Author: Editor TN Talks
சென்னை மாநகராட்சியில் 1.80லட்சத்திற்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றனர். நாள்தோறும் இந்த தெருநாய்கள் சாலையில் விளையாடும் சிறுவர்கள் முதல் நடமாடும் முதியவர்கள் வரை கடித்து காயம் ஏற்படுத்துகிறது. இதனை தடுக்கும் பொருட்டு சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேப் போல சென்னை மாநகராட்சியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளாலும், நாள்தோறும் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். சாலையில் நடந்து செல்பவர்களை சில நேரம் முட்டி விடுவதாலும், சாலையின் குறுக்கே திடீரென செல்வதாலும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பழைய கிணறு தெருவை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவர் மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இரவு 8 மணிக்கு பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில்வீடு திரும்பும் போது, மணலி எம் ஜி ஆர் நகர் அருகில் சாலையில் குறுக்கே வந்த எருமை மாடு அவரது…
வட இந்தியாவின் மிகப்பெரிய தேசியப் பூங்காக்களில் ஒன்று ரந்தம்பூர் தேசிய பூங்கா. ராஜஸ்தான் மாநிலம் சவார் மாதோபூர் மாவட்டத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜெய்ப்பூரில் இருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது இந்த பூங்கா. ரந்தம்பூர் காடானது 1,334 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலானது. இங்கு அதிகளவு ராயல் பெங்கால் புலிகள் வசித்து வருவது தனிச்சிறப்பு. சுற்றுலாப் பயணிகளை காடுகளுக்குள் சஃபாரி அழைத்துச் செல்வர் வனத்துறையினர். இயற்கையின் அழகில் புலிகளை நேரடியாக பார்கும் அனுபவத்தை அனுபவிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு நாள்தோறும் வந்து செல்கின்றனர். அந்த வகையில் இந்தப் பூங்காவிற்கு வருகை தந்த நபர் ஒருவர் பூங்காவில் இருந்த புலிக் குட்டிகளை தொட்டு பார்த்து அவைகளுடன் விளையாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. ஒரு தேசியப் பூங்காவில் பயணிகளின் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்ற பல்வேறு கேள்விகளை எழுப்பியது இந்த சம்பவம். அதேப் போல புலிகளின்…
ஹரியானாவை சேர்ந்த தடகள வீரரான நீரஜ் சோப்ரா, ஈட்டி எறிதலில் சர்வதேச களத்தில் சிறந்து விளங்கி வருகிறார். 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டியில் 87.58மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. அதனை தொடர்ந்து சர்வதேச விளையாட்டுத் திருவிழாவுக்கான 33-வது ஒலிம்பிக் போட்டி கடந்தாண்டு பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் நடைபெற்றது. 206 நாடுகளை சேர்ந்த 10,700 வீரர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தனர். ஈட்டி எறிதலில் பங்கேற்றிருந்த இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, 89.45 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரரை, அவரும் தன்னுடைய மகன் தான் என்று நீரஜ் சோப்ராவின் தாய் கூறியிருந்தது அப்போது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அத்தோடு பெங்களூருவில் நடைபெற்ற ஈட்டி எறிதல் தொடருக்காக அவர் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீமை அழைத்திருந்தார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் விரருடன்…
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ட்ரைலர் தான் என்றும் இனிமேல் தான் படமே இருப்பதாகவும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்திற்கு சென்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் படை வீரர்களை சந்தித்து பாகிஸ்தான் உடனான தாக்குதலில் சிறப்பாக செயல்பட்டதற்கு பாராரட்டு தெரிவித்தார். பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், இந்தியா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் 14 கோடி ரூபாய் நிதி அளித்துள்ளதாக குற்றம்சாட்டினார். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை முழுமையாக அழிக்கும் வரை இந்தியா ஓயாது என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச செலாவணி நிதியம் கொடுத்த நிதியை பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் வழங்கி உள்ளதாகவும், நிதி கொடுப்பதை பரிசீலனை செய்து ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்திய ராணுவ வீரர்களின் கண்காணிப்பின் கீழ் நமது எல்லைகள் பாதுகாப்பாக உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை…
முறைகேடு வழக்கு தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த மார்ச் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுக் கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. இந்த சோதனையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மற்றும் திமுக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அமலாக்கத் துறை தொடர்ந்து விசாரணை நடத்த முழு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, விசாகன் மற்றும் அவரது குடும்பத்தினரின் வங்கி கணக்கு பரிவர்த்தனை தொடர்பான விவரங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக…
