Author: Editor web3
ரஷ்யா-உக்ரைன் போர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அமெரிக்கா தலைமையில் போர் முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து 20 புள்ளிகள் கொண்ட அமைதி திட்டத்தை தயாரித்துள்ளார். இதில் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் முக்கியமானதாக உள்ளது. ரஷ்யா இந்த திட்டத்தை ஏற்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்தநிலையில், உக்ரைன் தலைநகரான கீவ் நகரம் நேற்று காலையில் ரஷ்யாவின் பெரும் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானது. இதனால் நகரின் முக்கிய பகுதியில் பலத்த குண்டு வெடிப்பு ஒலியுடன் மக்கள் எழுந்தனர். உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்புகள் இந்த ஏவுகணைகளை தடுத்தாலும் சில பாதிப்புகளை எதிர்கொண்டதாக தெரிகிறது. மேலும் இந்த தாக்குதலில் சுமார் 500 ட்ரோன்கள், 40 ஏவுகணைகளை கொண்டு தாக்கியதில் கீவ் நகரம் நிலைகுலைந்துள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 2,600 குடியிருப்பு கட்டிடங்கள், 300க்கும் மேற்பட்ட பள்ளிகள், சமூக சேவை கட்டிடங்கள்…
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டு, நினைவிடம் அமைக்கப்பட்டது. இதனிடையே விஜயகாந்த் நினைவு தினத்தை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது. இந்த நிலையில், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்தில் காலை முதலே தேமுதிக தொண்டர்களும், ரசிகர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “கேப்டன்’ விஜயகாந்த் நினைவுநாள்; ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் – தே.மு.தி.க. நிறுவனர்…
ஜம்மு-காஷ்மீரில் செய்தியாளர் சந்திப்பின் போது உருது மொழியில் பேசக் கூறிய பத்திரிகையாளரிடம் மெஹபூபா முஃப்தி கோபமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவி மெஹபூபா முஃப்தி, ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர் ஒருவர் உருது மொழியில் பேசுமாறு கோரிக்கை விடுத்தார். இதனால் கோபமடைந்த மெஹபூபா, ”உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேண்டுமெனில் நீங்கள் மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா..? என்று கேள்வி எழுப்பினார். மேலும், தாய்மொழிக்கு மரியாதை அளிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறிய அவர், காஷ்மீரி மொழிக்கும் உரிய மரியாதையை கொடுங்கள்” என்று வலியுறுத்தினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் மோசமான உணவுப் பழக்கம் மற்றும் மோசமான உணவு முறை காரணமாக புரதக் குறைபாடு ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. புரதம் நமது உடலுக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும். இது தசைகளை வலுப்படுத்துகிறது, ஆற்றலை அதிகரிக்கிறது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் உடல் சரியாக செயல்பட உதவுகிறது. புரதக் குறைபாடு பலவீனம், சோர்வு, முடி மற்றும் நகப் பிரச்சினைகள், தசை பலவீனம் மற்றும் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், சரியான புரதம் நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், இந்த குறைபாட்டை விரைவாக நிவர்த்தி செய்யலாம். கோழி இறைச்சி புரதத்தின் சிறந்த மூலமாகக் கருதப்படுகிறது. இதில் அதிக புரதம் உள்ளது, இது தசையை வளர்க்கவும் உடலை வலுப்படுத்தவும் உதவுகிறது. நீங்கள் அசைவ உணவு உண்பவராக இருந்தால், உங்கள் உணவில் கோழியைச் சேர்ப்பதைக் கவனியுங்கள். இது சோர்வைக் குறைத்து ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது.…
2026 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை மற்றும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை BCCI அறிவித்துள்ளது. இந்த அணிக்கு ஆயுஷ் மத்ரே கேப்டனாகவும், விஹான் மல்ஹோத்ரா துணை கேப்டனாகவும் இருப்பார்கள். வைபவ் சூர்யவன்ஷியும் அணியில் இடம் பெற்றுள்ளார். ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து நடத்தும் இந்த தொடரில், 50 ஓவர் வடிவத்தில் ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை நடைபெறும். அதற்கு முன், இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடும். இந்த ஒருநாள் தொடர் ஜனவரி 3 முதல் ஜனவரி 7 வரை நடைபெறும். இந்திய அணி: ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் குண்டு, ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ்.சிங், கனிஷ்க் சவுகான், கிலன் ஏ கியன், டி. உத்தவ் மோகன். தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய…
