Author: Editor TN Talks

இந்தியாவைப் பின்பற்றி பாகிஸ்தானும் உலக நாடுகளுக்கு தனது நிலைப்பாட்டை விளக்குவதற்காக ஒரு குழவை அமைத்துள்ளது. இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இந்நிலையில், வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளிடம் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகள் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், பயங்கரவாதத்திற்கு எதிரான பூஜ்ய சகிப்புத் தன்மை கொள்கையை விளக்கவும் 7 எம்.பி.க்கள் அடங்கிய குழுவை இந்திய அரசு அமைத்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கையை பின்பற்றி பாகிஸ்தானும் அமைதிக்கான தனது நிலைப்பாட்டை விளக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் பிலவல் பூட்டோ சர்தாரி தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தைப் போல் சிம்லா ஒப்பந்தம் ரத்து, பிரதமர் நரேந்திர மோடி ஆதம்பூர் விமானப்…

Read More

சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவடைந்தது. தனுஷின் இட்லி கடை, சிம்புவின் 49வது திரைப்படம், சிவகார்த்திகேயனின் பராசக்தி உள்ளிட்ட படங்களை Dawn பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் துணை முதலமைச்சரும் ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளருமான உதயநிதிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிடும் பெரும்பாலான படங்களை, dawn பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் அமலாக்கத் துறையினர் கடந்த இரண்டு நாட்களாக சோதனையில் ஈடுபட்டனர். குறுகிய காலத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை ஆகாஷ் பாஸ்கரன் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் தயாரிப்பதற்கான முதலீடு எங்கிருந்து வந்தது என்ற கோணத்தில் சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நள்ளிரவு நிறைவடைந்தது. இதனிடையே…

Read More

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் 2 நாட்களாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடு புகார் தொடர்பாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 2 நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர். விசாகன் வீட்டிற்கு வெளியே கிழிந்த நிலையில் இருந்த WHATSAPP SCREENSHOTகளின் பிரிண்ட் அவுட்களையும் அமலாக்‍கத் துறையினர் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினர் வங்கிக் கணக்கு பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தனர். விசாகன் பயன்படுத்தும் மடிக்கணினியையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனிடையே டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு 2 நாட்கள் அழைத்துச் சென்று அமலாக்கத்துறையினர் விசாரித்தனர். நேற்று (மே 17) காலை 10:40 மணி முதல் இரவு 9:45 வரை 11 மணி நேரம் விசாகனிடம் விசாரணை நடைபெற்றது. இந்தநிலையில், விசாகன்…

Read More

கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த பயணிகள் 40 பேருக்கு மேல் காயம் அடைந்தனர். இன்று அதிகாலை 12.30 மணி அளவில் திருப்பூர் பகுதியில் இருந்து வால்பாறைக்கு அரசு பேருந்து கணேஷ் வயது 49 என்பவர் இயக்கி உள்ளார். இதில் நடத்துனர் சிவராஜ் உள்பட பேருந்தில் 72 பயணிகளை ஏற்றி வால்பாறை வந்து கொண்டு இருந்தது. அதிகாலை சுமார் 3 மணி அளவில் வால்பாறை அருகே உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதி 33 – வது கொண்டை ஊசி வளைவில் வரும் போது பேருந்து கட்டுப்பாட்டு இழந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வால்பாறை காவல் துறையினர், 108 ஆம்புலன்சில் உதவியுடன் அனைவரும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். இதில் ஓட்டுநர்…

Read More

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இன்று மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக காளை மாட்டை அழைத்து வந்த மதுரை சத்திரப்பட்டி அருகே உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி என்பவரை வலது மார்பில் மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் தொடர்ச்சியாக மாடுபிடி வீரர்களும் மாட்டின் உரிமையாளர்களும் உயிரிழந்து வருவது ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்திய வருவதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

மதுரை அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்ட காளைகளும் 400 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். இன்று (17.05.2025) மாலை 3 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக மதுரை உசிலம்பட்டி கிராமத்தை சேர்ந்தா பாட்டாளி என்பவர் தனது மாடை அழைத்து வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மாடு, உரிமையாளரான பாட்டாளியை முட்டியது. இதில் படுகாயமடைந்த அவர், 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Read More

