Author: editor5

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனைகள் நடைபெற்றன. இந்த நடவடிக்கை காஷ்மீரில் தீவிரவாத சக்திகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரின் பிரபல லால் பஜார் பகுதி, ஜம்மு நகரம் மற்றும் தெற்கு காஷ்மீரின் ஷோபியான் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனை நடைபெற்ற இடங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள், மின்னணு சாதனங்கள், தொலைபேசிகள் மற்றும் பிற ஆதாரப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சோதனைகள் தொடர்பான விசாரணை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் 2024 பிப்ரவரியில் ஜமாத்-இ-இஸ்லாமியை சட்டவிரோத அமைப்பாக அறிவித்து, தடையை மேலும்…

Read More

தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், பண்ருட்டி எம்.எல்.ஏ மோகன் மீண்டும் இபிஎஸ் அணிக்கு சென்றுள்ளனர். தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் அமைச்சர் பதவி கிடைக்காத ஏமாற்றத்தில், எஸ்.பி. வேலுமணி அணிக்கு வலுவான ஆதரவு அளித்து வந்த இரு அதிமுக எம்எல்‌ஏக்கள் மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி (இபிஎஸ்) தரப்பில் இணைந்துள்ள சம்பவம், கட்சியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு தொகுதி எம்எல்‌ஏ சுகுமார் மற்றும் பண்ருட்டி தொகுதி எம்எல்‌ஏ மோகன் ஆகியோர் சென்னையில் இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். இதேபோல் காங்கேயம் அதிமுக எம்.எல்.ஏ நடராஜனும், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ திலீபனும் எடப்பாடி பழனிசாமி அணிக்கு சென்றுள்ளனர். இந்த நகர்வு சிவி சண்முகம் – எஸ்.பி. வேலுமணி அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் அதிமுக இரு அணிகளாகப் பிளவுபட்டது. இபிஎஸ்…

Read More

விளாத்திகுளத்தில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் விரைவான நீதி வழங்கப்பட்டுள்ளது. விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பிளஸ் டூ மாணவி, கடந்த மார்ச் 10, 2026 அன்று மாலை பொதுத் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்த நிலையில், இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோது, கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு, அவரது சடலம் மறுநாள் காலையில் குமாரபுரம் காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்த உடனேயே உள்ளூர் மக்கள், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். சடலத்தைப் பெற…

Read More

மேகதாது வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான தமிழக அரசின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. காவிரி நீர் பங்கீடு பிரச்னையில் முக்கியத்துவம் வாய்ந்த மேகதாது அணை திட்டத்துக்கு தொடர்புடைய திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க முடியாது என கடந்த நவம்பர் 13, 2025 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு (நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், விபுல் எம். பஞ்சோலி) இந்த மனுவை தங்கள் அறையிலேயே (Chamber) பரிசீலித்து, மறுஆய்வுக்கு போதுமான அடிப்படை இல்லை என முடிவு செய்தது. இதன்மூலம் கர்நாடக அரசு திட்ட அறிக்கை தயாரிக்கும் பாதை தொடரும் என்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக, 2025 நவம்பர் 13-ம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கை…

Read More

விளாத்திகுளம் மாணவி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் தர்ம முனிஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமம், மார்ச் 10, 2026 அன்று மாலை அதிர்ச்சியூட்டும் சம்பவத்தால் உலுக்கப்பட்டது. பிளஸ் டூ பொதுத் தேர்வை சிறப்பாக எழுதி முடித்த 17 வயது மாணவி, இயற்கை உபாதைக்காக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றபோது, கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, பின்னர் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மறுநாள் காலையில் மாணவியின் சடலம் அருகிலுள்ள குமாரபுரம் காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டது. சடலத்தின் நிலை கண்ட உள்ளூர் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் குற்றவாளியை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். சடலத்தைப் பெற மறுத்து சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். போலீஸார் சமாதானப் பேச்சு நடத்தி நிலைமையை கட்டுக்குள்…

Read More

ஆட்சி மாறியுள்ளதே தவிர அவலங்கள் அப்படியே தான் தொடர்கின்றன என்று நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடியுள்ளார். தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசின் மீது கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார். கோவையில் சமீபத்தில் நடந்த 10 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதன் ரணம் ஆறுவதற்கு முன்பே விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மற்றொரு 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ள சம்பவம் மிகுந்த கவலையளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “கோவை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்தக் கொடூரத்தின் வலி இன்னும் மக்களின் மனதில் பசுமையாக உள்ளது. ஆனால், அதற்குள் விழுப்புரத்தில் இன்னொரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட சிறுமி முழு உடல் மற்றும் மன நலத்துடன் விரைவில் குணமடைய வேண்டும். இந்தக் கொடூரத்தை…

Read More

தமிழ்நாட்டில் திமுக அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். ஒடிசா தின விழாவை முன்னிட்டு, சென்னையில் வசிக்கும் ஒடிசா மக்களின் முக்கிய அமைப்பான ‘தி உத்கல் அசோசியேஷன் மெட்ராஸ்’ சார்பில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் கலையரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய பள்ளிக்கல்வி துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ஜனநாயகத்தின் அடிப்படையில் மக்களே மையப் பங்கு வகிப்பவர்கள் என வலியுறுத்தினார். “தங்களை யார் ஆள வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்கிறார்கள். பாஜகவின் வெற்றிக்குப் பின்னால் மக்களின் பேராதரவு உள்ளது” என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் திமுக அரசின் மக்களுக்கு எதிரான செயல்பாடுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், அதனால் ஏற்பட்ட விரக்தியில் பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வருவதாகவும் விமர்சித்தார். கல்வித் துறை சார்ந்த…

Read More

சிங்கப்பெண் அதிரடிப்படை பல் இல்லாத அமைப்பாக இருப்பதாக ஆங்கில ஊடகங்கள் விமர்சித்துள்ளன என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல் நிலவரங்கள், சட்டம் ஒழுங்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் தனது கருத்துகளை வலியுறுத்தினார். தூத்துக்குடி தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சரான ஸ்ரீநாத், தூத்துக்குடியை துறைமுக நகரமாக மாற்றுவோம் என வாக்குறுதி அளித்துள்ளதாகக் குறிப்பிட்ட தமிழிசை, “முதலில் தங்கள் தொகுதியின் நிலவரம், மக்களின் அன்றாட பிரச்னைகள் ஆகியவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தொகுதி பிரச்னைகளை அறியாமல் பெரிய வாக்குறுதிகளை அளிப்பது பொருத்தமற்றது” என்றார். மக்கள் இத்தகைய அரசியல் நடவடிக்கைகளை விழிப்புணர்வுடன் கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார். விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு…

Read More

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை வரும் 27ம் தேதி தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கிறார். தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஒரு முக்கிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ (Singappen Special Force – SSF) என்ற பெயரில் புதிய சிறப்பு போலீஸ் அணி உருவாக்கப்பட்டு, ஏற்கெனவே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தப் படை மூலம் பொது இடங்களில் பெண்கள் பயமின்றி நடமாடும் சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கமாகும். முதலமைச்சர் பொறுப்பேற்ற உடனேயே பெண்கள் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்டு இந்தப் படையை அமைக்கப் போவதாக விஜய் அறிவித்தார். அந்த அறிவிப்பு வெகு விரைவில் நடைமுறைக்கு வந்தது. படையின் முதல் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (IG) பவானீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். அவரே ‘சிங்கப்பெண்’ என்ற பெயரைப் பரிந்துரை செய்ததாகவும், முதலமைச்சர் அதை ஏற்றுக்கொண்டு அவருக்கு தலைமைப் பொறுப்பு வழங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read More