னணி இருவர் – முன்னாள் மத்திய இணை அமைச்சர் செ. காந்திச்செல்வன் மற்றும் தற்போதைய மாவட்ட செயலாளர் கே.ஆர்.என். ராஜேஸ்குமார் – இடையே அனுசரணை மற்றும் ஆதரவு மோதல் மையகிழிந்து வருகிறது. காந்திச்செல்வனின் பின்னடைவு மற்றும் முயற்சி: பத்தாண்டுகளுக்கு முன், மாவட்ட செயலாளராக இருந்த செ.காந்திச்செல்வன், தலைமை திடீரென பதவியில் இருந்து விலக்கியதையடுத்து மாவட்டம் கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டது. பின்னர், அவர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக குறுகிய காலத்திற்கு இருந்தாலும், அதிலிருந்தும் நீக்கப்பட்டார். இதனையடுத்து, அவர் கட்சி நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை குறைத்தார். அண்மையில், மாவட்டத்தை மூன்று பகுதிகளாக பிரிப்பது குறித்து தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், காந்திச்செல்வனுக்குப் புதிய வாய்ப்பு உருவாகலாம் என கூறப்படுகிறது. இதையும் படிக்க: புதிய தேர்தல் உத்திகளுடன் களம்…
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்பதை தீர்மானிப்பது தலைமையே. “வெற்றி பெறக்கூடியவர்களே வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள்; தகுதியான அனைவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். நீங்கள் (மாவட்டச் செயலாளர்கள்) வருங்கால அரசை உருவாக்க முக்கியப் பங்கு வகிக்கின்றீர்கள்” என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தன் தேர்தல் திட்டத்தை தெளிவுபடுத்தியுள்ளார். அதிமுக-பாஜக கூட்டணி, தமிழர் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எழுச்சி, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவையால் திமுக அரசு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அதனைத் தாண்டி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்குடன் ஸ்டாலின் தயாராகி வருகிறார். திமுகவின் முடிவுகள் முழுவதும், உளவுத்துறை மற்றும் பென் டீம் சர்வே அடிப்படையிலேயே அமைக்கப்படுகின்றன. ஸ்டாலின் நேரடியாக அவற்றைப் பார்க்கின்றார். கூடுதலாக சில தனியார் நிறுவனங்களின் கணிப்புகளும் மேற்கொள்ளப்படுகின்றன. உதாரணமாக, கொங்குநாடு பகுதியில் உள்ள 64 தொகுதிகளில், 2021ல் அதிமுக-பாஜக கூட்டணி 42 தொகுதிகளை கைப்பற்றியது; திமுக கூட்டணி 22…