Author: Editor TN Talks

தமிழ்நாட்டில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் கூட்டணி அமைக்கிறது. அறிவிப்பு வெளியாகி, திமுகவுக்கு எதிரான இரண்டாம் அணியை உருவாக்கும் முயற்சி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் ஏற்கனவே பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் இருவரும் இருக்கிறார்கள். இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலை இந்த கூட்டணி ஒற்றுமையோடு எதிர்கொள்ளுமா? இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி என மூவரும் பாஜக கூடாரத்தில் இணைகிறார்களா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன. அதிமுக – பாஜக கூட்டணி கடந்த 1998-ம் நாடாளுமன்ற தேர்தலில் இருந்து, அதிமுகவும் பாஜகவும் பலமுறை கூட்டணி அமைத்திருக்கின்றன. இடையில் பலமுறை பிரிந்து, இணைந்திருக்கின்றன. கடைசியாக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரிந்ததற்கு பின்னால், அதிமுகவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், பாஜகவை அதிமுகவினரும் சரமாரியாக சாடிவந்தனர். இதனால் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி அமைய வாய்ப்பே இல்லை கருதப்பட்டது. ஆனால் ஒரேடியாக அதை மாற்றி விடும்படி, கடந்த ஏப்ரல் 10-ம் தேதி…

Read More

கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15-ம் தேதி வரை தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித் தேர்வர்கள், 272 சிறை கைதிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகளை இன்று (16.05.2025) பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதன்படி இத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 8 லட்சத்து 17 ஆயிரத்து 261 பேர். இது கிட்டத்தட்ட 93.80சதவீதம் ஆகும். தனித்தேர்வர்களில் சிதம்பரம் அருகே 70 வயது முதியவர் ஒருவரும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். சிதம்பரம் அருகே கோவிலாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் 70 வயதான கோதண்டராமன். இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் 1965-ம்…

Read More

தமிழ்நாட்டில் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தை சேர்ந்த பெரும் தொழிலதிபர் பாஸ்கரனின் மகன் இந்த ஆகாஷ் பாஸ்கரன். துணை முதலமைச்சர் உதயநிதியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில் ’கவின்கேர்’ குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் 3-வது மகள் தாரணியை திருமணம் செய்து கொண்டார் ஆகாஷ் பாஸ்கரன். இவர்களது திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் முன்நின்று நடத்தி வைத்தனர். அத்தோடு இந்த திருமணத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், தனுஷ், நயன்தாரா, விக்னேஷ் சிவன், ஆர்.ரவிக்குமார், சிவகார்த்திகேயன், அட்லி, அனிரூத் உள்ளிட்ட திரைபிரபலங்களும் கலந்து கொண்டனர். சினிமாவில் தனது முத்திரையை பதிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ’DAWN PICTURES’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் ஆகாஷ்…

Read More

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் சப்ளை செய்த விவகாரத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த ஏ.ஆர்.டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைத்து இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஏ ஆர் டெய்ரி ஃபுட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரணைக்கு வந்த போது, நெய் மட்டுமல்லாமல் அனைத்து பால் பொருட்கள் உற்பத்திக்கான உரிமத்தை நிறுத்தி வைத்ததன் மூலம் நிறுவனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிறுவனத்தின் தரப்பில் வாதிடப்பட்டது.…

Read More

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நடிகர் சூரி. ’வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் பரோட்டா சாப்பிடும் காமெடியில் நடித்து பிரபலமடைந்ததால் பரோட்டா சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். தொடர்ந்து ஒரு சில வருடங்களில் அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நகைச்சுவையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார். பின்பு யாரும் எதிர்பாரா வண்ணம் விடுதலை படத்தில் ஹிரோவாக அறிமுகமானார் நடிகர் சூரி. விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தில் இவரது நடிப்பு மிகவும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ’கொட்டுக் காளி, கருடன்’ போன்ற படங்களிலும் ஹீரோவாக கலக்கினார். அதன்பின் ’விலங்கு’ வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் ’மாமன்’ படத்தில் இணைந்தார் சூரி. ராஜ்கிரண், ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடிப்பில் குடும்ப உறவுகளின் மதிப்பை உணர்த்தும் விதமாக உருவான இப்படம் இன்று (16.05.2025)வெளியானது. இப்படம் வெற்றி படமாக வேண்டி மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில்…

