Author: Editor TN Talks

கோடை வறட்சியின் காரணமாக உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை விட்டு வெளியேறிய தாய் யானை ஒன்று, திடீரென மயங்கி விழுந்து உடல்நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தாய் யானைக்கு வனத் துறையினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவை மருதமலை அடிவாரத்தில் பாரதியார் பல்கலைக் கழகத்தின் மேற்குப் பகுதியில் நேற்று ஒரு தாய் யானையும், அதன் குட்டியும் நீண்ட நேரம் அசையாமல் நின்று கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் வனத் துறைக்குத் தெரிவித்தனர். கோவை வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானைகளை கண்காணித்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தாய் யானை உடல்நலக் குறைவால் மயங்கி விழுந்தது. மயங்கி விழுந்த தாய் யானையின் உடலில் சிறிது நேரத்திற்குப் பின் அசைவு தெரியவே, அருகில் இருந்த குட்டி யானை பதற்றம் அடைந்தது. தனது தாயை எப்படியாவது ? எழுப்பி விட வேண்டும் என்ற தவிப்புடன், தனது…

Read More

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்று பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டமும் ஒன்று. பெண்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது இந்த திட்டம். ஒவ்வொரு ஆண்டும் இதற்காக சுமார் ரூ.1000கோடி வரை அரசு செலவிட்டு வருகிறது. முதன்முதலில் 2019-ம் ஆண்டு டெல்லியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. அதற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து 2021-ம் ஆண்டில் பஞ்சாப்பும், தமிழக அரசும் மகளிருக்கு பேருந்துக்கு இலவச பயணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதையடுத்து கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்களிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 8-வது ஆந்திராவும் இணைந்துள்ளது. ஆந்திரா மாநிலத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக பதவியேற்ற பிறகு, ஒவ்வொரு வாக்குறுதிகளையும் முதல்வர் சந்திரபாபு நாயுடு நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், ஆந்திரப் பிரதேசத்தில் பெண்கள் ஆகஸ்ட்…

Read More

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் வகை புற்றுநோய் இருப்பதாகவும், இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 82 வயதான ஜோ பைடன் கடந்த 2021-2025-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் 46-வது அதிபராக இருந்தவர். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக இருந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இந்த நிலையில் ஜோ பைடனுக்கு புரோஸ்டெட் வகை கேன்சர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்திருப்பதாக பைடனின் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த கேன்சர் மிகவும் தீவிரமாக இருக்கும் அதே வேளையில், இது ஹார்மோன் சென்சிடிவ்வாக இருப்பது தெரிகிறது. இதனால் கேன்சரை சற்று எளிதாகச்…

Read More

தமிழ்நாட்டில் ஜூலை மாதம் முதல் மின்கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை முதல் மின்கட்டணத்தை உயர்த்த ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டுதோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2022-ம் ஆண்டு பெரிய அளவில் உயர்த்தப்பட்டிருந்த நிலையில், 2023-ல் ஜூலை மாதம் 2.18 சதவீதம் அளவு உயர்த்தப்பட்டது. அதன்பின் 2024-ம் ஆண்டு ஜூலை மாதம் 4.8சதவீதம் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையில், ”கடன் உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்தாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்தவும், இதை செய்தால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவுகள் குறித்து ”முதலமைச்சர் ஆலோசனைக்கு பிறகே எடுக்கப்படும் எனவும், இது குறித்தான அறிவிப்பு ஜூலை 1-க்குள் அறிவிக்கப்படும்”…

Read More

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் இம்மாதம் 4ம் தேதி தொடங்கியது. அதுமுதல் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி கொளுத்தியது. குறிப்பாக சேலம், ஈரோடு, நாமக்கல் உட்பட பல மாவட்டங்களில் 103 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயில் அடித்து நகர்த்தியது. சென்னையிலும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்று (19.05.2025) விடிய விடிய மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில், பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், வேளச்சேரி, கோயம்பேடு,…

Read More

ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளிநாடுகளுக்கு விளக்கம் அளிக்க மத்திய அரசு அமைத்துள்ள தூதுக் குழுவில், எதிர்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் காங்கிரசின் மூத்த தலைவர் மற்றும் திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் இணைக்கப்பட்டுள்ளார். காங்கிரசின் பரிந்துரைகளை மீறி இவருக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மறுப்பு: இந்த குழுவுக்காக காங்கிரஸ் பரிந்துரைத்த மற்றொரு பெயர் – எம்.பி. கௌரவ் கோகோய் – மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, கோகோய்க்கும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கும் இடையே நெருக்கமான உறவுகள் உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பயணம் – அதிர்ச்சி குற்றச்சாட்டு: “கௌரவ் கோகோய் பாகிஸ்தான் சென்று, அந்நாட்டு உளவு அமைப்பின் அழைப்பின் பேரில் பயிற்சி பெற்றுள்ளார். இது நாட்டின் பாதுகாப்புக்கே பெரும் ஆபத்தாகும். இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன,” என ஹிமந்தா தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்திலிருந்து அவருக்கு நேரடியாக வந்த அழைப்பை அடிப்படையாகக் கொண்டே…