பாகிஸ்தான் உடனான ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுடனான வர்த்தக உறவை முழுமையாக புறக்கணிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். பஹல்காம் சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. இதில், பாகிஸ்தான் சேதங்களை சந்தித்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ராணுவமும் எதிர்த்தாக்குதல் நடத்தியது. இருப்பினும், பாகிஸ்தானின் தாக்குதல்களை இந்திய ராணுவம் முறியடித்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் பயன்படுத்தி ஆயுதங்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜான் வழங்கியது தெரியவந்தது. இதையடுத்து துருக்கி மற்றும் அஜர்பைஜானுக்கு கண்டனங்கள் எழுந்தது. இந்தநிலையில், பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை கண்டித்து துருக்கி, அஜர்பைஜான் நாடுகளை முழுமையாக புறக்கணிப்பதாக இந்திய வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர். 24க்கும் மேற்பட்ட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த வணிகத் தலைவர்கள் டெல்லியில் கூடி இந்த விவகாரம் குறித்து இறுதி முடிவை எடுத்தனர். கூட்டத்திற்கு பிறகு பேசிய அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீன் கண்டேல்வால், துருக்கி…
தமிழ்த் திரையுலகம் உலகிற்கு அளித்த கொடை என்று ஒரு பட்டியலிட்டால் சிவாஜி, இளையராஜா என்ற வரிசையில் கட்டாயம் இடம்பெறும் தகுதி படைத்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் மண்ணின் அசலான நகைச்சுவையை திரையில் லாவகமாக கடத்தியதில் வடிவேலுக்கு இணையென யாரையும் சொல்ல முடியாது. ஆபாச வசனங்கள், இரட்டை அர்த்த வசனங்கள், உடல்ரீதியாக ஒருவரை ஏளனம் செய்வது, மாற்றுத்திறனாளிகளை குறை சொல்வது போன்ற அபத்தங்கள் ஏதுமின்றி தன்னை தாழ்த்தி பிறரை சிரிக்கச் செய்யும் பாணியில் தனித்துவமானவர் வடிவேலு. குடும்பத்துடன் வயது வித்தியாசமின்றி அவரது நகைச்சுவைக்கு சிரிக்க முடியும். நம் வாழ்வின் அபத்தங்களை நகைச்சுவையாக மாற்றுவதில் தான் வடிவேலுவின் மேதமை அடங்கி இருக்கிறது. வெறும் நகைச்சுவை நடிகர் மட்டுமல்லாது குணசித்திர கதாபாத்திரங்களிலும் நம்மில் ஒருவராக வலம் வரும் நடிப்பாற்றல் கொண்டவர். தமிழ் திரையுலகம் பேச ஆரம்பித்த காலத்தில் கதாநாயகர்கள் என்றால் நன்றாக பாடத்தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இப்போதைய கதாநாயகர்களில் எத்தனை பேரால் சிறந்த முறையில் பாட…
பொள்ளாச்சி பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மூலம் இழப்பீடு வழங்கப்பட்ட விவரங்கள் தெரிய வந்து உள்ளன. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்களில் இருவர் தற்போது இழப்பீடு பெற விண்ணப்பித்து உள்ளனர். முன்னதாக, இந்த வழக்கில் குற்றவாளிகள் அபகரித்த தங்க நகைகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், நீதிமன்றம் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் 85 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, ஒவ்வொரு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. முதல் பெண்ணுக்கு 2 லட்சம், இரண்டாவது பெண்ணுக்கு 15 லட்சம், மூன்றாவது பெண்ணுக்கு 10 லட்சம், நான்காவது பெண்ணுக்கு 10 லட்சம், ஐந்தாவது பெண்ணுக்கு 8 லட்சம், ஏழாவது பெண்ணுக்கு 15 லட்சம், எட்டாவது பெண்ணுக்கு 25 லட்சம் என இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்களில்…
பாலிவுட் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட ராஜ் நிதிமோருவுடன் சமந்தா காதலில் இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் பரவிய நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்து சமந்தாவின் மேனேஜர் விளக்கமளித்துள்ளார். நாட்டையே சலசலப்புக்கு உள்ளாக்கிய வெப் சீரிஸில் ஒன்று ஃபேமிலி மேன். இதனை இயக்கவர்களில் ஒருவர் ராஜ் நிதிமோரு. இந்த சீரிஸில் நடித்தப் போது தான் சமந்தா-நாக சைதன்யா பிரிவும் ஏற்பட்டது. சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான சமந்தா தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு பிறகு போதிய வாய்ப்புகள் கிடைக்காத போதிலும், தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார். தந்தையின் மறைவு, மயோசிடிஸ் தொற்று ஆகியவற்றில் இருந்து மீண்டு வந்த சமந்தாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது கிசுகிசுகள் வெளியாவது நின்றபாடில்லை. முதன்முறையாக தயாரிப்பில் களமிறங்கியுள்ள சமந்தா தெலுங்கில் ’சுபம்’ என்ற படத்தை தயாரித்துள்ளார்.…
ராமயாணம், மகாபாரத புராணங்களை நம்மால் நவீன சமூகத்திற்கு ஏற்ப மாற்ற முடியுமா?? அதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்றால்.?? சாதிய படிநிலையை முற்றும் முழுவதுமாக நீக்கிவிட்டு கொடுக்க முடிந்தால் ஒரு வேளை அது சரியாக வரும் என்று தோன்றுகிறது. ஆனால் அதற்கு பார்ப்பனியம் உடன்படுமா ???!என்றாலும் இடைநிலை சாதிகள் அதில் உடன்படுமா?? என்கிற சந்தேகம் இருக்கதான் செய்கிறது. சோற்றுக்கு வழி இல்லையென்றாலும் தங்களை இன்னும் சத்ரியர்கள் என்று பெருமைப் பட்டுக்கொண்டு இருக்கும் சமூகத்திடம் அதை எதிர்பார்க்க முடியுமா ?? சரி விஷயத்திற்கு வருவோம்.. மணிரத்தினம் இயக்கிய “தளபதி “மகாபாரதத்தை மருவி எடுக்கப்பட்டது படம் . கர்ணன் – துரியோதனனை மையப்படுத்தி இருந்தாலும் குந்தியின் கதாபாத்திரத்தை முதன்மை கருவாக இயக்குநர் மணிரத்னம் உலவவிட்டு இருப்பார். இன்னும் சொல்லப்போனால் தாய் செண்டிமெண்டில் உச்சம்! தளபதி படத்தின் ஸ்ரீவித்யா பாத்திரம். அதைப்போல ஓர் பிரதி எடுத்து மகாபாரதத்தின் முதன்மை பாத்திரமான கிருஷ்ணன் பாத்திரத்தை கொண்டு வந்துள்ளார் இயக்குநர்…