தூத்துக்குடியில் சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் ஆம்னி வேன் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் தாலுகா வெள்ளாளன்விளை கிராமத்தில் உள்ள துாய பரிசுத்த கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கோவையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தனர். மோசஸ் என்பவர் வேனை ஓட்டி வந்துள்ளார். சாத்தான்குளம் தாலுகா மீரான்குளம் அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த சுற்றுச்சுவர் இல்லாத கிணற்றுக்குள் கவிழ்ந்தது. சுமார் 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் தண்ணீர் முழுமையாக இருந்ததால் வேனுக்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். இருப்பினும், வேனுக்குள் இருந்த ஷேனி கிருபாகரன், ஜெஸிட்டா எஸ்தர், ஹெர்சோம் ஆகியோர் காரில் இருந்து வெளியே வந்து கிணற்றுக்குள் தவித்தனர். அவர்களை கிராம மக்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். காருக்குள் சிக்கிய மோசஸ், அவரது மனைவி…

Read More

நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலை வைத்து விளம்பரம் செய்து போலி கிரிப்டோ கரன்ஸி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுப்பட்ட வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் இருவரை புதுச்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தற்போது நிறுவனத்தின் பங்கு இயகுநர் ஒருவரை சைபர் க்ரைம் போலீசார் கோவையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்களை கைது செய்த பின்னர், நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (66). ராணுவ வீரரான அவர் ஓய்வு பெற்ற பின் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். இவர் தனக்கு கிடைத்த ஒய்வூதியத்தை கிர்ப்டோ கரண்சி மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய முடிவெடுத்தார். அதன் படி கடந்த 2022 ஆம் ஆண்டு இணையத்தில் அஷ்பே என்கிற கிரிப்டோ கரன்சியில் முதலீடு…

Read More

இந்தியா சார்பில் ஐநா சபையில் பங்கேற்க அனுப்பப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியல் வெளியாகி உள்ளது. ரஷ்யாவில் நடக்கும் ஐநா கூட்டத்தில், இந்தக் குழுவினர் பங்கேற்று, ஆபரேஷன் சிந்துர் குறித்து விளக்க உள்ளனர். இந்த நிலையில் வெளியாகி இருக்கும் பெயர் பட்டியல், பாஜகவின் அரசியல் உத்தியோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. தலைவர்களின் எகோபித்த மரியாதை: பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர், நாட்டின் அரசியல் தலைவர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றிருக்கிறது. பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நடவடிக்கைக்கும் கட்சித் தலைவர்கள் பேதமின்றி இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். பயங்கரவாதிகளின் அத்துமீறலுக்கும், பதிலடி புரிந்து கொள்ளாமல் தாக்கி போர் சூழலை ஏற்படுத்திய பாகிஸ்தானின் அட்டூழியத்திற்கும் அரசியல் தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்தனர். ஆப்ரேஷன் சிந்தூர், பாகிஸ்தானை மிரள வைத்ததோ இல்லையோ, பாஜகவின் செயல்பாட்டால் தலைவர்களை ஒரே அணியில் திரள வைத்தது. ஏன்? எப்படி? ஆபரேஷன் சிந்தூர் வெற்றியடைந்து இருப்பதாக இந்தியா புல்லரித்துக்…

Read More

கோவைப்புதூர் பகுதியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கத்தின் பண்முக பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. கிருஷ்ணா ஆதித்யா கல்லூரியில் கடந்த 2-ம் தேதி தொடங்கிய இந்த பயிற்சி முகாம் 15 நாட்கள் நடைபெற்றது. தென் தமிழக அளவில் நடைபெற்ற இந்த முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. இதில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார். தொடர்ந்து தென் பாரத மக்கள் தொடர்பு துறை செயலாளர் பிரகாஷ் சிறப்புரை ஆற்றினார். அத்தோடு தென் தமிழக தென் தமிழக மாநில தலைவர் ஆடலரசன் உட்பட பலர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். கோவை கோட்ட செயலாளர் அஜய்கோஷ் தலைமையில் நடந்த இம்முகாமில், 900 பேர் இணைந்து பயிற்சி பெற்றனர். நிறைவு விழாவில், பயிற்சி முகாமில் பங்கேற்ற ஸ்வயம் சேவர்கள் கற்றுக் கொண்ட காராத்தே, சிலம்பம், யோகா, சமத்தான், விளையாட்டு, கோஷ் வாத்திய இசை போன்றவற்றை நிகழ்த்தி காட்டினர். முகாமினை மத்திய…

Read More