Read More

தமிழ்நாடு அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. திமுகவின் கூட்டணி உறுதியாக இருக்கிறது. அதிமுக மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதிலிருந்து விலகிய பாமக, திமுகவுடன் சேரப் போகிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வழக்கம்போல் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட வாய்ப்புள்ளது. இந்த அரசியல் வழமைகளில் புதிய கிளையாக முளைத்திருக்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மீது தற்போது அனைவரது கண்களும் குறிவைத்துள்ளதாக அரசியல் வட்டாரத்துக்குள் பேச்சு எடுபட்டிருக்கிறது.  தனித்து நிற்குமா தவெக தமிழ்நாடு அரசியல் களத்தில் கூட்டணி நிலைப்பாடு என்பது மிக முக்கியமானதாக ஆகிவிட்டது. நெடுங்காலமாக ஆட்சிக் கட்டில்களில் அமர்ந்திருக்கும் பெருங்கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவே இப்போதெல்லாம் கூட்டணி சேர்க்காமல் தேர்தலைச் சந்திப்பதில்லை. நாம் தமிழர் கட்சி மட்டும் இதற்கு முதலிலிருந்தே விதி விலக்காக இருக்கிறது. அதனால்தான் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்ற அந்தஸ்தைப் பெறவே அதற்கு இத்தனை தேர்தல்கள் தேவைப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் புதிதாக கட்சி தொடங்கி, இந்தத் தேர்தலை…

Read More

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் தோனிக்கு இருப்பது போன்ற ரசிகர் பட்டாளம் மற்ற வீரர்களுக்கு இருக்குமா என்றால் அது கேள்விக் குறி தான். இப்போது உள்ள சமூக வலைதளங்கள் மட்டுமின்றி, தோனி இந்திய அணிக்காக வெற்றி பெற்றுக் கொடுத்த கோப்பைகளே இதற்கு காரணம் எனக் கூறலாம். எத்தனையோ பேட்டர்கள், பவுலர்கள் வரலாம் ஆனால் ஒரு கேப்டனாக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு கிரேஸை வைத்திருகிறார் தோனி. இந்திய அணிக்காக 3 ஐ.சி.சி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் தோனி தான். அதேப் போல ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 5 கோப்பைகளை வென்றுக் கொடுத்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று விட்டாலும் தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். அதனாலேயே இவரது ரசிகர்கள் ஐபிஎல்லில் குவிவார்கள். குறிப்பாக இவர் களத்தில் இறங்கும் போது, ரசிகர்கள் எழுப்பும் ஆராவாரமும், விசில் சத்தமும் அப்பகுதியையே திருவிழா கோலம்…

Read More

புராணங்கள் மற்றும் வரலாற்று புதினங்களை தழுவி வரிசையாக படங்கள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகியுள்ளப் படம் கண்ணப்பா. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இப்படத்தையும் இயக்கியுள்ளார். கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். அவரோடு மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பீரித்தி முகுந்தன், மோகன் பாபு என பிற மொழி நடிகர்களும் நடித்துள்ளனர். அந்த வகையில் இப்படத்தில் அக்சய் நடித்துள்ள கதாபாத்திரம் குறித்த அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. ஜூன் 7-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் அக்சய் குமார் ’சிவன்’ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக படக்குழு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

Read More

கோவை, மருதமலை முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேக்கர்பாபு தெரிவித்துள்ளார். கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி, தற்போது உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை நிரந்தரமாக்குதல், மழைக்காலங்களில் பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், அங்கு இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையின் இருபுறமும் நிழல் தரும் கூரையுடன் கூடிய கண்ணாடி நடைபாதை அமைத்தல் ஆகிய திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. மேலும், இப்பகுதியில் நடைபெற்று வரும் மின் தூக்கி அமைக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு, ஜூலை மாதத்திற்குள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அமைச்சர் கூறினார். இதனைத் தொடர்ந்து, ஆசியாவிலேயே மிக உயரமான, 184 அடி உயரம் மற்றும் 80 – க்கு 60 சுற்றளவு கொண்ட முருகர் சிலை நிறுவப்பட உள்ள இடத்தையும் அமைச்சர் மற்றும் இந்து…

Read More