இந்தியா-இலங்கை மகளிர் அணிகள் மோதும் 4-வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடக்கிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனேவே நடந்து முடிந்துள்ள 3 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 3-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதாவது, இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இதனால் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என இந்திய அணி கைப்பற்றியது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 4வது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தன் பயணத்தை தொடர முயற்சிக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் தொடரை இழந்துள்ள இலங்கை அணி ஆறுதல் வெற்றி…
இந்திய வீடுகளில் பருப்பு மற்றும் அரிசி ஒரு பொதுவான உணவுப் பொருளாகும். இருப்பினும், பருப்பு மற்றும் அரிசி சுவையானது மட்டுமல்ல, நமது ஆரோக்கியத்தில் எந்த எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்தாத ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? அறிவியல் ஆராய்ச்சி, பருப்பு மற்றும் அரிசி நமது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும், நமது அன்றாட பணிகளைச் செய்ய வலிமையை அளிக்கின்றன என்றும் காட்டுகிறது. பருப்பு மற்றும் அரிசி இணைந்து புரதத்தால் நிரம்பிய ஒரு சூப்பர்ஃபுடை உருவாக்குகிறது மற்றும் தசை வலிமை மற்றும் செரிமானத்தில் நன்மை பயக்கும். பருப்பு மற்றும் அரிசி ஆகியவை சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் உணவாகும், இது அவர்களுக்கு தேவையான புரதத்தை வழங்குகிறது. பருப்பு மற்றும் அரிசி இரண்டும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை, ஆனால் ஒன்றாகச் சேர்த்து உட்கொள்ளும்போது, அவை ஒரு சூப்பர்ஃபுடாகச் செயல்படுகின்றன. ஒன்றாகச் சாப்பிடும்போது, அவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்றுக்கொன்று குறைபாடுகளை நிரப்புகின்றன,…
தைவானைத் தாக்கிய 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், தைபேயில் உள்ள வானளாவிய கட்டிடங்களை உலுக்கியது. தைவான் வானிலை ஆய்வு மையம் நிலநடுக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளது. மத்திய வானிலை ஆய்வு மையத்தின்படி, தைவானின் வடகிழக்கு கடற்கரை நகரமான இலெனில் சனிக்கிழமை இரவு 11:05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இலென் கவுண்டி ஹாலுக்கு கிழக்கே 32.3 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. https://x.com/BaateinStockKi/status/2004941705997701568? நிலநடுக்கத்தால் இரவு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை. தைவானில் கடந்த புதன்கிழமையும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவான நிலையில் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் அச்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும். இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 17 பேர் இறந்தனர், மேலும் இது நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியது.
பீகாரின் ஜமுஸ் மாவட்டத்தில் ஜசிடியில் இருந்து ஜாஜா நோக்கி சென்றுக்கொண்டிருந்த சரக்கு ரயில் பருவா ஆற்றுப்பாலத்தின் மீது தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. மொத்தம் 42 பெட்டிகளில் 19 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிய நிலையில், 10 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்ததால் பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ரயில் விபத்து பற்றிய செய்தி கிடைத்ததும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. ஜமுய் மாவட்டத்திற்கு அருகிலுள்ள ஜசிதி-ஜாஜா பிரதான ரயில் பாதையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சனிக்கிழமை இரவு 12 மணியளவில் சிமென்ட் ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தைத் தொடர்ந்து இந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இருப்பினும், இருள் சூழ்ந்ததால், சேதம் குறித்த முழுமையான மதிப்பீடு இன்னும் முடிக்கப்படவில்லை. ஜஜா…
MGNREGA குறித்து ஒரு உறுதியான திட்டத்தை உருவாக்கி, நாடு தழுவிய, ஒரு வெகுஜன இயக்கத்தை உருவாக்குவது நமது கூட்டுப் பொறுப்பு என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழு கூட்டம் என்று கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், ,ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் குடிமக்களின் உரிமைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில், எதிர்காலத்திற்காக ஆலோசிக்கவும், உத்திகளை வகுக்கவுமே கூடியுள்ளோம். சமீபத்திய நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் MGNREGA-வை ஒழிப்பதன் மூலம், மோடி அரசாங்கம் கோடிக்கணக்கான கணக்கான ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை ஆதரவற்றவர்களாக ஆக்கியுள்ளது. ஏழைகளின் வயிற்றில் உதைத்ததோடு, மோடி அரசாங்கம் அவர்களின் முதுகில் குத்தியுள்ளது. MGNREGA-வை ஒழிப்பது தேசப்பிதா மகாத்மா காந்தியை அவமதிப்பதாகும். அரசியலமைப்பின் 41வது பிரிவின்…