Read More

திரைப்பட எடிட்டர் மோகனுக்கு இரண்டு மகன்கள். அவரின் இரண்டாவது மகன் ரவி மோகன். மூத்த மகன் இயக்குநர் மோகன் ராஜா. மோகன் ரவி என்ற இயற்பெயர் கொண்டவர், லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்து விட்டு சிறிது நாட்கள், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் உதவியாளராக பயிற்சி எடுத்துக் கொண்டார். தனது தந்தையின் தயாரிப்பில் 2003-ம் ஆண்டு ஜூன் மாதம் 21-ம் தேதி வெளியான ”ஜெயம்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார் ரவி. அவரது அண்ணனான மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சினிமா உலகில் ஜெயம் ரவி என புதிய பெயரோடு வலம் வரத் தொடங்கினார். இரண்டாவாதாக அசின், நதியா உடன் இணைந்து ரவி நடித்து ”சன் ஆஃப் மகாலட்சுமி” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதுவும் அவரது அண்ணன் மோகன் ராஜா இயக்கியது தான். வெங்கட்பிரபு எப்படி தனது தம்பி பிரேம் ஜி-யை…

Read More

ஆப்பிள் ஐ-போன்களை தயாரிக்கும் பணி இந்தியாவில் விரைவுப்படுத்தப்பட்டு உள்ளது. எஸ் அண்ட் பி குளோபல் நடத்திய ஆய்வின் படி, கடந்தாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதியாகும் ஐ-போன்கள் எண்ணிக்கை 3.1 மில்லியன் யூனிட்களாக உள்ளன. அதே ஆண்டில் அமெரிக்காவில் ஐ-போன் விற்பனை 75.9 மில்லியன் யூனிட்களாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜூன் காலாண்டில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஐ-போன்களில் பெரும்பாலானவை இந்தியாவில் தயாரிக்கப்படுபவையாக இருக்கும் என அப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இந்தியாவில் ஐ-போன்களை தயாரித்து வரும் நிலையில், அதனை நிறுத்தும்படி ஆப்பிள் நிறுவனத்திடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். இதனை விமர்சித்து நடிகையும், பாஜக எம்.பி-யுமான கங்கனா ரனாவத் எக்ஸ் தளத்தில் தனது கருத்தை பதிவிட்டிருந்தார். பின்னர் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அறிவுறுத்தலின்படி அதை நீக்கியதாக கங்கனா தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதிகளவில்…

Read More

ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிகளை தேர்வு செய்வதற்கான போட்டி ஒவ்வொரு இடங்களில் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான 72-வது உலக அழகிப் போட்டி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 7-ம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. நாட்டில் புதிய மாநிலமாக தோன்றிய தெலுங்கானா கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது உலக அழகி போட்டி நடைபெற உள்ளதால் உலக அளவில் தெலங்கானா, சுற்றுலா துறையுடன் இணைந்து இந்த போட்டிகளை மிஸ் வேர்ல்ட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு முன்பு மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடைபெற்றுள்ளது. 3-வது முறையாக இந்தியாவில் தெலங்கானாவில் இப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் ’மிஸ் இந்தியா நந்தினி குப்தா’ இப்போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் தெலங்கானாவில் ‘யுனெஸ்கோ’வால் உலக பாரம்பரிய…

Read More

நடிகர் சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடலை நீக்கப்பட்டு விட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கை உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது. நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள, ‘கோவிந்தா… கோவிந்தா…’ பாடல், திருப்பதி வெங்கடேஸ்வராவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஜி.டி.பாலாஜி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், திரைப்படத்துக்கு தணிக்கை குழு, யு/ஏ சான்றை நிறுத்தி வைக்க வேண்டும். இந்த பாடலுடன் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். பாடலை நீக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, படத் தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில்,…

Read More

டாஸ்மாக் நிறுவன அதிகாரிகள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை.. சென்னையில் உள்ள டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளின் பல்வேறு வீடுகளில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணாசாலை, பெசண்ட் நகர், தேனாம்பேட்டை, சேத்துப்பட்டு, தியாகராய நகர், சூளைமேடு, மணப்பாக்கம் ஆகிய இடங்களில் அமைந்துள்ள டாஸ்மாக் நிறுவன உயர் அதிகாரிகளின் வீடுகளை குறிவைத்து அமலாக்கத்துறையினர் இந்த சோதனையை நடத்தி வருகின்றனர். சென்னை மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் உள்ள டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகன் வீட்டில் காலை முதலே அமலாக்கத்துறையினர் சோதனையை தொடங்கி உள்ளனர். பாதுகாப்பு கருதி மத்திய ரிசர்வ் போலீஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று சென்னை சூளைமேடு கல்யாணபுரத்தில் உள்ள எஸ்என்ஜே மதுபான நிறுவன அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளை சோதனை மேற்கொண்டு ஆவணங்களை திரட்டி வருகின்றனர். டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கடந்த 10 ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்புத்துறையில் தொடரப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள், சென்னை…

Read More